கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே,,,,,,,, பேசாலைதாஸ்
ஒரு பாடல் உருவாக பல சுவையான சம்பவம் உண்டு. அதிலும் கண்ணதாசன் அவர்கள் பாடலில் பின்புலம் நிறைய உண்டு .ஒரு சிறு பிணக்கு காரணமாய் , கண்ணதாசன் இதில் பாடல் எழுதவில்லை .
ஜி ராமநாதன் இசை . பாடல் கம்போசிங் நடக்கிறது . பாடல் எழுத பட்டுக்கோட்டையார் வந்திருக்கிறார். அவரிடம் ராமநாதன் வாசித்து காட்ட, பட்டுக்கோட்டை எழுந்து விடுகிறார். 'இதுக்கு கண்ணதாசன் ஒருவர் தான் எழுத முடியும்' என்று சொல்லிவிட்டு, பதில் எதிர்பாராமல் வெளியே போய்விடுகிறார். எல்லோருக்கும் சூழல் தெரியும். யார் போய் கண்ணதாசனிடம் சொல்லி கூட்டி வருவது ?
ஒருவழியாக, 'ராமநாதன் காத்து இருக்கிறார் ,உங்களை கையோடு கூட்டி வரச்சொன்னார் ' என்று கண்ணதாசனை கூட்டி வந்தார்களாம். அவரும் எந்த கம்பெனி ? என்ற கேள்விக்கு, 'நீங்கள் கவிஞர் கண்ணதாசனாய் இங்கே வந்து இருக்கிறீர்கள் ' என்று சொல்லி மாடிக்கு கூட்டி வந்தார்கள். டைரக்டர், இசை அமைப்பாளர் என்று எல்லோரும் காத்திருக்க, ராமநாதனுக்கு வணக்கம் சொல்லி, சந்தங்களை கேட்டாராம்.
ஐந்து நிமிடத்திற்குள் பாட்டு தயார். நம்பமுடிகிறதா ? சரஸ்வதி அருகிலே இருக்க, கவலை எதற்கு ?"கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே " இதுதான் பாடல் (இதில் ஒரு வரி வரும் -பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே, பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே - இதுவும் பானுமதி மாறி வரும் வானகத்து மீதே - என்ற வரிகள் பற்றி பின்னால் விவரமாய் பேசலாம்/பேசுவோம் )
பாடலை எடுத்துக்கொண்டு பக்கத்துக்கு அறையில் இருக்கும் ALS அவர்களிடம் காட்டுகிறார்கள். உடனே ஒரு பிளாங் செக் எழுதி எடுத்து வருகிறார். கண்ணதாசனும் கைநீட்டி வாங்கவில்லை . ராமநாதன் தான் வாங்கி அவரிடம் கொடுத்தாராம். எல்லோருக்கும் ஒரு வந்தனம் சொல்லிவிட்டு கண்ணதாசன் கிளம்பி விட்டார்.
இந்த படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு ஒரு பாடல் இதுதான். மற்றைய பாடல்களும் அருமையானவை ,
நான் தேடி தேடி ரசிப்பதன் காரணம், கண்ணதாசன் என்ற மகா பெரிய கவிஞன் ஒரு குழந்தை போன்றவன். அவன் பாடல் பின்னே நிறைய சுவாரஸ்யமான சம்பவம் உண்டு . எந்த பொழுதிலும் பாடல் எழுத யோசித்ததாய் சொல்வார் இல்லை . ரசிப்போம் மகிழ்வோம் அன்புடன் பேசாலைதாஸ்
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே
வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே
வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
அன்ன நடை பின்னுவதேன்
கன்னி இளமானே... ஆ... ஆ... ஆ... ஆ...
அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளமானே
யார் விழிகள் பட்டனவோ கன்னி இளமானே
சின்ன இடை மின்னலெல்லாம்
கன்னி இளமானே
தென்றல் தந்த சீதனமோ கன்னி இளமானே
கார்கு ழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே
காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே
கார் குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே
காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே
பார்வையிலே நோய் கொடுத்தாய்
கன்னி இளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே
பல் வரிசை முல்லை என்றால்
கன்னி இளமானே... ஏ... ஏ... ஏ... ஆ...
பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளமானே
பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளமானே
பானுமதி மாறி வரும் வானகத்து மீனே
பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ கன்னி இளமானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக