"பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்"
பேசாலைதாஸ்
இந்த பாடல் திருவிளையாடல் திரைப்படத்தில் வருகின்றது. வாழ்க்கையின் உயர்ந்த தத்துவத்தை படிக்காத பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படி, மிக எளிதாக சொல்லக்கூடிய கைவண் ணம் கண்ணதாஸனுக்கு உண்டு. அதற்கு ஒரு உதாரணம் இந்த பாடல். இந்த உடல் வெறும் கூடுதான்! அதற்குள் அடங்கியுள்ள காதல், காமம், அன்பு, பாசம் இப்படியான எல்லாவகையான உணர்வுகளும், உடலுக்குள் உயிர் ஒட்டி இருக்கும் வரைதான், உயிர் பிரிந்துவிட்டால் உடல் வெறும் கூடுதானே!
காமத்தில் விழாதாவர்கள் யாருமே இல்லை. காமம் ஒரு மத்தாப்பூ போன்றது என்பது எனது அனுபவ உண்மை. மத்தா ப்பூ சீறி எரிகின்ற போது பார்க்க எவ்வளவு அழகாக இருக்கின்றது. அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் தான், அதற்குபின் வெறும் கரிக்குச்சிதான் கையில் இருக்கும். இது தெரிந்தும் கூட, மீண்டும் மீண்டும் மனம் காமத் தில் வீழ்ந்து புரள்கின்றது. இதை எல்லா ஞானிகளும் பல்வேறுவிதமாக சொல்லிவிட்டார்கள்.
“காயமே இது பொய்யடா! வெறும் காற்றடித்த பையடா! மாயனாராம் மண்ணு குயவன் செய்த! மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் ஞானப் பாட்டு பாடினார்கள்,
“கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு! காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு! எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்! எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” – என்று குணங்குடி மஸ்தான் ஞானத் தத்துவத்தை சொன்னான்.
ஆனால் எல்லாரும் புரிகின்ற மொழியில் கவிஞர் பாடிய இந்த பாடல்தான் எல்லோர் மனங்களிலும் எளிதாக உள்ளே சென்றது!
“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?” என்ன என் இரசிக பெர்மக்களே நான் சொல்வது உண்மைதானே! அன்புடன் பேசாலைதாஸ்
பேசாலைதாஸ்
இந்த பாடல் திருவிளையாடல் திரைப்படத்தில் வருகின்றது. வாழ்க்கையின் உயர்ந்த தத்துவத்தை படிக்காத பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படி, மிக எளிதாக சொல்லக்கூடிய கைவண் ணம் கண்ணதாஸனுக்கு உண்டு. அதற்கு ஒரு உதாரணம் இந்த பாடல். இந்த உடல் வெறும் கூடுதான்! அதற்குள் அடங்கியுள்ள காதல், காமம், அன்பு, பாசம் இப்படியான எல்லாவகையான உணர்வுகளும், உடலுக்குள் உயிர் ஒட்டி இருக்கும் வரைதான், உயிர் பிரிந்துவிட்டால் உடல் வெறும் கூடுதானே!
காமத்தில் விழாதாவர்கள் யாருமே இல்லை. காமம் ஒரு மத்தாப்பூ போன்றது என்பது எனது அனுபவ உண்மை. மத்தா ப்பூ சீறி எரிகின்ற போது பார்க்க எவ்வளவு அழகாக இருக்கின்றது. அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் தான், அதற்குபின் வெறும் கரிக்குச்சிதான் கையில் இருக்கும். இது தெரிந்தும் கூட, மீண்டும் மீண்டும் மனம் காமத் தில் வீழ்ந்து புரள்கின்றது. இதை எல்லா ஞானிகளும் பல்வேறுவிதமாக சொல்லிவிட்டார்கள்.
“காயமே இது பொய்யடா! வெறும் காற்றடித்த பையடா! மாயனாராம் மண்ணு குயவன் செய்த! மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள் ஞானப் பாட்டு பாடினார்கள்,
“கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு! காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு! எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்! எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” – என்று குணங்குடி மஸ்தான் ஞானத் தத்துவத்தை சொன்னான்.
ஆனால் எல்லாரும் புரிகின்ற மொழியில் கவிஞர் பாடிய இந்த பாடல்தான் எல்லோர் மனங்களிலும் எளிதாக உள்ளே சென்றது!
“பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?” என்ன என் இரசிக பெர்மக்களே நான் சொல்வது உண்மைதானே! அன்புடன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக