புதன், 20 ஏப்ரல், 2022

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன்

பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM

படம்:‘தூறல் நின்னு போச்சு’ (1982)

ராகம்-  ஏரிக்கரை பூங்காற்றே-    சங்கராபரணம்            “

 என் சோக கதைய கேளு- தேநுகா

பாடலாசிரியர்- ‘என் சோக ‘-கங்கை அமரன்

‘ஏரிக்கரை’-சிதம்பரநாதன்

தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை, எந்த இடையூறும் இல்லாமல், சுமுகமாக தன்னை ஏற்று கொள்ள வேண்டும் என்று சுலக்ஷணா வினாயகரிடம் வேண்டுவது " சிம்பாலிக்' ஷாட்( symbolic shot) . ஏனென்றால், அது சுலக்ஷணாவின்.அறிமுக காட்சி. வினாயகரும் அவரை ஆசீர்வதித்தார்.

இந்த இரு பாடல்களையும் ஒன்றாக பதிவு செய்வதற்கு காரணம் உண்டு. இரண்டுமே, கதாநாயகனின் காதல் , அதில் அவனுடைய ஏக்கம், நம்பிக்கை,ஆதங்கம் , ஏமாற்றம் ஆகியவற்றை இரு பாடல்களும் வெளிப்படுத்தும். காட்சி அமைப்பு வேறுபட்டாலும், பாடும் தோரணையில் வித்யாசம் இருந்தாலும், கரு ஒன்றே.

“ஏரிக்கரை பூங்காற்றே” பாடலை பற்றி (பாடியவர்- கே. ஜே. ஏசுதாஸ்)

ஏரிக்கரை பூங்காற்றே பாடலை ஏசுதாஸ் அவர்கள் பாடும் பொழுது, தனது வழக்கமான பாணியிலிருந்து மாறு பட்டு பாடுவார்- கிராம நெடியுடன்!. 

பாடல் இறுதியில் பாடுவது யார்? நான் நம்பியார் என்றே நினைத்தேன். ஆனால், அவருடைய பெயர் LP ரெக்காற்டில் இல்லை. அப்படி என்றால் அது ஏசுதாஸ் அவர்கள் குரலா? 

இப்பாடலை எழுதிய  சிதம்பரநாதனுக்கு விருது வழங்கப்பட்டது ( மாநில விருது).

"பாத மலர் நோகுமுன்னு நடக்கும்

பாத வழி பூ விரிச்சேன் மயிலே

ஓடம் போல் ஆடுதே

மனசு"-நெகிழவைவைக்கும் வரிகள்

https://youtu.be/VSmf1oC6Apg

“என் சோக கதைய கேளு” .. பாடலை பற்றி (பாடியவர்- மலேஷியா வாசுதேவன் &கிருஷ்ணமூர்த்தி)

இந்த கலாட்டா பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். கிண்டலும், சோகமும் கலந்து, மலேஷியா வாசுதேவன் கிருஷ்ணமூர்த்தியுடன் சக பாடகர் அடிக்கும் லூட்டி, பாக்யராஜும் , நம்பியார் நடிக்க வசதி செய்கிறது, சிரிப்பும் வரவழைக்கிறது. 

மிக முக்கியமாக, பட்டிதொட்டியெங்கும்,பாட்டுக்கச்சேரிகளிலும் மிகப்பெரிய ஹிட்டானது.

இப்பாடலில் மிருதங்கம் வாசிப்பது போல் நடிப்பவர் பிற்கால “கதாநாயகன்' பாண்டியராஜன்!

“மங்களத்த பெத்தவனே

உன் மனச மாத்திக்கடா”

https://youtu.be/59ZWTlLyL5I

BGM:

இளையராஜாவின் BGM இத்திரைப்படத்தில் அசத்தல்! அந்த வயிலின் பீஸ்! பின்னர் மிருதங்கம் உடன் நடை போட்டு கொண்டு போவது மங்கல(ள)த்தை செல்லமாக. அழைத்துப் போவது போன்று இருக்கும். ( இப்படத்தில் பாக்யராஜின் பெயர் செல்ல துறை. ,சுலக்ஷணாவின். பெயர் மங்களம்.)

https://youtu.be/jRz5CmUTw2c

Bottom Line:

நாற்பது வருடங்களுக்கு முன்பு, தமிழ் புத்தாண்டு அன்று திரையிடப்பட்டது. அமோக வெற்றி பெற்றது. இப்படத்தில் வேறு இரு சிறந்த பாடல்களுடன் , இப்படத்தின் " தங்கமான" தகவல்களுடன் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி!


ஞாயிறு, 23 ஜனவரி, 2022

மான் கண்ட சொர்க்கங்கள்….

 மான் கண்ட சொர்க்கங்கள்….


கே பாலச்சந்தர் இயக்கிய 47 நாட்கள் என்ற படத்தில் வந்த பாடல். இதே பெயரில் தொடர்கதையாக வெளியான சிவசங்கரியின் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சிரஞ்சீவி இதில்தான் ஒரு எதிர் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஜெயப்ரதா கதாநாயகி.
இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்தான். ஆனால் அதில் ஒன்று காலத்தை வென்ற காவியமாகிவிட்டது. ஒரு காரணம் மெல்லிசைமன்னர் எம்எஸ்வி என்றால், இன்னொரு காரணம் கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசன்.
ஒவ்வொரு வரிகளும் மனதின் ஆழம்வரை ஊடுருவின. அத்தனை எளிமை, ஆனால் எக்கச்சக்க அர்த்தங்கள்… தமிழில் வெளியான மிக நீளமான பாடல்களில் ஒன்று இது. நான்கு சரணங்கள். ஆனால் சிவசங்கரி 47 வாரங்கள் தொடர்கதையாக எழுதியதை, கண்ணதாசன் அவர்கள் நான்கு சரணங்களுக்குள் சொல்லி முடித்திருப்பார்.
பாடலை தொடர்ச்சி்யாக காட்டாமல், ஒவ்வொரு சரணத்தையும் பொருத்தமான சூழலுக்கு பயன்படுத்தியிருப்பார் கேபி.
மான் கண்ட சொர்க்கங்கள்…
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே…
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே…
சென்னையில் கட்டுப்பெட்டித்தனமான மிடில்கிளாஸ் பெண்ணான நாயகி, கணவனை நம்பி பிரான்ஸுக்குப் போகிறாள். போன இடத்தில்தான் அவனது மன்மத லீலைகள் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்கின்றன.
அந்த சூழலை கவிஞர் வார்த்தெடுக்கும் விதம் பாருங்கள்….
…தாமரைப் பூவென்றான்
காகிதப் பூவானான்
ராமனைப் போல் வந்தான்
ராவணன் போலானான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம்
ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம்
யாருக்கு அவன் மஞ்சம்
கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாளே பொன்மங்கை….
நம்ப வைத்து கழுத்தறுக்கும் கயமை குணம் கொண்ட கணவன் பற்றிய வர்ணனைகளை கவியரசர் சொற்களுக்குள் இப்படி சிறைப்பிடித்திருப்பார்…
…வேதங்கள் அறிகின்றான்
வேதனை தருகின்றான்
நல்லவன் செல்லாத பாதையில் செல்கின்றான்
அப்பாவி பெண்ணுள்ளம்
இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம்
மாலையில் ஓர் வண்ணம்
மாறுது அவள் பாதை
வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது!
சோகம், விரக்தியின் உச்சம் என்னவென்பதை கீழ் வரும் வரிகள் படித்தால்… கேட்டால் புரிந்து கொள்ளலாம்.
“ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…” – எத்தனை கொடுமையை தன் கணவனிடம் அனுபவித்திருந்தால் ஒரு பெண் இப்படியெல்லாம் எண்ணுவாள்…
இந்தக் கேள்வியை, பாடலைக் கேட்பவர் ஒவ்வொருவர் மனதிலும் எழ வைத்திருப்பது கவிஞரின் வரிகளுக்கு மட்டுமே உள்ள வலிமை.
…ஆசையில் ஓர் நாளில்
பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆனோமே சேயினை தந்தோமே…
ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…
பாசத்தில் நீராடி
பந்தத்தில் போராடி
வேஷத்தைத் தொடர்வாளா
வேதனைப் பெறுவாளா
ஊரில்லை உறவில்லை
தனியாக நின்றாளே பூமாது!
எப்படியாவது அந்த கொடியவனிடமிருந்து தாய்நாட்டுக்கு தப்பித்துப் போய்விட வேண்டும்… ஆனால் போக வழி தெரியாது… இத்தனைநாள் வழிபட்ட கடவுளாவது காப்பாற்ற வரமாட்டாரா? – இதுதான் இயலாமையின் உச்ச கட்டம். அந்தக் கடைசி வரிகளை கேட்பவர் கண்ணோரங்கள் நிச்சயம் கசிந்துவிடும்… பாடலை அத்தனை பாவத்துடன் பாடியிருப்பார் எஸ்பிபி.
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது
இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது!
-இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்டு முடிக்கும் போதும், பல வருடங்கள் பின்னோக்கி பயணித்துவிட்டு திரும்ப வந்த ஒரு உணர்வு. யாரோ நமக்கு நெருக்கமான உறவை சிக்கலிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்ட நிறைவு…!


