வியாழன், 24 செப்டம்பர், 2020

0112 பாட்டும் பதமும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!

 மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன! பேசாலைதாஸ்


முதாய சீர்திருத்தக் கதைகள், குடும்பக் கதைகள், புராணக் கதைகள், வரலாற்று பின்புலம் கொண்ட கதைகள், இதனி டையே புது முயற்சிகள் என்று தமிழ்சினிமா கொஞ்சம் கொஞ் சமாக தன்னை மெருகேற்றிக் கொண்டு 1960களில் பல வகை யான திரையாடல்களை கண்டிருந்தது. இந்த படங்கள் அனைத் திற்கும் அதனதன் வசம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இருந்தார்கள். இதில் ஏ.பி.நாகராஜன்-சிவாஜி கணேசன் கூட்டணி என்றால் அதற்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தது.
அவர்கள் படங்களில் மிக மிக முக்கியமானதொரு கலைபடைப்பு ‘தில்லானா மோகனாம்பாள்’. திரையிசை திலகம் K.V.மகாதேவன் இசைக்கூட்டிய களஞ்சியம். இசையின் முக்கியத் துவத்தோடு வந்த இந்த படத்தின் பாடல்கள் இன்றும் ப்ரமாண் டாமாய் தெரிகிறது.
“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இந்த பாடலை கேட்பதை விட பார்ப்பது பேரழகு. பத்மினி, சிவாஜி, பாலையா, தங்கவேலு, ராமச்சந்திரன் போன்ற பெருங் கலைஞர்கள் சேரந்து உயிரூட்டிய பாடல். இந்த வரிசையில் முதலிடம் பத்மினிக்கு கொடுத்ததன் காரணத்தை அறிய வேண்டுமானால் இந்த பாடலின் படக்காட்சியை காண வேண்டும். பாடலுக்கு உயிர் சுசீலாவின் குரல், உடல் கண்ணதாசனின் வரிகள், சுவாசம் KV. மகாதேவனின் இசை.
பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சிவாஜி குழுவில் இருப்பவர்கள் அதை காண விரும்புகிறார்கள். ஆனால் சிவாஜி மறுக்கிறார். சிவாஜி படுக்கைக்கு சென்றதும் அவருக்கு தெரியாமல் மற்ற வர்கள் நிகழ்ச்சியை காண கிளம்புகிறார்கள். சிவாஜியும் அவர்களுக்கு தெரியாமல் தானும் வருகிறார். தனது தன்மானம் கெடாமல் மண்டபம் வந்து தனித்து நிகழ்ச் சியை காண ஒரு தூணின் பின்புறம் மறைந்திருந்து ரசிக்கிறார்.
பாடல் காட்சி தொடங்குகிறது. ஜதிகளும், மிருதங்க தாளங்களும் பின் பத்மினியின் பாதங்களும் அனைத்தும் ஒருசேரும்போது கண்ணதாசனின் பல்லவி....
"மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..
அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…என்று
மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன.."
‘இந்த சிலை அழகா’ என்று சொல்ல, சிலைபோல ஒவ்வொரு உடல்பாவங்களும்; அதை மறைந்திருந்து ரசிக்கும் சிவாஜியின் முகபாவங்களும் போட்டியிடத் தொடங்கும்.
"நவரசமும்ம் …….
முகத்தில் நவரசமும்..
மலர்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்..கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன"
‘நவரசமும்ம்ம்’ என்று தொடங்க பத்மினியின் நவரச உணர்வுகள் ஒரே பாய்ச்சலில் நடந்தேறும். நாட்டியப் பேரொளி என்று சும்மாவா சொன்னார்கள்!
"எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்..
பாவை என் பதம் காண நாணமோ….
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
தூயனே வேலவா…மாயனே சண்முகா"
மறைந்திருந்து பார்ப்பதை... அறிந்துகொண்டதை விளக்குவது போல ‘எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்’ என்று வரி.
வெட்கத்தோடு ரசிக்கும் சிவாஜியை பார்த்து “பாவை என் பதம் காண நாணமோ….
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா” என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்துவார் பத்மினி.
“தூயனே வேலவா…மாயனே சண்முகா” என்ற வரிமுடிந்து ‘சண்முகா’ என்று வரும் போது சிவாஜி முகம் சட்டென மலரும். அவர் தானே சண்முகசுந்தரம். மறைந்திரு க்கும் மாயன்! இந்த ஒரு இடத்தில் கண்ணதாசன் சொல்லாடல் இசைக்கு ஏற்றாற் போல வந்து விழும், ஆட ஆட என்று பகுதி சொல் அடைவாக வந்து விழும்.
மான் ஆட மலை யாட..நதியாட...
மங்கை இவள் நடனமாட….
கண் ஆட..மண் ஆட .ஒளியாட..இடையாட….
செல்வி இவள் கைகள் ஆட….
தூயனே வேலவா…மாயனே சண்முகா ,….எனையாளும் சண்முகா வா…"
இங்கு கண்ணதாசனும் KV.மகாதேவனும் போட்டி போட அந்த போட்டிக்கு, இருவருக்கும் வெற்றி என்று தீர்ப்பளிப்பது போல பத்மினியின் நடன அசைவுகள் ப்ரமிப்பாக இருக்கும்!
பாடலில் நட்டுவனார் தங்கவேலு ஜதி, ராமச்சந்திரனின் மிருதங்கம், சிவாஜிக்கு கீழே சிவாஜிக்கு தெரியாமல் நாட்டியம் ரசிக்கும் பாலையா என்று அவரவர் தோன்றும் காட்சிகளில் சிறப்பு செய்திருப்பார்கள். அதுவும் பாலையா ஒரு காட்சியில் தான் தவில்காரர் என்பதால் தன்னை அறியாமல் முன் அமர்ந்திருக்கும் பெண்ணின் முதுகில் இசைக்க அந்த பெண் திரும்பி பார்த்தும் அருகிலிருக்கும் சிலையில் வாசிக்கத்தொடங்குவார். பாலையாவின் உடல்மொழி ரசிக்க வேண்டிய ஒன்று.
ஐம்பது ஆண்டுகள் மேல் ஆகியும் ஒரு முழுப்பாடலாக அத்தனை கொண்டாட்டம் நிறைந்த பாடல் இது. இந்த பாடலில் ஒவ்வொரு காட்சியும் அழகு நிறைந்தது.
பத்மினி பேரழகு! இந்த படத்தில் நடிக்கும்போது பத்மினிக்கு வயது 36 என்பது உபதகவல். யோசித்து பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் பத்மினியை போலொரு நடிகை யாரும் இல்லை என்பது தான் உண்மை.
அன்புடன் பேசாலைதாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...