திங்கள், 28 மே, 2018

பாட்டும் பதமும் 49 கேட்டுக்கோடி உறுமி மேளம்,

கேட்டுக்கோடி உறுமி மேளம், போட்டுக்கோடி கோபதாளம்  (Uncle & jungle)


பட்டிக்காடா பட்டணமா? திரைப்படத்தில் இடம் பெற்றது இந்த பாடல், கவியரசு கண்ணதாஸின் மற்றுமொரு அருமையான படைப்பு. மேற்கத்திய நாகரிகமா? கீழைத்தேச நாகரீகமா? எது சிறப்பானது என்பதை சொல்லவருவது இந்த படத்தின் மையப்புள்ளி. இந்த பாடலில் வரும் ஆங்கில வரிகள் ஜெயலலிதாவின் சொந்தவரிகள் மற்றவை அனைத்தும் கவியரசுவுக்குரியது. மேற்கத்தைய இசைக்கருவிகள், எமது கிராமிய இசைக்கருவிகள் கொண்டு விஸ்வநாதன் உருவாக்கிய துள்ளல் இசை நம்மை அசரவைக்கின்றது. உங்கள் இரசனைக்காக எனது நண்பன் கிறிஸ்டி ரெவ்வல் தனது முக நூலிலே பதிவு செய்திருந்த, கலையக வீடியோவையும் உங்களுக்காக மீண்டும் பதிவு செய்கின்றேன்.
                                 இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் Legend இசைக்கலைஞர்கள்,நாம் அனைவரும் தினமும் கேட்கும் 
MSV அய்யாவின் ஆயிரக்கணக்கான காலத்தால் அழியாத பாடல்களை, வாசித்த அற்புத கலைஞர்கள். " அந்த கால கட்ட இசைக்குழுவின் முக்கிய அம்சங்கள் "
1.இசை குழுவின் தலைவர் அடுத்து பாடப்போகும் பாடலை அறிவிப்பார்.
2. நமக்கு வேண்டப்பட்ட பாடல்களை துண்டுசீட்டு மூலம்,கொடுத்து கேட்கலாம்.
3.இசைக்கலைஞர்கள் அனைவரும்  அருகருகே அமர்ந்து,கலந்துரையாடி பாடல்களை வாசிப்பார்கள்.
4. ஒரு கட்டத்தில் இசைக்கலைஞர்கள்  தங்கள் வாத்தியத்தை, தனித்தனியாகவும்,அதன் பின் கூட்டாகவும் வாசிப்பார் கள். இதை பார்க்கவும் கேட்கவும்  மிகவும் அற்புதமாய் இருக்கும்.
5.விழாக்குழுவினர்,ஒருகட்டத்தில்  இசைக்கலைஞர்களை  தனித்தனியாக,ஒவ்வொருவராக அறிமுகபடுத்தி,சிறப்பாக 
மரியாதையை செய்வார்கள்.
                                                                  இப்போது வரும் சினிமாப்பாடல்கள் ஒன்று இரண்டைத்தவிர மிகுதி அத்தனையும் உயிரோட்டம் இல்லாமல் இருக்கின்றது. அதற்கு நாமும் ஒரு காரணம், எமது இளைஞர் இளம் தலைமுறகளுக்கு உயர்வான இரசனை தன்மையை நாம் கற்றுக்கொடுக்க மறந்துவிட்டோம். இதை நான் என் அனுபவாயிலாக காண்கின்றேன். எனது பிள்ளைகள் காதில் எதையோ ஒன்றை மாட்டிக்கொண்டு, தலையை ஆட்டி இரசிக்கின்றார்கள். அவைகளில் சில ஓலுமா மாலுமா என்ற கண்றாவி தமிழ் பாடல், அனுருத்தின் காக்காவலிப்பு பாடல்கள் இவைதான் இவர்களின் சிம்ம சொப்பனமாக இருக்கின்றது. காலக்கொடுமை இது என்று சொல்வதைவிட வேறு என்ன இருக்கின்றது? அன்புடன் பேசாலைதாஸ்


வெள்ளி, 18 மே, 2018

பாட்டும் பதமும் 48 தாமரைக்கண்ணங்கள்,


"தாமரைக்கண்ணங்கள், தேன் மலர் கிண்ணங்கள்"   பேசாலைதாஸ்

                                              இந்த பாடலை நான் கேட்கும்பொழுதெல்லாம், இது கண்ண தாஸனின் பாடல் தான் என்று எண் ணினேன். வரிகள் அப்படி! கன்னங்கள், கிண்ணங்கள், வண்ணங்கள், எண்ண ங்கள் என்று சொற்கள் சிந்து நடைப யில்கின்றன, அதேபோல சந்தித்தேன், சிந்தித்தேன்,மன்னித்தேன், கன்னித் தேன் என்று சரளமாக சொற்கள் பாடலில் துள்ளி குதிக்கும் போது இது கட்டாயம், என் தாஸன், கண்ணதாஸனின் பாடலா கத்தேன் இருக்கும் என்று சிந்தித்தேன். ஆனால் எழுதியது வாலி என்றவுடன் என் மனதுக்குள் ஏனோ ஒரு வலி! யார் எழுதி னால் என்ன? பாடல் இரசிக்கத்தக்கதாக உள்ளதே! உண்மையில் ஆண்டவன் ஆண்கள் பக்கம் தான்! பெண்களை, அழகாக, மென்மையாக, இதமாக,  அன் பாக, எழிலாக , ஒரு இயற்கையின் சீதன மாக பெண்ணைப்படைத்த இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். ஆண்களைவிட பெண்கள் தான் சிறந்தவர்கள். இந்த உலகமே அழகுப்பெண்களின் கைவசம்! 

                                                             நான் சொல்வது மேலை நாட்டுக்கு நன்றாகப் பொருந்தும்.  கீழைத்தேசங்களில் நாம் என்ன செய்கின்றோம்? பெண் என்று பாராமல், அவர்களுக்கு அநியாயாம் செய்கின்றோம். கற்பு என்ற அர்த்தமற்ற கறுப்புக்கண்ணாடி அணிந்து கொண்டு, அவர்களை பார்க் கின்றோம். கட்டிலில் சுகம் தரும் போதைப்பொருளாக, சமையல்காரி யாக, வெறும் பிள்ளை பிரசவிக்கும் இயந்திரமாகவே பார்க்கின்றோம். ஆண்களை விட பெண்கள், மனோவலிமையிலும், புத்திசாலித்தனத் திலும் சிறந்தவர்கள் என்பதை மறக்கின்றோம். இயற்கை நமக்கு தந்த அழகுச்சித்திரத்தை நாம் இரசிக்க மறக்கின்றோம். இரசிக்க தெரிந்தவ ந்தான் நல்ல ஆண்மகன், அவனால் தான் அன்பானவனாக, நல்ல கணவனாக, காதலானாக, அப்பாவாக, இறைவனுக்கு பிடித்தவனாக‌ இருக்கமுடியும் இது என் அனுபவ உண்மை. இரசியுங்கள், உங்கள் காதலியை,மனைவியை, மகளை, அம்மாவை, பாட்டியை, சகோதரியை இரசியுங்கள். அவர்களின் இதயத்து மென்மையை இரசியுங்கள்!


                                                                                       தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்! எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது பொங் கிடும் எண்ணங்கள்..மாலையில் சந்தித்தேன் மய்யலில் சிந்தித்தேன் மங்கை நான் கன்னித்தேன். காதலன் தீண்டும்போது கைகளை மன் னித்தேன். இதோ பாருங்கள், தொடக்கூடாத இடத்தில், காதலன் தொட்ட போது, தண்டித்தேன் என்று சொல்லாமல் மன்னித்தேன் என்கின்றாள் எவ்வளவு உயர்வாக வாலி பெண்களை இரசிக்கின்றான். சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை உடை கொண்டு மூடும் போது ..உறங்குமோ உன்னழகு.. பெண்களின் அழகும் அன்பும் பாசமும் என்றுமே உறங்காது. இனி பாட்டைக்கேட்டு பெண்களை இரசியுங்கள் அன்பு செய்யுங்கள். அன்புடன் பேசாலைதாஸ்






வியாழன், 17 மே, 2018

பாட்டும் பதமும் 47 பூணை அல்ல புலிதான்


பூணை அல்ல புலிதான் என்று போகப்போக காட்டுகின்றேன்.