செவ்வாய், 7 டிசம்பர், 2021

பாட்டும் பதமும் 98 காதோடு நான் பாடுவேன், மனதோடு நான் பேசுவேன்

பாட்டும் பதமும் 98
" காதோடு நான் பாடுவேன், மனதோடு நான் பேசுவேன்"
 பேசாலைதாஸ்

ஜெயந்தியும் நடித்த பாடல்காட்சி...காதோடுதான் நான் பாடுவேன்...L.R. ஈஸ்வரிக்கு இந்த மெலடிவகைப் பாடலைத்தந்த V.குமார், அதே படத்தில், 'நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேன்...' எனத்தொடங்கும் `சத்தமான பாடலை' P.சுசீலாவை பாடவைத்தார். ஜெயந்தியின் நடிப்பு சற்றே overacting போல இன்று தோன்றினாலும், திரையுலக நடிப்பில் நாடகத்தனம் மிகுந்து காணப்பட்ட காலகட்டம் என்பதை மனதில் கொண்டால், ஜெயந்தியும் வாணிஸ்ரீயும் நிச்சயம் பாராட்டுக்குரியவரென்று தோன்றும்...

படம்: வெள்ளி விழா
உணர்வு: தவிப்பு

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழிகாட்டவா

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்8
" காதோடு நான் பாடுவேன், மனதோடு நான் பேசுவேன்"  பேசாலைதாஸ்

படம்: வெள்ளி விழா
உணர்வு: தவிப்பு

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்
நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
உனக்கேற்ற துணையாக எனை மாற்றவா
குலவிளக்காக நான் வாழ வழிகாட்டவா

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

காதோடு தான் நான் பாடுவேன்

பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
பாலூட்ட ஒரு பிள்ளை அழைக்கின்றது
நான் படும் பாட்டை ஒரு பிள்ளை ரசிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
எனக்காக இரு நெஞ்சம் துடிக்கின்றது
இதில் யார் கேட்டு என் பாட்டை முடிக்கின்றது

காதோடு தான் நான் பாடுவேன்
மலரோடு தான் நான் பேசுவேன்
விழியோடு தான் விளையாடுவேன்
உன் மடி மீது தான் கண் மூடுவேன்

ஞாயிறு, 12 செப்டம்பர், 2021

அரங்கேற்றம் -

 அரங்கேற்றம் - 


மிக மோசமாக, பார்க்கவே ரசிக்கும்படியாகவோ, சிரிக்கும்படியாகவோ இல்லாத கதையைக் கூட சினிமாவாக்கிவிடலாம். 

ஆனால், பொளேரென்று அறைகிற மாதிரி, சட்டையைப் பிடித்து உலுக்குகிற மாதிரி, ஓங்கி சம்மட்டியால் அடிக்கிற மாதிரி, மனதைப் போட்டு உலுக்குவது போல படம் எடுப்பது, ஆகப்பெரிய ரிஸ்க்.

 ஆனால், அதை உணர்ச்சிபூர்வமாக அல்லாமல், உணர்வுபூர்வமாகக் காட்டி நம்மையெல்லாம் உலுக்கியிருப்பார் பாலசந்தர். அந்தப் படம்... 

அரங்கேற்றம்.

1973ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 9ம் தேதி வெளியான அரங்கேற்றம்தான், எண்பதுகளிலும் தொந்நூறுகளிலும் பல புரட்சிகளையும் புதுமைகளையும் படமாகக் கொண்டுவந்ததற்கு அரங்கேற்றம் போட்டது.

கிராமம். அக்ரஹாரம். இரண்டுமே அப்படியொரு ஒழுக்கத்துடனும் ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் திகழும் இடங்களாக படித்திருக்கிறோம். வாழ்ந்திருக்கிறோம். வாழ்வதைப் பார்த்திருக்கிறோம். அப்படியொரு கிராமத்து அக்ரஹாரத்தில், ஆச்சாரமான குடும்பம். ஆனால் அளவற்ற குடும்பம். வரிசையாய் ஒவ்வொரு வயது வித்தியாசம் இருப்பது போல மகள்கள், மகன்கள்.

அந்த வீட்டின் தலைவர் சாஸ்திரிகள். நியம நிஷ்டைகளை தவறாமல் கடைப்பிடிப்பவர். எட்டணா காசு கிடைத்தால், அவர் குபேரன். ஆனால், ஒழுங்காக தர்ப்பணம் செய்யாதவரிடம் கோபித்துக்கொண்டு, அந்த எட்டணாவையும் சம்பாதிக்காமல் விடுகிற கண்டிப்புக்காரர்.

அங்கே, அந்த வீட்டில், பசி எப்போதும் நிரந்தரம். ஆனால் பசிக்கு உணவு எப்போதாவதுதான்! படிக்கிற பையனுக்கு நோட்டு வாங்கக்கூட நோட்டு கிடையாது. போதாக்குறைக்கு, குடும்பத்தலைவனின் சகோதரி, தன் வயதுக்கு வந்த மகளுடன் வந்துவிடுகிறாள். ‘எம் புருஷன் எங்களைவிட்டுட்டு, ஓடிப்போயிட்டான்’ என்கிறாள்.

