கேட்டுக்கோடி உறுமி மேளம், போட்டுக்கோடி கோபதாளம் (Uncle & jungle)
பட்டிக்காடா பட்டணமா? திரைப்படத்தில் இடம் பெற்றது இந்த பாடல், கவியரசு கண்ணதாஸின் மற்றுமொரு அருமையான படைப்பு. மேற்கத்திய நாகரிகமா? கீழைத்தேச நாகரீகமா? எது சிறப்பானது என்பதை சொல்லவருவது இந்த படத்தின் மையப்புள்ளி. இந்த பாடலில் வரும் ஆங்கில வரிகள் ஜெயலலிதாவின் சொந்தவரிகள் மற்றவை அனைத்தும் கவியரசுவுக்குரியது. மேற்கத்தைய இசைக்கருவிகள், எமது கிராமிய இசைக்கருவிகள் கொண்டு விஸ்வநாதன் உருவாக்கிய துள்ளல் இசை நம்மை அசரவைக்கின்றது. உங்கள் இரசனைக்காக எனது நண்பன் கிறிஸ்டி ரெவ்வல் தனது முக நூலிலே பதிவு செய்திருந்த, கலையக வீடியோவையும் உங்களுக்காக மீண்டும் பதிவு செய்கின்றேன்.
இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் Legend இசைக்கலைஞர்கள்,நாம் அனைவரும் தினமும் கேட்கும்
MSV அய்யாவின் ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்களை, வாசித்த அற்புத கலைஞர்கள். " அந்த கால கட்ட இசைக்குழுவின் முக்கிய அம்சங்கள் "
1.இசை குழுவின் தலைவர் அடுத்து பாடப்போகும் பாடலை அறிவிப்பார்.
2. நமக்கு வேண்டப்பட்ட பாடல்களை துண்டுசீட்டு மூலம்,கொடுத்து கேட்கலாம்.
3.இசைக்கலைஞர்கள் அனைவரும் அருகருகே அமர்ந்து,கலந்துரையாடி பாடல்களை வாசிப்பார்கள்.
4. ஒரு கட்டத்தில் இசைக்கலைஞர்கள் தங்கள் வாத்தியத்தை, தனித்தனியாகவும்,அதன் பின் கூட்டாகவும் வாசிப்பார் கள். இதை பார்க்கவும் கேட்கவும் மிகவும் அற்புதமாய் இருக்கும்.
5.விழாக்குழுவினர்,ஒருகட்டத்தில் இசைக்கலைஞர்களை தனித்தனியாக,ஒவ்வொருவராக அறிமுகபடுத்தி,சிறப்பாக
மரியாதையை செய்வார்கள்.
இப்போது வரும் சினிமாப்பாடல்கள் ஒன்று இரண்டைத்தவிர மிகுதி அத்தனையும் உயிரோட்டம் இல்லாமல் இருக்கின்றது. அதற்கு நாமும் ஒரு காரணம், எமது இளைஞர் இளம் தலைமுறகளுக்கு உயர்வான இரசனை தன்மையை நாம் கற்றுக்கொடுக்க மறந்துவிட்டோம். இதை நான் என் அனுபவாயிலாக காண்கின்றேன். எனது பிள்ளைகள் காதில் எதையோ ஒன்றை மாட்டிக்கொண்டு, தலையை ஆட்டி இரசிக்கின்றார்கள். அவைகளில் சில ஓலுமா மாலுமா என்ற கண்றாவி தமிழ் பாடல், அனுருத்தின் காக்காவலிப்பு பாடல்கள் இவைதான் இவர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கின்றது. காலக்கொடுமை இது என்று சொல்வதைவிட வேறு என்ன இருக்கின்றது? அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக