வெள்ளி, 27 ஏப்ரல், 2018

பாட்டும் பதமும் 46 பார்த்தா பசுமரம்

"பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்" 
 பேசாலைதாஸ்
                                                       இந்த பாடல் திருவிளையாடல் திரைப்படத்தில் வருகின்றது. வாழ்க்கையின் உயர்ந்த தத்துவத்தை படிக்காத பாமர மக்களும் புரிந்து கொள்ளும் படி, மிக எளிதாக சொல்லக்கூடிய கைவண் ணம் கண்ணதாஸனுக்கு உண்டு. அதற்கு ஒரு உதாரணம் இந்த பாடல். இந்த உடல் வெறும் கூடுதான்! அதற்குள் அடங்கியுள்ள காதல், காமம், அன்பு, பாசம் இப்படியான எல்லாவகையான உணர்வுகளும், உடலுக்குள் உயிர் ஒட்டி இருக்கும் வரைதான், உயிர் பிரிந்துவிட்டால் உடல் வெறும் கூடுதானே! 
                                                               காமத்தில் விழாதாவர்கள் யாருமே இல்லை. காமம் ஒரு மத்தாப்பூ போன்றது என்பது எனது அனுபவ உண்மை. மத்தா ப்பூ சீறி எரிகின்ற போது பார்க்க எவ்வளவு அழகாக இருக்கின்றது. அந்த மகிழ்ச்சி கொஞ்ச நேரம் தான், அதற்குபின் வெறும் கரிக்குச்சிதான் கையில் இருக்கும். இது தெரிந்தும் கூட, மீண்டும் மீண்டும் மனம் காமத் தில் வீழ்ந்து புரள்கின்றது. இதை எல்லா ஞானிகளும் பல்வேறுவிதமாக சொல்லிவிட்டார்கள்.
                                                 “காயமே இது பொய்யடா!  வெறும் காற்றடித்த பையடா! மாயனாராம் மண்ணு குயவன் செய்த! மண்ணு பாண்டம் ஓடடா” என்று சித்தர்கள்  ஞானப் பாட்டு பாடினார்கள்,

                                                  “கத்தன் பிரிந்திடில் செத்த சவமாச்சு! காணாது காணாது கண்டதெல்லாம் போச்சு! எத்தனைப்பேர் நின்று கூக்குரலிட்டாலும்! எட்டாமல் போய்விடும் கட்டையல்லோ?” – என்று குணங்குடி மஸ்தான் ஞானத் தத்துவத்தை சொன்னான். 

                                                                ஆனால்  எல்லாரும் புரிகின்ற மொழியில் கவிஞர் பாடிய இந்த பாடல்தான் எல்லோர் மனங்களிலும் எளிதாக உள்ளே சென்றது!
                                                    “பார்த்தா பசுமரம் படுத்து விட்டா நெடுமரம்
சேர்த்தா விறகுக்காகுமா ஞானத்தங்கமே தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?” என்ன என் இரசிக பெர்மக்களே நான் சொல்வது உண்மைதானே! அன்புடன் பேசாலைதாஸ்

பாட்டும் பதமும் 45 வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி

"வண்ணத்தமிழ் பெண் ஒருத்தி என் எதிரில் வந்தாள்" பேசாலைதாஸ்

பாவை விளக்கு என்ற திரைப்படத்தில் ஜெயராமன் பாடிய பாடல்தான் வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என் எதிரில் வந்தாள். கண்ணதாஸனின் இலக்கிய புலமைக்கு இந்த பாடல் ஒரு சான்று. கம்பராமயணத்தில் வ்ரும் ஒரு செய்யுளை மையமாக கொண்டு எழுதப்பட்ட பாடல் இது. கம்பரின் காப்பியத்தில், ஆரண்ய காண்டத்திலே இடம் பெற்றுள்ள சூர்ப்பனகைப் படலம் இந்த செய்யுளின் களமாக அமைகின்றது. இராவணன் தன் பெற்ற மகள் சீதையை கண்கனிக்க, தன் தங்கை சூர்ப்பனகை ஆரண்ய காட்டுக்கு அனுப்புகின்றான். சூர்ப்பனகையின் அழகில், இராமன் மயங்கி நின்கின்றான். இதை கண்ட இரமானின் தம்பி, வெகுண்டெழுந்து சூர்ப்பனகையின் மார்புகளை தன் கூரிய அம்பினால், அறுக்கின்றான். மூண்டது இலங்காபுரி யுத்தம். இராவணன் சுத்தமான திராவிட தமிழ் வீரன். சிவனடியான். திராவிட தமிழன் இராவணின் வீரத்தை கொச்சைப்படுத்த ஆரிய புலவன் வான்மீகியால் உருவாக்கப்பட்டதே இராமயணம். அந்த சமாச்சாரத்தை விட்டுவிட்டு, பாடலின் இரவாதத்திற்கு வாருங்கள். 

இலக்குவனால் அமைக்கப்பெற்ற பர்ணசாலையின் வெளிப்புறத்தில், இராமர் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். தூங்கியும், தூங்காமலும் அரிதுயில் கொண்டுள்ளதாக அதனைக் கூறுவர். அப்போது  சூர்ப்பனகை அங்கு  வருகிறாள். இராமரைக் கண்டு, அவர் அழகில் மயங்குகிறாள். இராமரை நெருங்குகிறாள். அவள் எப்படி நடந்து வந்தாள் என்பதைக் கம்பரின் கவிநயம் அழகுபடக் கூறும்.
“பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவ மனுங்கச்
செஞ்செவிய கஞ்சநிமிர் சீறடிய ளாகி
அஞ்சொலிள மஞ்ஞையென அன்னமென மின்னும்
வஞ்சியென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”
                                                                                                 இதே இதே செய்யுளைத்தான் கவிஞர் தன் சினிமா பாடலில் வேறுவிதமாக புகுத்தினார்.
பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அழகையெல்லாம் அவள் முகத்தில் கண்டேன்..
வெண்ணிலவின் அழகையெல்லம் அவளிடத்தில் கண்டேன்
விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வேல் விழி வீச்சின் மின்னலினால் சிலை மாறி நின்றேன்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறிய வரும் மயிலும்
இன்னிசையை பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலுல்ம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

கன்னல் மொழி… ஈ..ஈ…. பேசி வரும்…
கன்னல் மிழி பேசி வரும் கன்னியரின் திலகம்
கமலம் என் கமலம் செங்கமலம்
கமலம் என் கமலம் செங்கமலம்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்.
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்
வண்ண தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள். 

அன்பர்களே இனி நீங்கள் நான் இரசித்து சிலாகித்ததை பாலில் கேட்டு மகிழுங்கள்  அன்புடன் பேசாலைதாஸ்

வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பாட்டும் பதமும் 44 வைகை கரை காற்றே நில்லு

"வைகை கரை காற்றே நில்லு, வஞ்சிதனை பார்த்தா சொல்லு" டி. இராஜேந்தர்

                                                                               இதுவரையும் கண்ணதாஸினின் திரை இசைப்பாடலின் இரவாதம் பற்றி, உங்களுடன் சிலாகித்தேன். சற்று மாறுதலு க்காக டி. இராஜேந் திரனின் பாடல் ஒன்றை பற்றி பேச வருகின்றேன். டி. இராஜேந்திர னின் திரைப்படங்கள் கொடிகட்டி ப்பறந்த அந்த கால கட்டத் தில், நான் பல்கலைக்கழக இறுதி ஆண்டு (1983) மாணவனாக இருந் தேன். ஒரு புறம் படிப்பு, மறுபுறம் வறுமை, இவற்றிக்கு மத்தியில் இரா ணுவ விசாரனைகள், குருமட நிராகரிப்பு, அதனை தொடர்ந்து வந்த காதல் ஏமாற்றம்! இப்படியாக பிரச்சனைகள் சுழன்று வீசிய அந்த கால கட்டத்தில், இரஜேந்திரனின் காதல் தோல்விப்படங்களும், வேதனை, ஏக்கம் கலந்த பாடல்கள் ஏனோ மனதுக்கு அன்று, ஒத்தடமாக இருந்தன இராஜேந்திரன் காதல் வாழ்வில் நிஜமாக தோல்வி கண்டவர், அதனால் தான், தன் உணர்வுகளை பாடல்களிலும், திரைக்கதை, நடிப்பு எல்லாவ ற்றிலும் பிரதிபலித்தார். அறுபதுகளில் நின்று கொண்டு, வாழ்வை திரும்பி பார்க்கையில், இன்னும் அந்த பாடல்கள் பழைய நினைவுகளை, முகங்களை நினைவுக்கு கொண்டுவருகின்றது. இதனை இராஜேந்திர னும், அவர் மனைவியும் நேரடியாகவே சொல்வதை கேளுங்கள்.
நதி, மலர், மலை, மதி இவைகள் எல்லாமே கவிஞர்களின் பேசு பொருளாகவே இருக்கின்றன. அதிலும் வைகை, கங்கை, ஜமுனா, சிந்து, காவேரி போன்ற நதிகள் இலக்கியத்தில் மட்டுமல்ல, அன்றாட மக்களின் ஜீவாதார வாழ்விலும் மையம் கொண்டுள்ளன. கவிஞர்கள் தன் காதல் உணர்வுகளில் வலம் வரும் போது, நதிகளை, காதலியின் மதிமுகமாக கண்டு, காற்றை மெல்ல தூதுவிடுவார்கள். காற்றே, பூங்காற்றே, என் கண்மணி அவளை கண்டால் காதோரம் போய்ச்சொல்லு. மன்னன் மனம் வாடுதென்று, மங்கை  முகம் தேடுதென்று, காற்றை தூதுவிடும் ஒரு காதலின் இதய அன்பு இந்த பாடலில் துள்ளி குதிக்கின்றது. இனி பாட்டை கேட்டு இரசியுங்கள். அன்புடன் பேசாலைதாஸ்



திங்கள், 16 ஏப்ரல், 2018

பாட்டும் பதமும் 43 புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

 "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே,,,, கண்ணதாசன்

நான் இரசித்த கண்ணதாஸனின் பாடல்களில் இதுவும் ஒன்று! எனக்கு கண்ணன் மீதும், அவனது தத்துவங் கள் மீதும் உடன்பாடு இல்லை, இருந் தாலும் தமிழ் இலக்கியத்தின் செழு மைக்கு வைஸ்ணவம் துணைபோயி ருக்கின்றது என்பதனை நான் ஒப்பு க்கொள்கின்றேன். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில் என்ற பாடல் கண்ணனின் புகழ் பாடுவாதாக இருந்தாலும், தமிழ் இலக்கிய ரசவாதம் அதற்குள் ஒழிந்துள்ளது. 
                  
                                                   கிருஸ்ணன் என்றால் வெண்சங்கு, சங்கு சக்கரம், புல்லாங்குழல் வெள்ளைப்பசு இப்படியாக பல அடையாளங்கள் இருக்கும். இவை எல்லாவற்றிலும் கண்ணதாசனுக்கு புல்லாங்கு பிடித்திருக்கின்றது. அதற்கான காரனம் புல்லாங்குழல் கண்ணனின் உதட்டோடும், அதனை கிருஸ்ணன் இடுப்பில் சொருகி இருப்பார். உதட்டும் இடுப்பும் என்றால் கண்ணதாசனை கேட்கவா வேண்டும்? சங்கு ஊதினால் ஒன்று மரணம் அல்லது போர், போரைவிட என் கண்ணதாசன் காதலை இரசிப்பவன் போற்றுபவன் எனவேதான் அவர் புல்லாங்குழலை கையாண்டார்.

                                                         பாடலில் அடுத்த அடியை பாருங்கள் " வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே! எங்கள் மது சூதன் புகழ் பாடுங்களே" இந்த ஒற்றை வரிக்குள்ளே கவிஞர் மகாபாரதத்தின் ஒரு கதையை சுருக்கி சொல் லியுள்ள வித்தையை பாருங்கள். மிகப்பலசாலியான வீமனை எப்படியாவது கொலை செய்யவேண்டும் என்பதில் தீராப்பசியாக இருந்தான் துரியோத ணன். வீமன் ஒவ்வொரு நாளும் காலையில் கங்கை நதியில் குதித்து நீராடு வான். அந்த இடத்தில் துரியோதணன், ஈட்டிகள் மீது தேனும் விஷமும் கலந்து பூசி, ஆற்றுக்குள் நட்டிவைத்திருந்தான், அன்று வீமனுக்கு முன் கிருஸ்ணன் ஸ்நானம் செய்ய சென்ற போது, கங்கைகரைத்தோட்டத்தில் உலாவிய வண் டுகள், ஆற்றின் நடுவே ஈட்டிகள் சொருகப்பட்ட இடத்தை சுற்றி பறந்தன, காரனம் ஈட்டியில் பூசப்பட்ட தேனின் வாசனை வண்டுகளை ஈர்த்துள்ளன, ஆற்றுக்குள்ளே வீமனை கொல்ல , ஈட்டிகள் நடப்பட்டுள்ளன என்பதை அறி ந்த கண்ணன், வீமனிடம் சொல்கின்றான். நீ ஆற்றில் வழமையாக குதிக்கும் இடத்தில் குதிக்காதே, அங்கே வண்டுகள் சுற்றி சுற்றி பறக்கின்றன, நீ அந்த இடத்தில் குதித்தால் வண்டுகள் இறந்துவிடும் என்று சொல்லி வீமனின் கொலையை தன் சூழ்ச்சியால் தடுக்கின்றான் மதுசூதனனாகிய கண்ணன். இந்த கதையை ஒரு வரிக்குள்ளே சொல்லும் திறமை என் ஆசான் கண்ணதாசனைவிட வேறு யாருக்கு வரும் சொல்லுங்கள்? இனிப்பாட்டை கேட்டு இரசியுங்கள்! அன்பின் பேசாலைதாஸ்


ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...