வறுமை சூழ் வீடு அது. ஆனால் கெளரவத்துக்குக் குறைவில்லை. ஆனால் வறுமைதான் வீட்டின் எதிரி என்று புரிகிறது மூத்தவள் லலிதாவுக்கு. 

அப்பாவிடம் சண்டைபோட்டு சம்மதம் வாங்கி, வேலைக்குச் செல்கிறாள். வீட்டில் சந்தோஷம் கொஞ்சமாக எட்டிப்பார்க்கிறது.

அடுத்து மூத்த தம்பியின் டாக்டர் படிப்பு. சிபாரிசுக்காக சென்னை செல்கிறாள். சின்னாபின்னமாக்கப்படுகிறாள். சகலத்தையும் முழுங்கிக்கொண்டு, ஊர் திரும்புகிறாள். வேலையில் பதவி உயர்வு, இடமாற்றம். ஹைதராபாத் செல்கிறாள். அங்கே மேலதிகாரி, சூறையாடுகிறான்.  பிறகு  அதுவே தொழிலாகிப் போகிறது அவளுக்கு!

தம்பி டாக்டருக்குப் படிக்கிறான், தங்கை பாடகியவாதற்குப் இசைப்பயிற்சி எடுக்கிறாள். அடுத்தடுத்த தம்பி, தங்கைகள் படிக்கிறார்கள். குடும்பத்தில் குடியிருந்த வறுமை விரட்டியடிக்கப்படுகிறது.

அடுத்தடுத்த நிகழ்வுகளில், சமூகமும் அவளின் குடும்பமும் அவளை எப்படிப் பார்க்கிறது, லலிதா என்னானாள் என்பதை அரங்கேற்றி நம்மை அறைந்திருக்கும் படம்தான் அரங்கேற்றம்!

டைட்டில் போடும் போதே பிரமிளாவின் பெயர்தான் முதலில் போடுகிறார்கள். அரங்கேற்ற நாயகி லலிதாதான் பிரமிளா. அவரின் அம்மா எம்.என்.ராஜம். அப்பா ராமுசாஸ்திரிகளாக எஸ்,வி.சுப்பையா. டாக்டருக்குப் படிக்கும் தம்பியாக கமல். ஜெயசுதா, ஜெயசித்ரா. ஊரில் இருக்கிற செந்தாமரை, அவரின் மகன் சிவக்குமார். எல்லோரும் அவரவர் வேலைகளை செம்மையாகச் செய்திருப்பார்கள்.

 அதிலும் பிரமிளா... பிரமாண்ட நாயகி அவர். அப்படியொரு நாயகியாக்கியிருப்பார் கே.பாலசந்தர்.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா என்று ஒரு சிரிப்பு சிரிப்பார் பிரமிளா. செம ஹிட்டு. அந்தச் சிரிப்புதான் இந்த சமூகத்தையும் அவலங்களையும் பார்த்து சிரிக்கிற கேவலமானச் சிரிப்பு அது.

கிழிசல் புடவையுடன் இருப்பார் பிரமிளா. சிவகுமார் அவருக்குப் புடவை தருவார். அதை அப்பா எஸ்.வி.சுப்பையா பார்த்துவிடுவார். எல்லோரும் சாப்பிட உட்கார்ந்திருக்கும் போது, வீட்ல ஒருதப்பு நடந்திருக்கு. அது மன்னிக்கவே முடியாது என்பார். 

அம்மா ராபிச்சைம்மா என்று குரல்கேட்கும். இதைப் பண்ணினதுக்கு பிச்சை எடுக்கலாம் என்பார். கடைசியில் அந்தப் புடவையும் பிரமிளாவின் உணவும் பிச்சைக்காரிக்குப் போகும்!

அத்தைக்காரி சினிமாவுக்குப் போக காசு கேட்பாள். போவாள். வீட்டில் உணவில்லை. சின்னப்பயலுக்குப் பசி. யாருக்கும் தெரியாமல் வெளியே போய், ராப்பிச்சைக்காரியிடம் உணவு வாங்கிச் சாப்பிடுவான். தெரிந்ததும், நொந்து கோபமாகிற அம்மா, அவனை அடித்து வெளுப்பாள். பசியைப் பொறுத்துக்கமுடியலியா என்பாள். உனக்கு கோபத்தைப் பொறுத்துக்கமுடியல. அத்தைக்கு சினிமா ஆசை. அதைப் பொறுத்துக்கமுடியல என்பார் பிரமிளா.

அன்றிரவு. விஷம் கலப்பாள் அம்மா. அதைத் தடுத்துக் காப்பாள் பிரமிளா. இனிமே நான்தான் உனக்கு அம்மா. ஏன்... ராமு சாஸ்திரிகளுக்கும் சேர்த்துதான் அம்மா என்பார் பிரமிளா.

சென்னையில், ’பரவாயில்லயே. காசுபணம் எதுவும் இல்லாம, காரியத்தை சாதிச்சிட்டியே’ என்பார் ஒரு பெண். உடனே பிரமிளா, ’காசுபணம் இல்லாமலும் காரியத்தைச் சாதிக்க வழி இருக்கு’ என்பார்.

தங்கைக்குத் திருமணம். ஊரில் இருந்து வந்திருப்பார். அம்மா கண்ணில் படவே மாட்டார். பார்த்தால் அம்மாக்காரி மாசமாக இருப்பாள். வெட்கம். அப்போது பின்னணியில், ‘அம்மா... ராப்பிச்சைம்மா’ என்று குரல் கேட்டுக்கொண்டே இருக்கும். செருப்பால் அடித்த மாதிரியான காட்சி.

அம்மா ராப்பிச்சைக்கு உணவு போடுகிற சாக்கில் நழுவி வாசலுக்குப்போவாள். அங்கே வந்த பிரமிளா... ‘உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். இத்தனை வருஷமா இங்கே இருக்கியே.. இதை நீ பாக்கவே இல்லியாம்மா’ என்பார்.

 கேமிரா அங்கே காட்டும். அளவற்ற குடும்பம், இரண்டுக்கு மேல் எப்போதுமே வேண்டாம் விளம்பரம்.

நீலுவிடம் பேசிக்கொண்டிருப்பார் பிரமிளா. அப்போது குழந்தை ஒன்று, முந்தானையை எடுத்து விளையாடும். அது தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார். பிறகு, ‘ஆம்பளன்னாலே மரத்துப்போச்சு’ என்பாள். 

திக்கென்றாகிவிடும் அம்மாவுக்கு. 

‘போடி அசடு... மறந்துபோச்சுன்னு சொல்லிருக்காடி’ என்பார் சுப்பையா. கலங்கவைத்துவிடும் காட்சிகளும் கனக்கச் செய்துவிடும் காட்சிகளுமாக கதறடித்திருப்பார் பாலசந்தர்.

தங்கையைத் திருமணம் செய்யப்போகும் மாப்பிள்ளையைப் பார்த்ததும் பிரமிளாவுக்கு ஷாக். அந்த மாப்பிள்ளைப்பையன் சசிக்குமாருக்கும்தான். 

