செவ்வாய், 19 பிப்ரவரி, 2019
கண்ணதாசனனின் பாடல்களில் இலக்கியப்பார்வை தொடர் மூன்று!
கண்ணதாசனனின் பாடல்களில் இலக்கியப்பார்வை தொடர் மூன்று!
திங்கள், 18 பிப்ரவரி, 2019
சனி, 9 பிப்ரவரி, 2019
பாட்டும் பதமும் 95 "அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,," பேசாலைதாஸ்
"அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,," பேசாலைதாஸ்
இதற்கு மாறாக வெண்ணிலாவில் தன் துன்பம் துடைக்கும் ஒரு புறநாணூற்றுப்பாரிபாடல் உண்டு. அதனை பாரிமக ளின் பாடல் என்பார்கள், முல்லைக்கு தேர் ஈர்ந்தானே அந்த பாரியின் வழிவந்த பாரியின் புத்திரிகளான அங்கவை, சங்கவை என்ற இரு சகோதரியின் பாடல் இது! ( ரஜனி நடித்த சிவாஜி படத்தில் வரும் அங்கவை, சங்கவை அந்த நகைச்சுவை அல்ல)
அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத்திங்கள் இவ்வெண்ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்; யாம் எந்தையும் இலமே.
(புறநானூறு:112)
அற்றைத்திங்கள் (திங்கள் என்பது மாதம்) அவ்வெண்ணிலவில், எம் தந்தையோடு, எதிரிகள் வெற்றி கொள்ளமுடியாத மலைகளோ நாம் இருந்தோம், இற்றைத்திங்கள், இவ்வெண்ணிலவில் எதிரி மன்னர்களினால், எங்கள் மலைகளை இழந்தோம், தந்தையும் இழந்தோம்! எதிரிகளால் தன்னுடைய பறம்பு மலை சூறையாடப்பட்டு, தந்தை வீழ்த்தப்பட்டு, யாருமற்று அனாதைகளாக ஆக்கப்பட்ட மகள்களின் அவலக் குரலை, அவர்களின் கண்ணீரைத் தாங்கி நிற்கிறது அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில் பாடல்.
சங்க கால காதல் சங்கதிகளை, பாரி காலத்து அற்றை வெண்ணிலவிலே என்ற அந்த வரிகளை என் கவி ஆசான் கவிஞர் கண்ணதாசன் கையாண்டு, சங்ககால பரம்பு மலையின் காதல் உணர்வுகளை, அன்றொரு நாள், அதே நிலவில், அவள் இருந்தாள் என் அருகில்,,,, என்று பாடுவதன் மூலம், சங்ககால இலக்கியத்தை இலகுவாக சினிமா பாடலுக்குள் புகுத்தும் விதை தெரிந்தவன் கவிஞன் கண்ணதாசன், இனி பாடலை கேட்டு நீங்களும் நிலாவை காதலியுங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்
வெள்ளி, 8 பிப்ரவரி, 2019
பாட்டும் பதமும் 94 "சின்னக்கண்ணன் அழைக்கின்றான். ராதையை பூங்கோதையை,,,," பேசாலைதாஸ்
"சின்னக்கண்ணன் அழைக்கின்றான். ராதையை பூங்கோதையை,,,," பேசாலைதாஸ்
நீங்கள் எல்லோரும் ஆவலோடு விரும்பிக்கேட்கும் பழைய பாடல் " ஒரு நாள் போதுமா? நான்பாட, நீ கேட்க இன்றொருநாள் போதுமா? இந்த பாடல் பாலையாவுக்காக, திருவிளையாடல் படத்தில், கார்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடல் அது! இது மட்டுமல்ல சின்னக்கண்ணன் அழக்கின்றான் என்ற பிர்பல்யமான பாடலை பாடியவரும் இவரே தான்!
