வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பாட்டும் பதமும் 44 வைகை கரை காற்றே நில்லு

"வைகை கரை காற்றே நில்லு, வஞ்சிதனை பார்த்தா சொல்லு" டி. இராஜேந்தர்

                                                                               இதுவரையும் கண்ணதாஸினின் திரை இசைப்பாடலின் இரவாதம் பற்றி, உங்களுடன் சிலாகித்தேன். சற்று மாறுதலு க்காக டி. இராஜேந் திரனின் பாடல் ஒன்றை பற்றி பேச வருகின்றேன். டி. இராஜேந்திர னின் திரைப்படங்கள் கொடிகட்டி ப்பறந்த அந்த கால கட்டத் தில், நான் பல்கலைக்கழக இறுதி ஆண்டு (1983) மாணவனாக இருந் தேன். ஒரு புறம் படிப்பு, மறுபுறம் வறுமை, இவற்றிக்கு மத்தியில் இரா ணுவ விசாரனைகள், குருமட நிராகரிப்பு, அதனை தொடர்ந்து வந்த காதல் ஏமாற்றம்! இப்படியாக பிரச்சனைகள் சுழன்று வீசிய அந்த கால கட்டத்தில், இரஜேந்திரனின் காதல் தோல்விப்படங்களும், வேதனை, ஏக்கம் கலந்த பாடல்கள் ஏனோ மனதுக்கு அன்று, ஒத்தடமாக இருந்தன இராஜேந்திரன் காதல் வாழ்வில் நிஜமாக தோல்வி கண்டவர், அதனால் தான், தன் உணர்வுகளை பாடல்களிலும், திரைக்கதை, நடிப்பு எல்லாவ ற்றிலும் பிரதிபலித்தார். அறுபதுகளில் நின்று கொண்டு, வாழ்வை திரும்பி பார்க்கையில், இன்னும் அந்த பாடல்கள் பழைய நினைவுகளை, முகங்களை நினைவுக்கு கொண்டுவருகின்றது. இதனை இராஜேந்திர னும், அவர் மனைவியும் நேரடியாகவே சொல்வதை கேளுங்கள்.
நதி, மலர், மலை, மதி இவைகள் எல்லாமே கவிஞர்களின் பேசு பொருளாகவே இருக்கின்றன. அதிலும் வைகை, கங்கை, ஜமுனா, சிந்து, காவேரி போன்ற நதிகள் இலக்கியத்தில் மட்டுமல்ல, அன்றாட மக்களின் ஜீவாதார வாழ்விலும் மையம் கொண்டுள்ளன. கவிஞர்கள் தன் காதல் உணர்வுகளில் வலம் வரும் போது, நதிகளை, காதலியின் மதிமுகமாக கண்டு, காற்றை மெல்ல தூதுவிடுவார்கள். காற்றே, பூங்காற்றே, என் கண்மணி அவளை கண்டால் காதோரம் போய்ச்சொல்லு. மன்னன் மனம் வாடுதென்று, மங்கை  முகம் தேடுதென்று, காற்றை தூதுவிடும் ஒரு காதலின் இதய அன்பு இந்த பாடலில் துள்ளி குதிக்கின்றது. இனி பாட்டை கேட்டு இரசியுங்கள். அன்புடன் பேசாலைதாஸ்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...