பிளாஷ்பேக். எல்லாம் முடிந்த பிறகு,நாளைக்கு ஊருக்குப் போறேன் என்பான் அவன். ‘ஆத்துக்குப் போய் தோப்பனார் என்ன சொல்லப்போறாரோ’ என்பார் பிரமிளா.

 ஷாக்காகி, விறுவிறுவென அருகில் வந்து, ‘நீ பிராமணப் பெண்ணா’ என்று கேட்டுவிட்டு, பளேரென அறைவான். போகிறவனை நிறுத்தி, அவனருகில் வந்து, அவன் தோளில் இருக்கிற பூணூலைக் காட்டி, ‘நீ பிராமணனா’ என்று கேட்டுவிட்டு, பொளேரென அறைவார் பிரமிளா. தியேட்டரே கைத்தட்டி, கனத்துப் போன இதயத்துடன், பாலசந்தரை மானசீகமாக கைகுலுக்கும்.

73ம் வருடம் வெளிவந்த படம் அரங்கேற்றம் என்றால், 45 வருடங்களாகிவிட்டன. ஆனாலும் இப்படிப் பொட்டிலடித்தாற்போல் சொல்ல கே.பாலசந்தரால் மட்டுமே சொல்ல இயலும்.

ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது என்றொரு பாடல். மூத்தவள் நீ கொடுத்தாய் வாழ்விலே முன்னேற்றம் என்றொரு பாடல். மாப்பிள்ளை ரகசியம் சொல்லவா என்றொரு பாடல். ஒவ்வொரு பாட்டிலும் கண்ணதாசன் தன் பங்குக்கு கதையின் கனத்தை, கவிதையாக்கித் தந்திருப்பார். வி.குமாரின் இசையும் மிகச்சிறப்பாக அமைந்திருக்கும்.

சிவகுமார் இறந்துவிட்டதாக தர்ப்பணம் நடக்கும். உயிருடன் பார்த்தேன் என்று பிரமிளா சொல்லுவார். சந்தோஷமா இருக்கியாம்மா என்பார் செந்தாமரை. எல்லாரையும் சந்தோஷமா வைச்சிருக்கேன் என்பார்.

தன் மகள் என்ன செய்து குடும்பத்தை உயர்த்தியிருக்கிறாள் என்று தெரிந்ததும் சுப்பையா, அவளுக்குத் தர்ப்பணம் செய்வார். பிறகு தம்பி கமல், அக்கா பிரமிளாவை வீட்டை விட்டுத் துரத்துவார். அவ வேணாம், அவ படிச்ச எம்.பி.பி.எஸ் மாப்பிள்ளை மட்டும் வேணுமா என்பார் எம்.என்.ராஜம். 

சுப்பையாவும் துரத்தச் சொல்லுவார். அவ இல்லேன்னு தர்ப்பணம் பண்ணிட்டு, இப்ப அவளை வெளியே போகச் சொல்ல எந்த உரிமையும் இல்ல என்பார் ராஜம். 

அம்மா, அவர் இன்னிக்கிதான் தர்ப்பணம் பண்ணிருக்கார். நான் எப்பவோ செத்துட்டேம்மா என்பார்.

வீட்டை விட்டு துரத்த, சிவகுமார் வீட்டில் தஞ்சம். உனக்கும் என் பையனுக்கும் கல்யாணம். உன் சம்மதம் சொல்லப்போறியா இல்லியா என்பார் செந்தாமரை. எது எதுக்கோ சம்மதிச்சவ நான். இப்ப என் கல்யாணத்துக்கு சம்மதிக்கணுமா என்பார்.

நிறைவாகக் கல்யாணமும் ஆகிவிடும். அங்கே, கடற்கரையில், டால்டா டப்போவுடன் அத்தான் என்று எழுதிய டப்பாவுடன் பைத்தியமெனத் திரிந்தாளே... தங்கம் என்றொருத்தி! முன்னதாக அவள் கடலலையில் இறந்துவிட்டதைத் தெரிந்துவைத்திருப்பாள்.

இப்போது, லலிதா எனும் பெண், குடும்பத்துக்காக தன் கற்பையும் மானத்தையும் கெளரவத்தையும் தொலைத்து நிற்கும் பெண், டால்டா டப்பாவுடன், டபடபடபடபட என்று தட்டிக்கொண்டே தங்கத்தைத் தேடுவாள். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்...!

வழியெங்கும் மனநிலை பாதிக்கப்பட்ட, சிதைவுற்ற, நன்றி மறந்த காயத்தால் துடிக்கப்பட்ட, துரோகத்தால் உலகமே இடிந்துவிட்டது என மனம் கலங்கி வெடித்தவர்கள், சாலைகளில் நடமாடிக்கொண்டிருப்பார்கள், இந்த உலக நினைப்பே இல்லாமல்! அவர்களில் லலிதாக்களும் இருக்கலாம். லலிதா என்பது பெண் அல்ல... மனிதம்!

எப்போது பார்த்தாலும் அன்றிரவின் தூக்கத்தைக் கலைத்துவிடும் மகாவலிமை கொண்ட அரங்கேற்றம்... பாலசந்தர் கத்தியின்றி ரத்தமின்றி செல்லுலாய்டில் நிகழ்த்திய யுத்தங்களில் ஒன்று!

முத்துச்சிப்பி

கே.விஸ்வநாத் இயக்கத்தில் கமலஹாசன் கதாநாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்குப் படமான  'ஸ்வாதிமுத்யம்'  மொழி மாற்றம் செய்யப்பட்டு 'சிப்பிக்குள் முத்து'  என்ற பெயரில் 1986ஆம் வருடம் தமிழில் வெளியானது. ஏனோ தமிழில் டப்பிங் பேச கமலஹாசன் மறுத்து விட்டார். பின்பு கே.விஸ்வநாத்தின் உறவுக்காரரும் பிரபல பாடகருமான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கமலஹாசனுக்காக டப்பிங்  பேச,  அதனாலேயே கமலின் அற்புதமான நடிப்பை தமிழ்ப் பதிப்பில் பூரணமாக ரசிக்க இயலாமல் போனது.

ஆனாலும் இந்தப் படத்தில் உலகம் என்னவென்றே தெரியாத அப்பாவி இளைஞனாக கமல் பிரமாதப் படுத்தியிருப்பார்!

அதிலும்  ராதிகாவுடனான  'துள்ளி துள்ளி' என்ற பாடல் காட்சியில், ஒரு 'அச்சுப் பிச்சு' டான்ஸ் ஆடியிருப்பார் பாருங்கள், அசத்தல்!  டான்ஸே தெரியாத ஒரு மனிதன் மனம்போன  போக்கில் ஆடினால் எப்படியிருக்குமோ அப்படி ஆடி, அதையும் பாடலோடு பொருந்திப் போகிறமாதிரி, அனைவரும் ரசிக்கிறமாதிரி செய்திருப்பார் கமல்! 

அப்பொழுது இதை பத்திரிகைகளும் ஊடகங்களும் ஆகா ஓகோவெனப் புகழ்ந்து எழுதின.

'இதுவரைக்கும் இந்த மாதிரி யாரும் பண்ணினதேயில்லை' என்றும் பாராட்டின.

ஆனால் அது உண்மையல்ல....

'சிப்பிக்குள் முத்து' 1986இல்தான் வெளியாகியது.

அதற்குச் சரியாக 16 வருடங்களுக்கு முன்பே, அதாவது 1970ஆம் வருடம் வெளியான, நடிகர் பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில், ஏ.சி.திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜியும், ஜெயலலிதாவும் நடித்த, ஜெயலலிதாவுக்கு அந்த ஆண்டின் தமிழக அரசின் 'சிறந்த நடிகை' பட்டம் கிடைக்கக் காரணமாயிருந்த, வெள்ளிவிழாக் கண்ட 'எங்கிருந்தோ வந்தாள்' என்ற படத்தில்,  அதிர்ச்சியான சம்பவமொன்றினால் பழசெல்லாம் மறந்து போன ஒரு மனமுதிர்ச்சி குறைந்த இளைஞனாக வாழ்ந்திருப்பார் நடிகர் திலகம்!

அதிலும் ஜெயலலிதாவுடனான 'சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே' என்ற பாடல் காட்சியில் ஒரு 'கன்னா பின்னா' டான்ஸ் ஆடுவார் பாருங்கள், அசத்தலோ அசத்தல்! டான்ஸ் என்னவென்றே தெரியாமல் ஆடி....அடடா, அந்தச் சேஷ்டைகளும்,

நயனங்களும்....காணக் கண் கோடி வேண்டும்! 

ஆக,  பின்னாளில் கமலஹாசன்

நடித்த ஒரு நடிப்பை, அதற்குப் பதினாறு வருடம் முன்பே 'ஜஸ்ட் லைக் தட்' செய்து முடித்து விட்ட சிவாஜி, 'நடிகர் திலகம்' அல்லாமல் வேறென்ன?

கமலஹாசன் மட்டுமல்ல, இன்னும் பல நூறு வருடங்களுக்கு  யார் எப்படி  நடித்தாலும்,  சிவாஜி அதை முன்பே தன் ஏதோ ஒரு படத்தில், ஏதோ ஒரு இடத்தில் செய்திருப்பார் என்பதை நினைவில் கொள்க!

வானத்திற்கு ஒரே சூரியன்! ஒரே நிலவு!

திரையுலகிற்கு ஒரே 'நடிகர் திலகம்' சிவாஜி மட்டும்தான்!

(மீள்பதிவு)
479
187 கருத்துகள்
58 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

செவ்வாய், 11 மே, 2021

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே,,,,,,,, பேசாலைதாஸ்


ஒரு பாடல் உருவாக பல சுவையான சம்பவம் உண்டு. அதிலும் கண்ணதாசன் அவர்கள் பாடலில் பின்புலம் நிறைய உண்டு .ஒரு சிறு பிணக்கு காரணமாய் , கண்ணதாசன் இதில் பாடல் எழுதவில்லை .

ஜி ராமநாதன் இசை . பாடல் கம்போசிங் நடக்கிறது . பாடல் எழுத பட்டுக்கோட்டையார் வந்திருக்கிறார். அவரிடம் ராமநாதன் வாசித்து காட்ட, பட்டுக்கோட்டை எழுந்து விடுகிறார். 'இதுக்கு கண்ணதாசன் ஒருவர் தான் எழுத முடியும்' என்று சொல்லிவிட்டு, பதில் எதிர்பாராமல் வெளியே போய்விடுகிறார். எல்லோருக்கும் சூழல் தெரியும். யார் போய் கண்ணதாசனிடம் சொல்லி கூட்டி வருவது ? 

ஒருவழியாக, 'ராமநாதன் காத்து இருக்கிறார் ,உங்களை கையோடு கூட்டி வரச்சொன்னார் ' என்று கண்ணதாசனை கூட்டி வந்தார்களாம். அவரும் எந்த கம்பெனி ? என்ற கேள்விக்கு, 'நீங்கள் கவிஞர் கண்ணதாசனாய் இங்கே வந்து இருக்கிறீர்கள் ' என்று சொல்லி மாடிக்கு கூட்டி வந்தார்கள். டைரக்டர், இசை அமைப்பாளர் என்று எல்லோரும் காத்திருக்க, ராமநாதனுக்கு வணக்கம் சொல்லி, சந்தங்களை கேட்டாராம். 

ஐந்து நிமிடத்திற்குள் பாட்டு தயார். நம்பமுடிகிறதா ? சரஸ்வதி அருகிலே இருக்க, கவலை எதற்கு ?"கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே " இதுதான் பாடல் (இதில் ஒரு வரி வரும் -பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே, பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே - இதுவும் பானுமதி மாறி வரும் வானகத்து மீதே - என்ற வரிகள் பற்றி பின்னால் விவரமாய் பேசலாம்/பேசுவோம் )

பாடலை எடுத்துக்கொண்டு பக்கத்துக்கு அறையில் இருக்கும் ALS  அவர்களிடம் காட்டுகிறார்கள். உடனே ஒரு பிளாங் செக்  எழுதி எடுத்து வருகிறார். கண்ணதாசனும் கைநீட்டி வாங்கவில்லை . ராமநாதன் தான் வாங்கி அவரிடம் கொடுத்தாராம். எல்லோருக்கும் ஒரு வந்தனம் சொல்லிவிட்டு கண்ணதாசன் கிளம்பி விட்டார். 

இந்த படத்தில் கண்ணதாசன்  எழுதிய ஒரு ஒரு பாடல் இதுதான். மற்றைய பாடல்களும் அருமையானவை ,

நான் தேடி தேடி ரசிப்பதன் காரணம், கண்ணதாசன் என்ற  மகா பெரிய கவிஞன் ஒரு குழந்தை போன்றவன். அவன் பாடல் பின்னே நிறைய சுவாரஸ்யமான சம்பவம் உண்டு . எந்த பொழுதிலும் பாடல் எழுத யோசித்ததாய் சொல்வார் இல்லை . ரசிப்போம்  மகிழ்வோம் அன்புடன் பேசாலைதாஸ்

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ கன்னி இளமானே


கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ கன்னி இளமானே

வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே

வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே

வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே

வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே


கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ கன்னி இளமானே


அன்ன நடை பின்னுவதேன் 

கன்னி இளமானே... ஆ... ஆ... ஆ... ஆ... 


அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளமானே

யார் விழிகள் பட்டனவோ கன்னி இளமானே

சின்ன இடை மின்னலெல்லாம் 

கன்னி இளமானே

தென்றல் தந்த சீதனமோ கன்னி இளமானே


கார்கு ழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே

காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே

கார் குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே

காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே

பார்வையிலே நோய் கொடுத்தாய் 

கன்னி இளமானே

பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே


பல் வரிசை முல்லை என்றால் 

கன்னி இளமானே... ஏ... ஏ... ஏ... ஆ...


பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளமானே

பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளமானே

பானுமதி மாறி வரும் வானகத்து மீனே

பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே


கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ கன்னி இளமானே



திங்கள், 10 மே, 2021

உலவும் தென்றல் காற்றினிலே...

 உலவும் தென்றல் காற்றினிலே...

🌹சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?,
🌹வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,
🌹பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…,
🌹வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்,
🌹நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,
🌹ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,
🌹ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?,
🌹அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,
🌹பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா,
🌹 உலவும் தென்றல் காற்றினிலே, போன்ற பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கவில்லை.
“ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே... என்ற முதலாளி திரைப்படத்தில் வரும் பாடலை கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு அவர்கள் அந்தப் பாடலிலே ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக்கொண்டு நடப்பதைக் கண்டு பூரிப்படைகிறது
இலக்கியத்துக்கு நிகராகத் திரைப்படப் பாடல்களும்கூட நிலைத்து நிற்கமுடியும் என்பதற்கு அண்ணன் கா.மு.ஷெரீப் எழுதிய பல பாடல்களை எடுத்துக்காட்டலாம்.” என்று புகழாரம் சூட்டினார் மு.கருணாநிதி.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குன்னாகம் என்ற ஊரிலுள்ள தேநீர்க் கடையொன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அப்போது அங்கிருந்த வானொலிப் பெட்டியில் ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை’ என்ற கவியின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அதைக் கேட்ட அந்த இளைஞன் உணர்ச்சி வயப்பட்டு “கெட்டவருடன் சேர்ந்து பெற்ற தாயின் மனதை நோகடித்தவன் நான்;
நன்றி கெட்டவன்” என்று குமுறி அழுதிருக்கிறார்.
“இப்படி திடீரென்று தேநீர்க் கடையில்தான் உன் தவறு புரிந்ததா? “ என அவனிடம் கடைக்காரர் கேட்டபோது அதற்கு அவன்,
“ஆமாம், இந்தப் பாடல் என் மனத்தை மாற்றிவிட்டது. இனி என் தாயை உயிரினும் மேலாகக் கொண்டாடிக் காப்பாற்றுவேன். உங்களுக்கு என் நன்றி” என்று கூற, அதற்கு அந்தக் கடைக்காரர்,
“உன் நன்றிக்கு உரியவர் தமிழ் முழக்கம் கா. மு. ஷெரிப். அவர்தான் இந்தப் பாடலை எழுதியவர்” என்றாராம்.
சிலோன் விஜயேந்திரன் எழுதியுள்ள ‘அறுபதாண்டு காலத் திரைப்பாடல்கள்’ என்ற நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.
“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” என்றார் அவர்.
அவர் சொன்னதற்கேற்ப இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது. இந்தப் பாடல் ‘அன்னையின் ஆணை’ படத்தில் இடம் பெற்றது.
பாடலாசிரியராக புகழ்பெற்ற அதேசமயம் அவர் பெண் தெய்வம், புது யுகம் படங்களுக்கான வசனத்தையும் எழுதினார்.
கா.மு. ஷெரீப் தனக்கென ஒரு கொள்கை வகுத்திருந்தார். “அழைத்தால் வருவோம், வாய்ப்பு கொடுத்தால் பாடுவோம், யாரையும் சார்ந்து வாழ மாட்டோம், யாரிடமும் எதையும் கேட்க மாட்டோம்” என்ற கொள்கைப்படியே வாழ்ந்த அவர்
1994-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி காலமானார். தமிழ்த் திரையிசையும், தமிழ்கூறு நல்லுலகும் கவி கா.மு.வை என்றென்றும் மறக்காது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்,,,,

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் பேசாலைதாஸ்


உடல் ஊனம் பற்றி கவிஞர் கண்ணதாசன் நிறைய பாடல்கள் எழுதியுள் ளார். அதில் மிகச்சிறப்பான பாடல் பாகப்பிரிவினை என்ற படத்திற்காக எழுதி தங் கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ? உங்கள் அங் கத்திலே குறைவிருந்தாலும், அன்பு குறைவதுண்டோ என்று மனைவி கேட் கும் பாடல் அது, அந்த பாடலை பற்றி நான் இங்கு சிலாகிக்க வரவில்லை, ஆனால் அதே சூழ்னிலையில் எல்லாம் உனக்காக என்ற படத் தில், கவிஞர் எழுதிய பாட லின் கருத்துக்களை அன்பு தம்பதியினர் கேட்டு இனபம் கொள்ளவேண்டும் என்பதற்காக இதை பதிவு செய்கின்றேன்.

விபத்தில் கால்களை இழந்த மனைவிக்கு கணவன் ஆறுதல் சொல்லும் வித மாக கவியரசர் எழுதிய இந்த பாடல் ஆழமான பொருள் நிறைந்த அற் புதம்! அவனது ஒவ்வொரு வரிக்கும் பதிலாக தான் நடக்க முடியாதவள் என மனைவி விரக்தியில் கூற, அந்த தாழ்வு மனப்பான்மையை தகர்த் திடும் விதமாய், தன்ன ம்பிக்கை அளிக்கும் உறுதியாய்  கணவனின் வார்த்தைகள்...

கணவன்: மலரும் கொடியும் பெண் என்பார்! மதியும் நதியும் பெண் என்பார்!

மனைவி: மலரும் கொடியும் நடப்பதில்லை!

கண: அவை மணம் தர என்றும் மறப்பதில்லை!

க: கோவிலில் விளங்கும் சிலை போலே என் குலத்தில் விளங்கும் திருமகளே!"

ம: கோவில் சிலைகள் நடப்பதில்லை!

க: அதைக் குறையெனக் கலைகள் வெறுப்பதில்லை!

க: தேன் மணம் கமழும் பூ மகளே என் சிந்தையில் மலர்ந்த தாமரையே!"

ம: தாமரை மலரரும் நடப்பதில்லை!"

க: "அதை தழுவும் கதிரவன் வெறுப்பதில்லை!"

"நெஞ்சினில் ஒன்றாய் நிறைந்துவிட்டோம்

நினைவினில் குறைகள் வருவதில்லை!

கண்களில் ஒன்றாய் கலந்துவிட்டோம்

இனி காட்சிகள் வேறாய் தெரிவதில்லை!"

முத்திரை பதிப்பதாய் அமையும் இறுதி வரிகள்!

 கவியரசரின் கவிவரிகள் மிக சிறப்பு! 

"எல்லாம் உனக்காக" என்ற திரைப்படத்தில் K V மகாதேவன் அவர்களின் இசையில், டி. எம். எஸ். சுசீலா அம்மா குரல்களில் மிக அருமையான பாடல் இதோ உங்களுக்கா! பேசாலைதாஸ்




புதன், 3 பிப்ரவரி, 2021

இயற்கை என்னும் இளைய கன்னி!

இயற்கை என்னும் இளையகன்னி! பேசாலைதாஸ்

இந்த பாடலைப்பற்றி சிலா கிக்கும் முன்னர் அந்த பாடல் இடம் பெற்ற சாந்தி நிலையம் பற்றி சில குறிப் போடு, ஆரம்பிக்கின் றேன். இந்த படம் Sound of Music என்ற ஆங்கி லப்படத் தின் தழுவல் ஆகும். அந்த படத்தில் வரும் கதாநாய க்ன் போலவே ஜெமினி யின் நடிப்பும் இருக்கின்றது. அந்தபடத்தில் வரும் பாடல், கடவுள் ஒரு நாள் உலகைக்காண தனி வந்தாரம்,,, என்ற பாடலும் Do Re Me என்ற ஆங்கிலபாடலின் நகலாகும். 