இசை அது வெறும் கலை அல்ல. கவலை தீர்க்கும் அருமருந்து. மனதில் துக்கம் ஆழமாயிருக்கும் பொழுதெல்லாம் இசை மெல்லிய சுகம் தருகின்றது, கவலையை இலகுவாக்கின்றது. மனித மனம் சந்தோசத்தில் மிதக்கும் போது, இசை கூத்தடிக்கின்றது. இசை வார்த்தகளில் சொல்லமுடியா பரவசத்தை அளிக்கின்றது. சிலவேளையில் வார்த்தைகளில் வெளிவரா உணர்வுகள், மெல்லிய இசையாக, பாடலாக மன‌தின் ஒரு மூலையில் ஒட்டிக்கொள்கின்றது.  வார்த்தைகள் வீரியம் இழக்கின்றபோது, இசை மெல்ல பிறக்கின்றது, அதனோடு பழைய ஞாபங்களும் தொத்திக்கொள்கின்றது. அதனால் தான் ஆங்கில கவிஞன் ஷெல்லி சொன்னான். Music, when soft voices die, Vibrates in the memory..... Rose leaves, when the rose is dead, Are heaped for the beloved's bed, வார்த்தைகள் மெளனிக்கும் பொது இசை பிறக்கின்றது. ரோஜாக்கள் மரணிக்கும் போது அது காதலர்களின் படுக்கையை நிறைக்கின்றது. இசை நம்பிக்கை தரும் ஒரு ஜீவ அமிர்தம், மந்திர பிரணவம், அந்த இசையோடு கவிஞனின் சொல்லும், வார்த்தைகளும் ஒன்றாக பயணிக்கும் போது,  சொல்லாத கதைகள் சொல்லும், துள்ளாத மனமும் துள்ளும், அது இன்பதேனையும் வெல்லும், நாணல் என்ற வெறும் புல்லைக்கூட புல்லாங்குழல் போல வேதம் ஓதவைக்க கவிஞன் கண்ணதாசன் ஒருவன் மூலமே முடியும். ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணல் அது, காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை  என்று வாழ்வில் அமைதி தேவை என்றால் ஆற்றங்கரை நாணலைப்போல வாழ்க்கையை நகர்த்தவேண்டும், 


                                                         வாழ்வில் வேதனைகள் சோதனைகள் வரும் போது அவற்றை எதிர்த்து நின்று விட்டுக்கொடுக்கும் இடத்தில் விட்டு க்கொடுத்தும், எதிர்த்து நிற்கும் வேளை துணிவாக எதிர்கொள்ள வேண்டும். ஓடுபவனை துரத்தி ஓடு! நீற்பவனை எதிர்த்து நில்! இதுவே கண்ணதாசனின் கவித்தத்துவம். எப்பொழுதும்  எல்லோருக்கும் வளை ந்து கொடுத்தால் நாம் இறுதியில் உடைந்து போவோம்! எந்த நாளும், எல்லோருக்கும் எல்லா சந்தர்ப்பங்களிலும் வளைந்து கொடுக்க வேண் டிய அவசியம் இல்லை. நாணலைப்போல் வளைவதுதான் சட்டமாகுமா? அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா? என்று கேள்வி கேட்டும் கவிஞர்,  நான் ஒரு கைபார்க்கின்றேன், நேரம் வரும் கேட்கின் றேன், பூணை அல்ல புலிதான் என்று போகப்போக காட்டுகின்றேன்.


                                                        நாணலைப்போல வளைந்து கொடுத்தாலும், தலைகுணியாமல் வாழவேண்டும் என்பதையும் கவிஞரே சொல்லிவை த்தார். பெண்கள் தலைகுணிந்து நடக்கவேண்டிய அவசியமே இல்லை! பணிவாக பண்பாக அன்பாக நடந்தாலே அதுவே போதும்.  பெண்கள் தலை நிமிர்ந்து, ஆணுக்குப்பெண் சரிசமனாக வாழவேண்டும், பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக, புரட்சிப்பெண்ணாக பெண்கள் வாழவே ண்டும். வணங்கி வளையும் நாணல் நீ வளைவது போல், தலை குணிவதி ல்லை.  பார்க்கும் கண்கள் இரசிக்கவேண்டும் பாவை உலகம் மதிக்கவே ண்டும் என்று பெண் வர்க்கத்திற்காக துணிவாக குரல் கொடுக்கும் கவிஞன். 


                                         நாணல் என்ற ஒரு சிறு புல்லான, ஒரு சொல்லாலே எத்தனை கருத்தாளம் மிக்க விளக்கத்தை கொடுக்க எனது ஆசான் கண்ணதாசனைவிட வேறு யாரால் முடியும்? சொல்லுங்கள்!  அன்புடன் பேசாலைதாஸ்

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...