இயற்கை என்னும் இளையகன்னி! பேசாலைதாஸ்
இந்த பாடலைப்பற்றி சிலா கிக்கும் முன்னர் அந்த பாடல் இடம் பெற்ற சாந்தி நிலையம் பற்றி சில குறிப் போடு, ஆரம்பிக்கின் றேன். இந்த படம் Sound of Music என்ற ஆங்கி லப்படத் தின் தழுவல் ஆகும். அந்த படத்தில் வரும் கதாநாய க்ன் போலவே ஜெமினி யின் நடிப்பும் இருக்கின்றது. அந்தபடத்தில் வரும் பாடல், கடவுள் ஒரு நாள் உலகைக்காண தனி வந்தாரம்,,, என்ற பாடலும் Do Re Me என்ற ஆங்கிலபாடலின் நகலாகும்.
நான் இங்கு சொல்லவருவது இயற்கை என்னும் இளைய கன்னி என்ற பாடல், காரணம் பாடும் நிலாவான பாலுவின் குரலில் வந்த தமிழ்த் திரையுலகின் முதல் பாடல் என்ற சிறப்பு இந்த பாடலுக்கு உண்டு. வெளி வராத ஓட்டல் ரம்பாவை விட்டுவிடுவோம் .யாரும் கேட்டதில்லை.மக்கள் திலகம் வாய்ப்பளித்தாலும் நாம் கேட்கும் போது சாந்தி நிலையம் தான் முந்திக் கொண்டது. முதல் பாடலி லேயே நம் உள்ளங்களை கொள்ளை கொண்ட குரலோடு இணைந் தது இசையரசி குரல். அத்தனை பாடல்களும் சிறப்பாக வந்திருந் தாலும் பாலுவின் குரலில் ஏதோ ஒரு இனம் புரியாத இன்பம்.
இய ற்கை எனும் அந்த இளைய கன்னியை எப்படி மறப்பது? . ஆர ம்ப இசை ஆரம்பிக்கும்போதே புல்லரிக்கும் அந்த ஆலா பனை. ஆ...ஆ..ஆ.. அஹா...ஆ..ஆ..கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகள். சுற்றிலும் பசுமை போர்த்த காட்சிகள். நடுவில் அமைதியான நதி. ஆண் குரலும் பெண் குரலும் சங்கமமாக சுற்றிலும் இயற்கை சூழல். நதியைக் கிழித்துக் கொண்டு விரையும் படகை வித வித மான கோணங்களில் படமாக்குகிறார் அந்த படப்பிடிப்பாளர்.. காதல் மன்னனு க்கு உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. காரணம் அந்த சூழ்நிலக்கு தக்கவாறு, கவிஞரின் கற்பனை இங்கே தறி கெட்டு பறக்கிறது.
மெல்லிசை மன்னர் வரிகளில் மனதை பறிகொடுக்கிறார். பாட்டு க்கேற்ற கதைக்கேற்ற புறச்சூழல், எல்லாவற்றையும் ஜோடி ஜோடி யாகப் படைத்த இறைவன் இந்த இயற்கையை மட்டும் தனி யாக ஏன் விட்டுவிட்டான்?. யாரும் யோசிக்காத கோணம். எப்போதும் இளமையாக காட்சியளிக்கும் இந்த கன்னிக்காக கவலைப்படுகி றார் என் கவி ஆசான் கவியரசு .அவளது ஏக்கத்தை அப்படியே பல் லவியாக வடிக்கிறார். இயற்கை என்னும் இளைய கன்னி ஏங்குகி றாள் துணையை எண்ணி சொல்லிப் பார்க்கும்போதே சுகமாக இருக்கிறது. மன்னரின் மெட்டில் கேட்கும் போது சொல்லவும் வேண்டுமா?.
எனக்கென் னவோ, பாடலை அழகாக்குவது மெட்டல்ல வரிகள் தான் என்பது எனது வாதம் . அழகான இசையோடு வரிகளும் இணையும் போது, அமுதும் தேனும் எதற்கு என எண்ணத்தோன்று கின்றது. இப்படித் தான் அமைய வேண்டுமென எழுதப்பட்ட வரி கள். இயற்கையெனும் கன்னியின் ஏக்கம் இப்படித் தான் இருக்கு மோ?. அந்த ஏ....ங்குகிறா...ள் செமையாக செதுக்கப்பட கன்னியை கலக்கலாக தந்திருப்பார் மெல்லிசை மன்னர்.
கவிஞரின் சரணத் தில் சல்லாபம் கொஞ்சம் தூக்கலாக. ஆணின் ஆசை அலை பாய் கிறது. பெண்மை கொஞ்சம் தடை போடுகிறது. பொன்னிறத்து மெல்லிடையில் பூ..வாட என ஆணின் தவிப்பு. இடையில் பூ ஆடுகிறதா அல்லது வாடுகி றதா?. என கவிஞரிடம் மெல்லக் கேட்க தோன்றுகின்றது, அப்படி ஒருவேளை கேட்டுவிட் டால்,,,,. எப்படி வேண்டுமானாலும் வைத் துக்கொள் என்பார்.