நான் இங்கு சொல்லவருவது இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடல், காரணம் பாடும் நிலாவான பாலுவின் குரலில் வந்த தமிழ்த் திரையுலகின் முதல் பாடல் என்ற சிறப்பு இந்த பாடலுக்கு உண்டு. வெளி வராத ஓட்டல் ரம்பாவை விட்டுவிடுவோம் .யாரும் கேட்டதில்லை.மக்கள் திலகம் வாய்ப்பளித்தாலும் நாம் கேட்கும் போது சாந்தி நிலையம் தான் முந்திக் கொண்டது. முதல் பாடலி லேயே நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட குரலோடு இணைந் தது இசையரசி குரல். அத்தனை பாடல்களும் சிறப்பாக வந்திருந் தாலும் பாலுவின் குரலில் ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம். 


இய ற்கை எனும் அந்த இளைய கன்னியை எப்படி மறப்பது? . ஆர ம்ப இசை ஆரம்பிக்கும்போதே புல்லரிக்கும் அந்த ஆலா பனை. ஆ...ஆ..ஆ.. அஹா...ஆ..ஆ..கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகள். சுற்றிலும் பசுமை போர்த்த காட்சிகள். நடுவில் அமைதியான நதி. ஆண் குரலும் பெண் குரலும் சங்கமமாக சுற்றிலும் இயற்கை சூழல். நதியைக் கிழித்துக் கொண்டு விரையும் படகை வித வித மான கோணங்களில் படமாக்குகிறார் அந்த படப்பிடிப்பாளர்.. காதல் மன்னனு க்கு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. காரணம் அந்த சூழ்நிலக்கு தக்கவாறு, கவிஞரின் கற்பனை இங்கே தறி கெட்டு பறக்கிறது. 


மெல்லிசை மன்னர் வரிகளில் மனதை பறிகொடுக்கிறார். பாட்டு க்கேற்ற கதைக்கேற்ற புறச்சூழல், எல்லாவற்றையும் ஜோடி ஜோடி யாகப் படைத்த இறைவன் இந்த இயற்கையை மட்டும் தனி யாக ஏன் விட்டுவிட்டான்?. யாரும் யோசிக்காத கோணம். எப்போதும் இளமையாக காட்சியளிக்கும் இந்த கன்னிக்காக கவலைப்படுகி றார் என் கவி ஆசான் கவியரசு .அவளது ஏக்கத்தை அப்படியே பல் லவியாக வடிக்கிறார். இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகி றாள் துணையை எண்ணி சொல்லிப் பார்க்கும்போதே சுகமாக இருக்கிறது. மன்னரின் மெட்டில் கேட்கும் போது சொல்லவும் வேண்டுமா?. 


எனக்கென் னவோ, பாடலை அழகாக்குவது மெட்டல்ல வரிகள் தான் என்பது எனது வாதம் . அழகான இசையோடு வரிகளும் இணையும் போது, அமுதும் தேனும் எதற்கு என எண்ணத்தோன்று கின்றது. இப்படித் தான் அமைய வேண்டுமென எழுதப்பட்ட வரி கள். இயற்கையெனும் கன்னியின் ஏக்கம் இப்படித் தான் இருக்கு மோ?. அந்த ஏ....ங்குகிறா...ள் செமையாக செதுக்கப்பட கன்னியை கலக்கலாக தந்திருப்பார் மெல்லிசை மன்னர்.


 கவிஞரின் சரணத் தில் சல்லாபம் கொஞ்சம் தூக்கலாக. ஆணின் ஆசை அலை பாய் கிறது. பெண்மை கொஞ்சம் தடை போடுகிறது. பொன்னிறத்து மெல்லிடையில் பூ..வாட என ஆணின் தவிப்பு. இடையில் பூ ஆடுகிறதா அல்லது வாடுகி றதா?. என கவிஞரிடம் மெல்லக் கேட்க தோன்றுகின்றது, அப்படி ஒருவேளை கேட்டுவிட் டால்,,,,. எப்படி வேண்டுமானாலும் வைத் துக்கொள் என்பார்.


 வாடிப்போகிறதே என்ற ஏக்கமாகவே நமக்குத் தெரிகிறது. கார ணம் அந்த கட்டழகியின் மறு மொழி. பொட்டு வைத்த வட்ட முகம் நீராட என்கிறது. காதல் என்பது தெய்வீகம் கண்ணே.!.. கரம் பற்ற வேண் டாம் கனியிதழ் உண்ண வேண்டாம்.பொன் மேனி தழுவ வேண் டாம் பொழுதெல்லாம் பேச வேண்டாம். நீ அங்கே நிற்க நான் இங்கே நிற்க, பூரிப்போடு பருகலாம். பெண்மை மெல்ல நகை செய்கிறது. கண்ணால் கொஞ்சம் கவி பாடுகிறது. கவிஞ ரின் கற்பனைக்கு விருந்தாகிறது. 

தாமரையாள் ஏன் சிரித்தாள்?. தலைவனுக்கோ தூதுவிட்டாள். தலையை விரித்து தென்னை போராடுதோ எதனை நினைத்து இள நீராடுதோ கன்னி உன்னைக் கண்டதாலோ தன்னை எண் ணிக் கொண்டதாலோ?. பாலுவின் குரலில் போதை கொஞ்சம் ஏறுகிறது. கண்ட...தா...லோ கொண்ட...தா..லோ கொஞ்சிக் கொண்டு போகிறது. அதே போதை, அந்த குழலுக்கும் ஏற, பூவை க்கும் கொஞ்சம் போதை. இளமை கொலுவிருக்கும் எழில் கொஞ் சும் மேனி பசுமை போர்த்திய மரத்திற்கு உவமையாகிறது. இலை களில் மறைந்த கனிகளை கண் வைத்த கள்வனைக் கொஞ்சம் தேடுகிறது.


பொல்லாத கவிஞர் இங்கே புதுப் பாதை போடுகிறார். இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ கட்டிக்கொண்ட கள்வன் யாரோ கள்வனுக்கும் என்ன பேரோ?. கனவுகளை கண்களில் தேக்கிகொண்டு இதயத் தில் ரகசிய ராகம் பாடும் காதல் மன்னன்.மேனியில் மேய்ந்த கண்கள் இப் போது தீனியைத் தேடுகிறது.பாலுவின் குரலில் மெரு கேறுகிறது கவிஞரின் சரணம். மலையைத் தழுவிச் செல்லும் நீரோட்டமே கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே மஞ்சள் வெயில் நேரம் தானே மஞ்சம் ஒன்று போடலாமே. கரையை தட விச் செல்லும் காற்றோட்டமே காலை மறைத்துச் செல்லும் ஆற் றோட்டமே இன்னும் கொஞ்சம் நேரம் தானே அந்தி பட்டு பேச லாமே. 


ஆஹா என்னே அருமை! இசையும் இசைக்கேற்ற வரிகளும், ரச னைமிக்கவர்களை எங்கேயோ அழைத்து செல்கின்றது, ரசனை வாழ்வுக்கு எவ்வளவு முக்கியம் என் பதை ரசனைமிக்கவர்கள் தான் விளக்கம் சொல்லமுடியும். விழி நிறைய ஆசைகள் தான், வாழ்க்கையை விழாமல் வைக்கிறது. சின்னச் சின்ன சில்மிஷங் கள் தான் காலமெல்லாம் களிப்புற வைக்கிறது. காலம் கடந்தும் நாம் பேசிக் களிக்க எவ்வளவு இனிமையான பாடல். மலையைத் தடவி கரையைத் தழுவி காலை நனைத்துச் செல்லும் இயற்கை யின் படைப்புகளை விஞ்சி நிற்கிறது அந்த மேதைகள் படைத்த விருந்து.நினைவுகள் மட்டுமே உணவானால் அதை மட்டுமே உண்டு உயிர் வாழத் தோன்றுகிறது. எல்லாக் கதவுகளையும் தாளிட்டு விட்டு சேர்த்து வைத்த செல்வ த்தை கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கிடப்பதில் என்ன பயன் என்று தெரியவில்லை.மனிதனின் ஒவ்வொரு நொடியும் ரசிக்கத் தான் இத் தனை படைப்புகளும். ரசனை குறைந்து போனதால் தான் வாழ்க்கையில் வெறுமை படர்கிறது.எடுத்துப் போக எதுவு மில்லை.ரசித்து மகிழ இங்கே நிறையவே இருக் கிறது. ரசிப் போம் அன்போடு வாழ்வோம் அன்பன் பேசாலைதாஸ்



சனி, 23 ஜனவரி, 2021

0027 கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றியுள்ள நாய்கள்

கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக்கும் நன்றியுள்ள நாய்கள் பேசாலைதாஸ்

 

கையில் வைத்துக் காத்திரு ந்தால் காலடியில் காத்திருக் கும் நன்றியுள்ள நாய்கள் உள்ள நாடு, இது நோர்வே நாட்டு நாய்கள் என்ன, எல்லா நாட்டு நாய்களுக்கும் பொருந்தும், ஆனால் அந்த நாய்கள் எசமான் கையில் இருக்கும் உணவை உண்டு விட்டு, அவன் காலடியிலே கிடக்கும், ஆனால் மனித நாய்கள் அப்படியல்ல, உண்ட அடுத்த கனமே அடி யோடு மறக்கும் மனம் கொண்டவன், மனிதன் மட்டுமே, அதனால் தான் வள்ளுவன் சொன்னான், உய்வில்லை செய் நன்றி மறந்தவர்களுக்கு என்று. 

சுயநலம் குடிகொண்டவர்கள் கையிலெடுக்கும் மிகப்பெரிய ஆயுதம் அன்புதானே? ராஜபாட் ரங்கத்துறையில் ஒரு கட்டம், ஒரு ஜமிந்தாரின் அண்ணன் என்று வேசம் போடும் படி சொந்த அண்ணனையே கேட்கின் றான் தம்பி. ``உங்கள் தம்பி நன்றாக இருக்கவேண்டும் என்று உங்களுக்கு அக்கறை இல்லையா? எனக்காக இந்த சின்ன உதவியைக்கூட செய்யக்கூ டாதா'' என்று அண்ணனிடம் வாதிடுகிறான். எத்தனையோ வேஷங்கள் போட்டிருந்தாலும், நிஜமான தம்பிக்கு அண்ணனாக நடிக்கும் வேஷத்தை மட்டும்தான் நான் போட்டதில்லை. அதையும் உனக்காக போடுகிறேன் என்று ஒப்புக்கொள்கிறார் அண்ணன்.

இப்படி ஒரு சூழலுக்கு பாடல் எழுதவேண்டும் என்றால்.... கவியரசருக்குக் கசக்குமா என்ன? கையில் வைத்துக் காத்திருந்தால் காலடியில் காத்திருக் கும் நன்றியுள்ள நாய்கள் உள்ள நாடு  என்று எழுதுகிறார். கையில் நாம் எதை வைத்திருக்கிறோம் என்பது கூடத் தெரியத்தேவையில்லை. ஏதே னும் வைத்திருக்கிறோம் என்று தெரிந்தால் போதும். நம்மையே சுற்றிச் சுற்றி வரும் நாய்கள் போலத்தான் சில மனிதர்களும். ஆனால், ஒன்றுமி ல்லை என்று தெரிந்த அடுத்த கணம், அவர்களே உதறித்தள்ளியும் சென்று விடுவார்கள். 

ராமாயணத்தில் ராமனுக்கு மூன்று தம்பிகள். மகாபாரதத்தில் தருமனுக்கு நான்கு தம்பிகள். அண்ணன் சொல் தட்டாத தங்கக் கம்பிகள். தான் கேள்வி ப்பட்ட இதிகாசத்தில் வரும் தம்பிகள் அத்துணை அன்போடு இருந்தார் களே, நிஜத்தில் அப்படி இல்லையே.... அது நாடகமா? இது நாடகமா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

அர்த்தம் பொதிந்த கவியரசரின் பாடல் வரிகளும், `இந்த ராஜபார்ட்டு ரங்கதுரை ஏழையல்லவோ' என்று தழுதழுக்கும் டி.எம்.எஸ்.ஸின் குரலும், பாடல் முடியும் தருணத்தில் தாளம் போடப் பயன்படுத்திய டேபிள் டென் னிஸ் மட்டைகளை அருகிலிருந்த இருக்கையில் வைத்த கையோடு தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாய் பொத்தியபடி வெளியேறும் சிவாஜிகணேசனின் நடிப்பும், இந்தப்பாடலை வேறு ஒரு உயரத்துக்கு கொண்டு சென்றது. இப்போதும் எங்கேயாவது எப்போதாவது நன்றி மறத்தல் என்ற உணர்வை சந்திக்கும்போது கண்களில் தானாக கண்ணீர் துளிர்க்கும். உள்ளுக்குள் இந்தப்பாடல் ஆற்றுப்படுத்துவதாய் ஒலிக்கும்.

மனிதனுக்கு இந்த சுயநலம் என்ற எண்ணம் மட்டும் தோன்றாமலே இருந் தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? உண்மையில் சுயநலத்தை துறப்பது பெரிய காரியமே அல்ல. நமது சுயநலத்தின் வட்டத்தை கொஞ்சம் கொஞ்ச மாக விரிவுபடுத்தினால் போதும். நாம், நம் குடும்பம், நம் நண்பர்கள், நம் உறவுகள், நம் ஊர், நம் இனம், நம் நாடு, நம்முடைய உலகம்...சுயநலத்தை தொலைத்துவிட்டால் வெளிஉலகம் மட்டுமல்ல... நம் அக உலகமும் மகிழ்ச்சியால் பூத்துத் திளைக்கும்தானே? அன்பர்களே பாடலை கேளுங்கள் அன்புடன் பேசாலைதாஸ் 


                         

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...