கவிக்குயில் படத்தில் இடம் பெரும் இப்பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா 1945ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் சந்திரகுப்தம் என்னும் இடத்தில், பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தவர். வயலின், மிருதங்கம், கஞ்சிரா, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசி க்கும் திறன் பெற்றவர். சிறந்த இசையமைப்பாளர், பாடகருக்காக இரு முறை தேசிய விருதுகளை பெற்றவர். சின்னக்கண்ணன் அழைக்கி ன்றான் என்ற பாடலை இங்கு நான் பதிவு செய்வதற்கு ஒரு காரணம் உண்டு.
பாலமுரளி கிருஷ்ணாவுக்கு கர்நாடக மாநிலத்தில் ஆஸ்தான பாடகருக்கான விருது கிடைத்தவுடன், அவரை யாழ் பல்கலை க்கழகத்தின் நுன்கலைப்பீடம் அழைத்து கெளரவித்திருந்தது, இராமநா தன் மண்டபத்தில் அவருக்கான வரவேற்பு நடைபெற்றது, அதில் அவர் கர்நாடக இசை பற்றிய ஒரு விரிவுரை நடத்தினார். நிகழ்ச்சியின் முடி வில், அவரிடம் சின்னக்கண்ணன் அழக்கின்றான் என்ற பாடலை எங்க ளுக்காக பாடமுடியுமா? என்று அசட்டுத்துணிவுடன் சபையில் எழுந்து நின்று கேட்டேன், என் கோரிக்கைக்கு பலத்தகரஹோசம்!
இசைக்கருவிகள் இல்லை, ஹார்மோனியம் மட்டுமே இருந்தது, அதுவும் கர்நாடக இசை பற்றிய அவரது விரிவுரைக்காக அங்கு மேடையில் இருந்தது, சபையில் கரகோஷம் நின்றபாடில்லை, ஒரு நுன் கலைப்பீட இசை மாணவன் அந்த ஹார்மோனியத்தில் சின்னக் கண் ணன் அழைக்கின்றான் என்ற பாடலை மெதுவாக இசைக்க, கரஹோச த்தை சமாளிக்க பாலமுரளி கிருஸ்ணா அவர்கள் பாடத்தொடங்கினார்!
செவ்வாய், 5 பிப்ரவரி, 2019
பாட்டும் பதமும் 93 "வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்" பேசாலைதாஸ்
பாட்டும் பதமும் 93
"வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்" பேசாலைதாஸ்
இந்த பதிவினிலே கானா பாடல் பற்றி, உங்களோடு சிலாகிக்கலாம் என நினைக்கின்றேன். ஆப்பிரிக்க கறுப்பினச் சகோதரர்களால் இசைக்கப்பட்டு அமெரிக்க கறுப்பினச் சகோதரர்களால் வளர்க்கப்பட்ட ராப் இசையும் எளிய மக்களின் இசை வடிவமே! கண்டங்கள் கடந்து காலம் கடந்து இன்று உலகம் முழுவதும் பல்வேறு மொழிபேசும் மக்களால் பல்வேறு மொழிகளில் இசைக்கப்படுகிறது ராப். திரையிலும் தனியிசைச் சந்தையிலும் ராப் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ராப் இசையை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நம்மிடம் ராப் இசையை விஞ்சக்கூடிய ஒரு மக்களின் இசை இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதுதான் கானா.
வடசென்னையில் வாழும் உழைக்கும் மக்களால், ஒடுக்கப்பட்ட மக்களின் வட்டார வாழ்வியல் வழியே பிறந்ததுதான் கானா. மரணம் வருந்துவதற்கு மட்டுமே அன்று, வாழ்ந்து முடிந்து மரணத்தை ருசித்துவிட்ட மனிதனின் சாதனைகளைப் பெருமையுடன் எண்ணிப்பார்க்கும் ஒன்று என மரணத்தை ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கும் இசையாக விளங்கிவந்த கானா இன்று தன் எல்லைகளை விரித்துக்கொண்டிருக்கிறது. இன்று மரணத்துக்கு மட்டுமே இசைக்கப்படுவதில்லை கானா. காதல், கலவி, கடல் வாழ்க்கை, அரசியல் தொடங்கி விழிப்புணர்வுக் கருத்துகள்வரை கானாவில் துள்ளும் கருத்துகள் ஏராளம்.
மொழியுடன் மல்லுக்கட்டாமல் எளிய எதுகையும் மோனையும் வால்பிடிக்க, வரிகளின் இறுதிச்சொற்களில் ஒலி ஒத்திசைவைக்கொண்டுவரும், இயைபுத்தொடையும் கானா பாடல்களின் தாள நயத்தைத் தாங்கிப்பிடிக்கும் அம்சங்கள். வாழும் வட்டாரத்தில் புழங்கும் எளிய சொற்களைக் கொண்டே இந்தப் பாடல்களை இட்டுக்கட்டி எழுதிவிட ஒரு கானா பாடகனால் இயலும். கானா பாடகன் வெறும் பாடகன் மட்டுமே அல்ல, அவன் ஒரு வகையில் கம்போஸர் இசை அமைப்பாளன், இன்னொரு வகையில் கவிஞன். கானா பாடல்களில் இருக்கும் இந்த எளிய மொழி விளையாட்டு இன்று உருவானது அல்ல…கர்ண பரம்பறையாக நமது செவிமடல்களுக்குள் புத்தப்பட்ட எளிய இசை வடிவமே கானா இசை!
நந்தவனத்திலோர் ஆண்டி - அவன், நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி - போன்ற பழந்தமிழ் பாடல்களிலேயே மக்கள் கவிஞர்களால் எழுதப்பட்டு இசைக்கப்பட்டிருக்கிறது. கானாவின் இந்த எளிய வெகுஜனத் தன்மையைத் திரையிசை வழியே தமிழ் மக்களிடம் பரவலாக்கிய பெருமை இசையமைப்பாளர் தேவாவைச் சேரும் அந்த தேவா சத்தியம்மா நான் அல்ல. ஆனால் கானா உலக நாதன் பாடி, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற.. ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்.. சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்’ - என்ற பாடல் கானாவுக்கு இன்றுவரை தமிழ் சினிமாவில் தனியிடத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. இந்தப் பாடலை உலகநாதன் இசைக்காத நாடே இல்லை என்று கூறலாம். -அவருக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த பல கானா கலைஞர்கள் இன்று திரையில் செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். ராப் இசையைவிட மேலான சொல்லிசை கானா என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனாலும், ராப் இசையைப் போல் உலகின் காதுகளில் அதை நம்மால் ஒலிக்கச்செய்ய முடியவில்லையே! என்பது என் தனிப்பட்ட கவலை, ராப் இசையைப் போல அது சர்வதேசப்படுத்தப்படவில்லை என்பதுதான் இதற்கு முதன்மையான காரணம். அன்புடன் பேசாலைதாஸ்
"வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்..சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்" பேசாலைதாஸ்
இந்த பதிவினிலே கானா பாடல் பற்றி, உங்களோடு சிலாகிக்கலாம் என நினைக்கின்றேன். ஆப்பிரிக்க கறுப்பினச் சகோதரர்களால் இசைக்கப்பட்டு அமெரிக்க கறுப்பினச் சகோதரர்களால் வளர்க்கப்பட்ட ராப் இசையும் எளிய மக்களின் இசை வடிவமே! கண்டங்கள் கடந்து காலம் கடந்து இன்று உலகம் முழுவதும் பல்வேறு மொழிபேசும் மக்களால் பல்வேறு மொழிகளில் இசைக்கப்படுகிறது ராப். திரையிலும் தனியிசைச் சந்தையிலும் ராப் தன்னைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது. ராப் இசையை உலகமே கொண்டாடிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் நம்மிடம் ராப் இசையை விஞ்சக்கூடிய ஒரு மக்களின் இசை இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதுதான் கானா.
