வியாழன், 17 மே, 2018

பாட்டும் பதமும் 47 பூணை அல்ல புலிதான்


பூணை அல்ல புலிதான் என்று போகப்போக காட்டுகின்றேன்.

இசை அது வெறும் கலை அல்ல. கவலை தீர்க்கும் அருமருந்து. மனதில் துக்கம் ஆழமாயிருக்கும் பொழுதெல்லாம் இசை மெல்லிய சுகம் தருகின்றது, கவலையை இலகுவாக்கின்றது. மனித மனம் சந்தோசத்தில் மிதக்கும் போது, இசை கூத்தடிக்கின்றது. இசை வார்த்தகளில் சொல்லமுடியா பரவசத்தை அளிக்கின்றது. சிலவேளையில் வார்த்தைகளில் வெளிவரா உணர்வுகள், மெல்லிய இசையாக, பாடலாக மன‌தின் ஒரு மூலையில் ஒட்டிக்கொள்கின்றது.  வார்த்தைகள் வீரியம் இழக்கின்றபோது, இசை மெல்ல பிறக்கின்றது, அதனோடு பழைய ஞாபங்களும் தொத்திக்கொள்கின்றது. அதனால் தான் ஆங்கில கவிஞன் ஷெல்லி சொன்னான். Music, when soft voices die, Vibrates in the memory..... Rose leaves, when the rose is dead, Are heaped for the beloved's bed, வார்த்தைகள் மெளனிக்கும் பொது இசை பிறக்கின்றது. ரோஜாக்கள் மரணிக்கும் போது அது காதலர்களின் படுக்கையை நிறைக்கின்றது. இசை நம்பிக்கை தரும் ஒரு ஜீவ அமிர்தம், மந்திர பிரணவம், அந்த இசையோடு கவிஞனின் சொல்லும், வார்த்தைகளும் ஒன்றாக பயணிக்கும் போது,  சொல்லாத கதைகள் சொல்லும், துள்ளாத மனமும் துள்ளும், அது இன்பதேனையும் வெல்லும், நாணல் என்ற வெறும் புல்லைக்கூட புல்லாங்குழல் போல வேதம் ஓதவைக்க கவிஞன் கண்ணதாசன் ஒருவன் மூலமே முடியும். ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது, காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை  என்று வாழ்வில் அமைதி தேவை என்றால் ஆற்றங்கரை நாணலைப்போல வாழ்க்கையை நகர்த்தவேண்டும், 


                                                         வாழ்வில் வேதனைகள் சோதனைகள் வரும் போது அவற்றை எதிர்த்து நின்று விட்டுக்கொடுக்கும் இடத்தில் விட்டு க்கொடுத்தும், எதிர்த்து நிற்கும் வேளை துணிவாக எதிர்கொள்ள வேண்டும். ஓடுபவனை துரத்தி ஓடு! நீற்பவனை எதிர்த்து நில்! இதுவே கண்ணதாசனின் கவித்தத்துவம். எப்பொழுதும்  எல்லோருக்கும் வளை ந்து கொடுத்தால் நாம் இறுதியில் உடைந்து போவோம்! எந்த நாளும், எல்லோருக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் வளைந்து கொடுக்க வேண் டிய அவசியம் இல்லை. நாணலைப்போல் வளைவதுதான் சட்டமாகுமா? அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா? என்று கேள்வி கேட்டும் கவிஞர்,  நான் ஒரு கைபார்க்கின்றேன், நேரம் வரும் கேட்கின் றேன், பூணை அல்ல புலிதான் என்று போகப்போக காட்டுகின்றேன்.


                                                        நாணலைப்போல வளைந்து கொடுத்தாலும், தலைகுணியாமல் வாழவேண்டும் என்பதையும் கவிஞரே சொல்லிவை த்தார். பெண்கள் தலைகுணிந்து நடக்கவேண்டிய அவசியமே இல்லை! பணிவாக பண்பாக அன்பாக நடந்தாலே அதுவே போதும்.  பெண்கள் தலை நிமிர்ந்து, ஆணுக்குப்பெண் சரிசமனாக வாழவேண்டும், பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக, புரட்சிப்பெண்ணாக பெண்கள் வாழவே ண்டும். வணங்கி வளையும் நாணல் நீ வளைவது போல், தலை குணிவதி ல்லை.  பார்க்கும் கண்கள் இரசிக்கவேண்டும் பாவை உலகம் மதிக்கவே ண்டும் என்று பெண் வர்க்கத்திற்காக துணிவாக குரல் கொடுக்கும் கவிஞன். 


                                         நாணல் என்ற ஒரு சிறு புல்லான, ஒரு சொல்லாலே எத்தனை கருத்தாளம் மிக்க விளக்கத்தை கொடுக்க எனது ஆசான் கண்ணதாசனைவிட வேறு யாரால் முடியும்? சொல்லுங்கள்!  அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...