வெள்ளி, 18 மே, 2018

பாட்டும் பதமும் 48 தாமரைக்கண்ணங்கள்,


"தாமரைக்கண்ணங்கள், தேன் மலர் கிண்ணங்கள்"   பேசாலைதாஸ்

                                              இந்த பாடலை நான் கேட்கும்பொழுதெல்லாம், இது கண்ண தாஸனின் பாடல் தான் என்று எண் ணினேன். வரிகள் அப்படி! கன்னங்கள், கிண்ணங்கள், வண்ணங்கள், எண்ண ங்கள் என்று சொற்கள் சிந்து நடைப யில்கின்றன, அதேபோல சந்தித்தேன், சிந்தித்தேன்,மன்னித்தேன், கன்னித் தேன் என்று சரளமாக சொற்கள் பாடலில் துள்ளி குதிக்கும் போது இது கட்டாயம், என் தாஸன், கண்ணதாஸனின் பாடலா கத்தேன் இருக்கும் என்று சிந்தித்தேன். ஆனால் எழுதியது வாலி என்றவுடன் என் மனதுக்குள் ஏனோ ஒரு வலி! யார் எழுதி னால் என்ன? பாடல் இரசிக்கத்தக்கதாக உள்ளதே! உண்மையில் ஆண்டவன் ஆண்கள் பக்கம் தான்! பெண்களை, அழகாக, மென்மையாக, இதமாக,  அன் பாக, எழிலாக , ஒரு இயற்கையின் சீதன மாக பெண்ணைப்படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆண்களைவிட பெண்கள் தான் சிறந்தவர்கள். இந்த உலகமே அழகுப்பெண்களின் கைவசம்! 

                                                             நான் சொல்வது மேலை நாட்டுக்கு நன்றாகப் பொருந்தும்.  கீழைத்தேசங்களில் நாம் என்ன செய்கின்றோம்? பெண் என்று பாராமல், அவர்களுக்கு அநியாயாம் செய்கின்றோம். கற்பு என்ற அர்த்தமற்ற கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு, அவர்களை பார்க் கின்றோம். கட்டிலில் சுகம் தரும் போதைப்பொருளாக, சமையல்காரி யாக, வெறும் பிள்ளை பிரசவிக்கும் இயந்திரமாகவே பார்க்கின்றோம். ஆண்களை விட பெண்கள், மனோவலிமையிலும், புத்திசாலித்தனத் திலும் சிறந்தவர்கள் என்பதை மறக்கின்றோம். இயற்கை நமக்கு தந்த அழகுச்சித்திரத்தை நாம் இரசிக்க மறக்கின்றோம். இரசிக்க தெரிந்தவ ந்தான் நல்ல ஆண்மகன், அவனால் தான் அன்பானவனாக, நல்ல கணவனாக, காதலானாக, அப்பாவாக, இறைவனுக்கு பிடித்தவனாக‌ இருக்கமுடியும் இது என் அனுபவ உண்மை. இரசியுங்கள், உங்கள் காதலியை,மனைவியை, மகளை, அம்மாவை, பாட்டியை, சகோதரியை இரசியுங்கள். அவர்களின் இதயத்து மென்மையை இரசியுங்கள்!


                                                                                       தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்! எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங் கிடும் எண்ணங்கள்..மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித்தேன். காதலன் தீண்டும்போது கைகளை மன் னித்தேன். இதோ பாருங்கள், தொடக்கூடாத இடத்தில், காதலன் தொட்ட போது, தண்டித்தேன் என்று சொல்லாமல் மன்னித்தேன் என்கின்றாள் எவ்வளவு உயர்வாக வாலி பெண்களை இரசிக்கின்றான். சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை உடை கொண்டு மூடும் போது ..உறங்குமோ உன்னழகு.. பெண்களின் அழகும் அன்பும் பாசமும் என்றுமே உறங்காது. இனி பாட்டைக்கேட்டு பெண்களை இரசியுங்கள் அன்பு செய்யுங்கள். அன்புடன் பேசாலைதாஸ்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...