திங்கள், 16 ஏப்ரல், 2018

பாட்டும் பதமும் 43 புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

 "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,,,, கண்ணதாசன்

நான் இரசித்த கண்ணதாஸனின் பாடல்களில் இதுவும் ஒன்று! எனக்கு கண்ணன் மீதும், அவனது தத்துவங் கள் மீதும் உடன்பாடு இல்லை, இருந் தாலும் தமிழ் இலக்கியத்தின் செழு மைக்கு வைஸ்ணவம் துணைபோயி ருக்கின்றது என்பதனை நான் ஒப்பு க்கொள்கின்றேன். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில் என்ற பாடல் கண்ணனின் புகழ் பாடுவாதாக இருந்தாலும், தமிழ் இலக்கிய ரசவாதம் அதற்குள் ஒழிந்துள்ளது. 
                  
                                                   கிருஸ்ணன் என்றால் வெண்சங்கு, சங்கு சக்கரம், புல்லாங்குழல் வெள்ளைப்பசு இப்படியாக பல அடையாளங்கள் இருக்கும். இவை எல்லாவற்றிலும் கண்ணதாசனுக்கு புல்லாங்கு பிடித்திருக்கின்றது. அதற்கான காரனம் புல்லாங்குழல் கண்ணனின் உதட்டோடும், அதனை கிருஸ்ணன் இடுப்பில் சொருகி இருப்பார். உதட்டும் இடுப்பும் என்றால் கண்ணதாசனை கேட்கவா வேண்டும்? சங்கு ஊதினால் ஒன்று மரணம் அல்லது போர், போரைவிட என் கண்ணதாசன் காதலை இரசிப்பவன் போற்றுபவன் எனவேதான் அவர் புல்லாங்குழலை கையாண்டார்.

                                                         பாடலில் அடுத்த அடியை பாருங்கள் " வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே! எங்கள் மது சூதன் புகழ் பாடுங்களே" இந்த ஒற்றை வரிக்குள்ளே கவிஞர் மகாபாரதத்தின் ஒரு கதையை சுருக்கி சொல் லியுள்ள வித்தையை பாருங்கள். மிகப்பலசாலியான வீமனை எப்படியாவது கொலை செய்யவேண்டும் என்பதில் தீராப்பசியாக இருந்தான் துரியோத ணன். வீமன் ஒவ்வொரு நாளும் காலையில் கங்கை நதியில் குதித்து நீராடு வான். அந்த இடத்தில் துரியோதணன், ஈட்டிகள் மீது தேனும் விஷமும் கலந்து பூசி, ஆற்றுக்குள் நட்டிவைத்திருந்தான், அன்று வீமனுக்கு முன் கிருஸ்ணன் ஸ்நானம் செய்ய சென்ற போது, கங்கைகரைத்தோட்டத்தில் உலாவிய வண் டுகள், ஆற்றின் நடுவே ஈட்டிகள் சொருகப்பட்ட இடத்தை சுற்றி பறந்தன, காரனம் ஈட்டியில் பூசப்பட்ட தேனின் வாசனை வண்டுகளை ஈர்த்துள்ளன, ஆற்றுக்குள்ளே வீமனை கொல்ல , ஈட்டிகள் நடப்பட்டுள்ளன என்பதை அறி ந்த கண்ணன், வீமனிடம் சொல்கின்றான். நீ ஆற்றில் வழமையாக குதிக்கும் இடத்தில் குதிக்காதே, அங்கே வண்டுகள் சுற்றி சுற்றி பறக்கின்றன, நீ அந்த இடத்தில் குதித்தால் வண்டுகள் இறந்துவிடும் என்று சொல்லி வீமனின் கொலையை தன் சூழ்ச்சியால் தடுக்கின்றான் மதுசூதனனாகிய கண்ணன். இந்த கதையை ஒரு வரிக்குள்ளே சொல்லும் திறமை என் ஆசான் கண்ணதாசனைவிட வேறு யாருக்கு வரும் சொல்லுங்கள்? இனிப்பாட்டை கேட்டு இரசியுங்கள்! அன்பின் பேசாலைதாஸ்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...