வடசென்னையில் வாழும் உழைக்கும் மக்களால், ஒடுக்கப்பட்ட மக்களின் வட்டார வாழ்வியல் வழியே பிறந்ததுதான் கானா. மரணம் வருந்துவதற்கு மட்டுமே அன்று, வாழ்ந்து முடிந்து மரணத்தை ருசித்துவிட்ட மனிதனின் சாதனைகளைப் பெருமையுடன் எண்ணிப்பார்க்கும் ஒன்று என மரணத்தை ஒரு கொண்டாட்டமாகப் பார்க்கும் இசையாக விளங்கிவந்த கானா இன்று தன் எல்லைகளை விரித்துக்கொண்டிருக்கிறது. இன்று மரணத்துக்கு மட்டுமே இசைக்கப்படுவதில்லை கானா. காதல், கலவி, கடல் வாழ்க்கை, அரசியல் தொடங்கி விழிப்புணர்வுக் கருத்துகள்வரை கானாவில் துள்ளும் கருத்துகள் ஏராளம்.
மொழியுடன் மல்லுக்கட்டாமல் எளிய எதுகையும் மோனையும் வால்பிடிக்க, வரிகளின் இறுதிச்சொற்களில் ஒலி ஒத்திசைவைக்கொண்டுவரும், இயைபுத்தொடையும் கானா பாடல்களின் தாள நயத்தைத் தாங்கிப்பிடிக்கும் அம்சங்கள். வாழும் வட்டாரத்தில் புழங்கும் எளிய சொற்களைக் கொண்டே இந்தப் பாடல்களை இட்டுக்கட்டி எழுதிவிட ஒரு கானா பாடகனால் இயலும். கானா பாடகன் வெறும் பாடகன் மட்டுமே அல்ல, அவன் ஒரு வகையில் கம்போஸர் இசை அமைப்பாளன், இன்னொரு வகையில் கவிஞன். கானா பாடல்களில் இருக்கும் இந்த எளிய மொழி விளையாட்டு இன்று உருவானது அல்ல…கர்ண பரம்பறையாக நமது செவிமடல்களுக்குள் புத்தப்பட்ட எளிய இசை வடிவமே கானா இசை!
நந்தவனத்திலோர் ஆண்டி - அவன், நாலாறுமாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி - அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி - போன்ற பழந்தமிழ் பாடல்களிலேயே மக்கள் கவிஞர்களால் எழுதப்பட்டு இசைக்கப்பட்டிருக்கிறது. கானாவின் இந்த எளிய வெகுஜனத் தன்மையைத் திரையிசை வழியே தமிழ் மக்களிடம் பரவலாக்கிய பெருமை இசையமைப்பாளர் தேவாவைச் சேரும் அந்த தேவா சத்தியம்மா நான் அல்ல. ஆனால் கானா உலக நாதன் பாடி, மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் இடம்பெற்ற.. ‘வாளை மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்.. சென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்’ - என்ற பாடல் கானாவுக்கு இன்றுவரை தமிழ் சினிமாவில் தனியிடத்தைப் பெற்றுத் தந்துவிட்டது. இந்தப் பாடலை உலகநாதன் இசைக்காத நாடே இல்லை என்று கூறலாம். -அவருக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்த பல கானா கலைஞர்கள் இன்று திரையில் செல்வாக்குடன் வலம் வருகிறார்கள். ராப் இசையைவிட மேலான சொல்லிசை கானா என்பது என் தனிப்பட்ட கருத்து. ஆனாலும், ராப் இசையைப் போல் உலகின் காதுகளில் அதை நம்மால் ஒலிக்கச்செய்ய முடியவில்லையே! என்பது என் தனிப்பட்ட கவலை, ராப் இசையைப் போல அது சர்வதேசப்படுத்தப்படவில்லை என்பதுதான் இதற்கு முதன்மையான காரணம். அன்புடன் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...