வாடிப்போகிறதே என்ற ஏக்கமாகவே நமக்குத் தெரிகிறது. கார ணம் அந்த கட்டழகியின் மறு மொழி. பொட்டு வைத்த வட்ட முகம் நீராட என்கிறது. காதல் என்பது தெய்வீகம் கண்ணே.!.. கரம் பற்ற வேண் டாம் கனியிதழ் உண்ண வேண்டாம்.பொன் மேனி தழுவ வேண் டாம் பொழுதெல்லாம் பேச வேண்டாம். நீ அங்கே நிற்க நான் இங்கே நிற்க, பூரிப்போடு பருகலாம். பெண்மை மெல்ல நகை செய்கிறது. கண்ணால் கொஞ்சம் கவி பாடுகிறது. கவிஞ ரின் கற்பனைக்கு விருந்தாகிறது.
தாமரையாள் ஏன் சிரித்தாள்?. தலைவனுக்கோ தூதுவிட்டாள். தலையை விரித்து தென்னை போராடுதோ எதனை நினைத்து இள நீராடுதோ கன்னி உன்னைக் கண்டதாலோ தன்னை எண் ணிக் கொண்டதாலோ?. பாலுவின் குரலில் போதை கொஞ்சம் ஏறுகிறது. கண்ட...தா...லோ கொண்ட...தா..லோ கொஞ்சிக் கொண்டு போகிறது. அதே போதை, அந்த குழலுக்கும் ஏற, பூவை க்கும் கொஞ்சம் போதை. இளமை கொலுவிருக்கும் எழில் கொஞ் சும் மேனி பசுமை போர்த்திய மரத்திற்கு உவமையாகிறது. இலை களில் மறைந்த கனிகளை கண் வைத்த கள்வனைக் கொஞ்சம் தேடுகிறது.
பொல்லாத கவிஞர் இங்கே புதுப் பாதை போடுகிறார். இலைகள் மரத்துக்கென்ன மேலாடையோ இடையை மறைத்துக் கட்டும் நூலாடையோ கட்டிக்கொண்ட கள்வன் யாரோ கள்வனுக்கும் என்ன பேரோ?. கனவுகளை கண்களில் தேக்கிகொண்டு இதயத் தில் ரகசிய ராகம் பாடும் காதல் மன்னன்.மேனியில் மேய்ந்த கண்கள் இப் போது தீனியைத் தேடுகிறது.பாலுவின் குரலில் மெரு கேறுகிறது கவிஞரின் சரணம். மலையைத் தழுவிச் செல்லும் நீரோட்டமே கலைகள் பழகச் சொல்லும் தேரோட்டமே மஞ்சள் வெயில் நேரம் தானே மஞ்சம் ஒன்று போடலாமே. கரையை தட விச் செல்லும் காற்றோட்டமே காலை மறைத்துச் செல்லும் ஆற் றோட்டமே இன்னும் கொஞ்சம் நேரம் தானே அந்தி பட்டு பேச லாமே.
ஆஹா என்னே அருமை! இசையும் இசைக்கேற்ற வரிகளும், ரச னைமிக்கவர்களை எங்கேயோ அழைத்து செல்கின்றது, ரசனை வாழ்வுக்கு எவ்வளவு முக்கியம் என் பதை ரசனைமிக்கவர்கள் தான் விளக்கம் சொல்லமுடியும். விழி நிறைய ஆசைகள் தான், வாழ்க்கையை விழாமல் வைக்கிறது. சின்னச் சின்ன சில்மிஷங் கள் தான் காலமெல்லாம் களிப்புற வைக்கிறது. காலம் கடந்தும் நாம் பேசிக் களிக்க எவ்வளவு இனிமையான பாடல். மலையைத் தடவி கரையைத் தழுவி காலை நனைத்துச் செல்லும் இயற்கை யின் படைப்புகளை விஞ்சி நிற்கிறது அந்த மேதைகள் படைத்த விருந்து.நினைவுகள் மட்டுமே உணவானால் அதை மட்டுமே உண்டு உயிர் வாழத் தோன்றுகிறது. எல்லாக் கதவுகளையும் தாளிட்டு விட்டு சேர்த்து வைத்த செல்வ த்தை கட்டிப் பிடித்துக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கிடப்பதில் என்ன பயன் என்று தெரியவில்லை.மனிதனின் ஒவ்வொரு நொடியும் ரசிக்கத் தான் இத் தனை படைப்புகளும். ரசனை குறைந்து போனதால் தான் வாழ்க்கையில் வெறுமை படர்கிறது.எடுத்துப் போக எதுவு மில்லை.ரசித்து மகிழ இங்கே நிறையவே இருக் கிறது. ரசிப் போம் அன்போடு வாழ்வோம் அன்பன் பேசாலைதாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக