சனி, 19 டிசம்பர், 2020

0027சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்! பேசாலைதாஸ்

சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்! பேசாலைதாஸ்


என் கவி ஆசானின் கவித்திறனை சொல்லிக்கொண்டே போகலாம், அது ஒரு அலாதியான தனிச்சுவை, சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய், என்றபாடல் என் வாழ்வில் மறக்கமுடி யாதா பாடல், அந்த பாடல் உருவான சூழ்நிலை கவிஞர் கண்ணதாஸனுக்கு ஏற்பட்டது போலவே எனக்கும் ஏற்பட் டது, முதலில் கவிஞருக்கு நிகழ்ந்ததை கூறிக்கொண்டு எனது சமாச்சாரத்து வருகின்றேன். 


மக்கள் திலகம் எம்ஜீயாருக்கும் கண்ணதாசனுக்கும், நட்பு சுமுகமாய் இரு ந்த காலம்; கண்ணதாசன் கொஞ்சம் பிஸியான நேரம். MGR க்கு பாட்டு எழுத உண் மையாகவே நேரம் இல்லை என்று தவிர்த்து வந்தார். அப்போது கவிஞரை காண வந்த MGR . தனக்கு பாட்டு எழுதித்தராது ,கவிஞர் அங்கி ருந்து போகமுடி யாது என்று சொல்லி, அவர் இருந்த அறைக்கதவை பூட்டி விட்டாராம். ஜன்னல் வெளிப்பக்கம் இருந்து காவிக்கொத்தை காட்டி, பாடல் எழுதித்தராது இங்கிரு ந்து நீங்கள் போக முடியாது என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருக்கிறார். 

கவிஞரும்  சிரித்துக்கொண்டே உடனே  இரண்டு வரிகள் எழுதினாராம் . அது "சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய், (MGR பொன்னிற வண்ணம் உள்ள வர் ) கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை படித்தாய்.." என்று ... இதை வெளிப்பு றம் இருந்து பார்த்த MGR உள்ளேவந்து, தான் கதவை பூட்டவில்லை, சும்மா சாத்திவிட்டுத்தான் சென்றேன் என்று சமாதானம் சொன்னாராம். 


கவிஞரும் பாடலை திரைப்படத்திற்கு என்று எழுதித் தந்தாலும், பல வரிகள், இந்தப் பாட லில் கவிஞருக்கு, MGR க்கும் பொருந்தும்படிதான் இருந்தது   ."இன்பம் ,துன்பம் எது வந்தாலும் இருவர் நிலையம் ஒன்றே, எளிமை ,பெருமை எதுவந்தாலும் இருவரும் வழியும் ஒன்றே .."  போன்ற வரிகளை  குறிப்பாக சொல்லலாம் . அவர்  எழுதிய வரிகள் இதுபோல வேறு வேறு சூழலுக்கும் பொருந்தும் வண் ணம் பாடல் புனைந்து கொடுத்ததுதான் அவரின் தனித்தி றமை. காலங்கள் பல கடந்தும்  இன்றும் அந்தப் பாடல்கள் எல்லாம் நம் உதடு களில் ,எண்ணங்களில் இருப்பதே இதற்கு சாட்சி!


இனி சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய்,,, என்ற பாடலுக்கும் எனக் கும் இடையில் உள்ள தொடர்பை சொல்லாம் என நினைக்கின்றேன். தேசியத் தலைவரின் மெய்ப்பாதுகாப்பு தளபதியாகவும், மன்னார் தளபதியாகவும் இரு ந்த விக்டர் அவர்கள், 1983 இல். திருநெல்வேலியில் புலிகள் நடத்திய  குண்டுத் தாக்குதலில், விக்டர் அவர்களும் பங்குபற்றியது, எப்படியோ இராணுவத்துக்கு கசிந்து விட்டது, அந்த காலகட்டத்தில், விக்டரின் தம்பி சுதாகர் பேராதனை பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார், அவரும் நானும் நெருங்கிய நண்பர்கள், நான் யாழ் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்துக் கொண்டிருந்தேன், 


ஒரு நாள் இராணுவம் திட்டமிட்ட படி விக்டரின் குடுபத்துக்கு நெருக்கமான மன் னார் பல்கலைகழக மாணவர்களை இரவோடு இரவாக கைது செய்து, தள்ளாடி இராணுவமுகாமில் அடைத்தது. சிறையில் பல நாட்கள் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது, இதற்குள் எங்களை காவல் செய்த இராணுவவீரன் சுதாருடன் நட்பாகிவிட்டான். எப்போதும் அவன் எங்களை பார்த்து சிரிப்பான், இந்த நேரத் தில் சுதாகர், சிரித்து சிரித்து என்னை சிறையில் வைத்தாய் என்று பாடுவார், அவனுக்கு பயம் என்றதே கிடையாது, ஆனால் எனக்கோ எப்போதும் மரணபய மாக இருந்தது, இன்றுவரை இந்த பாடலையும், மாவீரன் சுதாகரையும் மறக் கவே முடியாது.

சூழலுக்கு ஏற்ப கவிதை வடிப்பதிலும், அந்த கவிவரிகளுக்குள், கதாபாத்திர த்தை திணிப்பதும், கவிஞருக்கு கைவந்த கலை, வாலி வருவதற்கு முன்னும், அரசியலில் MGR அவர்களோடு   முரண்பாடு வருவதற்கு முற்பட்ட கால கட்டத் தில் , கண்ணதாசன், MGR அவர்களுக்கு  எழுதியது போல திரைப்பாடல் யாரும் எழுதியதில்லை .


"மாபெரும் சபைகளில் நீ நடந்தால் " என்ற பாடலும்  "நான்கு பேர்கள் போற்ற வும் நாடு உன்னை வாழ்த்தவும் " இரண்டும் வேட்டைக்காரன் படத்தில் 

"உலகம் பிறந்தது எனக்காக -அதில் -குயில்கள் பாடும் கலைக்கூடம் 

கொண்டது எனது அரசாங்கம் '- படம்  பாசம் 'அச்சம் என்பது மடமையடா ' படம் மன்னாதி மன்னன் MGR க்கு கண்ணதாசன் மேல் அளப்பரிய அன்பும் , மரியா தையும் உண்டு. அரசவைக்கவிஞர் ஆக்கி அழகு பார்த்தது  இதனால்தான்.  கண்ணதாசனை ரசிப்போம்  மகிழ்வோம் அன்புடன் பேசாலைதாஸ்  


செவ்வாய், 15 டிசம்பர், 2020

ஆசையே அலைபோல,,,,,,,, பேசாலைதாஸ்

 ஆசையே அலைபோல,,,,,,,, பேசாலைதாஸ் 


தமிழில் 1958ஆம் ஆண்டு கே.வி. மகாதேவன் இசையமைப்பில் வெளியான "தை பிறந்தால் வழி பிறக்கும்" ஏகே வேலன் இயக்கிய முதல் படம்.  அதே படம், இந்தியில் ஏவிஎம்  தயாரிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சித்ர குப்தா இசையில் Barkha (1960) என்று இந்தியில் வெளியானது, வெளியான அதே வருடமே தெலுங்கில் கண்ட சாலா இசையில் Manchi Manasuku Manchi Rojulu என்று வெளியாகி அசத்தியது. இந்த மும்மொழி தகவல் எதற்கென் றால் படத்தின் கதை ஒருமிக்கையில் பாடல்க ளும் அவற்றுக்கான situation சிச்சுவேஷன்களும் மாறாமல் அப்படியே நீடிப்பதற்கான வாய்ப்பு அதிகம் தான். அந்த வகையில் தமிழில் இருந்த பெருவாரிப் பாடல் சூழல்கள் அப்ப டியே தெலுங்கு இந்தி என மொழிகள் கடந்தன. இந்த பாடல் தமிழில் அமை ந்தது போல் குரல், இசை, எடுத்தவிதம் எல்லாமல் சற்றும் பிசகாமல், அப்ப டியே மாற்று மொழிகளிலும் எடுக்கப்பட்டதே இந்த பாடல், அதுதான் " ஆசையே அலைபோல" என்ற பாடல்!

திருச்சி லோகநாதனின் குரல் இப்பாடலுக்கு மெருகூட்டுகின்றது. தற் போது கானா பாலாவின் பாடல்களில் ஊடுருவும் தனித்துவமான் சோக இராகம் இதற்குள்ளும் சுரம் பிரிக்கின்றது. திருச்சி லோகநாதனின் அளவு க்குள் அடங்காத மேற்சுரக் குரல் எப்போதும் திமிறி அடிக்கிற காற்றை போல அந்தந்த பாடலுக்கு உள்ளேயும் வெளியேயுமாக தன் குரலால் ஒரு உலகம் செய்து பழகும் கனகாத்திர குரல் லோகநாதனுடையது. தன் குரல் என்னவாக ஒலிக்க வேண்டும் என்பதை தனது ஆழ்மனதில் இருந்தே தீர் மானத்தின்படி, பாடத்தெரிந்த பெருங்கலைஞர் அவர். அவரது பொன்வை ரக் குரலுக்கு இந்த பாடல் ஒரு சகலகால சாட்சியம். கேவி மகாதேவன் தன் ஜென்மஜென்ம மனங்களிலிருந்தெல்லாம் அகழ்ந்தெடுத்த மாய இசை தோரணமாக இந்தப் பாடலுக்கு இசை அமைத்திருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக என் கவி ஆசான் கவியரசர் கண்ணதாசன்! 1958 ஆம் ஆண்டு வெளியான படம். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், 62 வருடங்க ளுக்கு முன் எழுதப்பட்ட பாடல், சட்சாத் நான் பிறந்ததும் அதே வருடம் தான்! இதில் எழுதுகிற பல வரிகள் அந்த காலகட்டத்தில் உலக அளவில் ஏதாவதொரு மொழியில் எழுதப்பட்டிருக்குமா என்று தெரியாது. எழுதப்பட்டிருக்கவில்லை என்று சொல்லவே ப்ரியம். இந்தஒரு வரிக்கு வயது 62. இன்றளவும் புத்தம் புதியதாக இருக்கிறது. இன்னும் இருக்க போகிறது. ஒரு புத்தகமே எழுதலாம் என்ற அளவுக்கு சிந்தித்தால் அதன் பொருள் வானளவு விரிந்து செல்வது வெறும் புகழ்ச்சியல்ல.

"இருப்பது கனவு" இந்த ஒரு வரியை எடுத்து வைத்து கொண்டு எத்தனை பேசினா லும் பேச்சும் தீரலாம் பொழுதும் தீரலாம் பொருள் தீராது.இதன் மேலான கிறக்கமய க்கம் தீரவே தீராது. ஆசையே அலைபோலே நாமெல் லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே... போலே என்ற உருவகத்தை வைத்து கொண்டு எத்தனை பெரிய கலை கலவரம் செய்கிறார் கவிஞர்? பருவம் என்னும் காற்றிலே பறக்கும் காதல் தேரிலே ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்! அதிசயம் என்ற சொல்லின் அபூர்வம் அத்தனையையும் நீக்கி விட்டு அதனை ஒரு புழக்கச் சொல்லாக மாற்றிவைக்கும் வல்லமை கவிஞருக்கு மாத்திரமே உண்டு.

நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்..?இதில் வரக் கூடிய பாதையை என்ற சொல்லை எடுத்துவிட்டு அதற்கு இணையான இன்னொ ன்றை வரவழைத்து பார்த்தால் தெரியவரும் அந்தச் சொல்லின் ஓர்மை பெருமிதம். இன்னொன்று இல்லாத ஒற்றையின் ஜாலவருகை அது. வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன் என்ற ஒரு வரி மனித வாழ்வின் நிலையாமையை உருவமாற்றத்தை நித்தம் நித்தம் ஒரே ஒரு திசையிருளை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கக் கூடிய பல்வேறு கதைகளை உடல் என்னும் ஒரு பண்டம் வாழ்வென்னும் கலய நீர் தன் மீது பட்டுப் பட்டு தன் உரு அழிந்து இன்னொன்றான வண்ணம் தன் பயணத்தை தொடர்ந்து வருவதை எல்லாம் ஓரிரு வரிகளில் சொல்ல முடிந்திருக்கிறது எத்தனை வளம்? இளமை மீண்டும் வருமா மணம் பெறுமா எனும் போது மிஞ்சுவது அதே இருளின் இன்னொரு அடர்வடிவம் தான் இல்லையா..? முதுமையே சுகமா என்று விளிப்பது ஆளற்ற வனாந்திர வெளியையா அல்லது அதற்கு தான் பதில் இருக்கிறதா..?

இங்கே இரண்டாம் சரணத்தை இப்படி முடிப்பது இன்னும் பேரழகல்லவா...

காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

இந்த முறை பாதை என்ற சொல் அல்ல போகும் என்ற சொல்லை உற்று நோக்கலாம்... காலத்தின் பாதையில் போவது தான் வாழ்வது அதுவே ஆழ்வது அழிவது முடிவது எல்லாமே இல்லையா..?

இந்தப் பாடலின் சித்து வேலை இதன் மூன்றாம் சரணம் தான்.

சூறைக் காற்று வீசினால் தோணி ஓட்டம் மேவுமோ

வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு

காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்..?

இந்தப் பாடல் கையாண்டிருக்கிற வரவு செலவு இரண்டும் தெரிவதற்குள் கனவு நிறைந்துவிடும். காலம் கலைந்து விடும் கணக்கு புரிந்து விடும் அவ்வளவையும் யார் காணுவாரோ அவர் காணுவார், அவர்தான் இறைவன். தத்துவம், லெளகீகம், நிலையாமை,  மாயம், கனவு, அதற்குள் ஒரு சோகம் இப்படியே மன விசாலம் விரிந்து கொண்டே செல்கின்றது. இந்த பாடலை நான் கேட்கும் ஒவ்வொரு தடவை வையும், மாயமான இந்த உலகம், நிரந்தரமற்ற வாழ்வு, அதன் உணர்வு வடிவம் எல்லாமே அர்த்தமற்றதாக தோன்றும், இளமை மீண்டும் வருமா? ஏக்கம் மனதை வாட்டும். கிடைக்கின்ற இன்பத்தை அப்போதே அனுபவித்துவிடவேண்டும் போல தோன்றும், அவை திரும்பி வருமா? என்ற கவலை மனதை ஆட்கொள்ளும்! மொத்தத்தில் இது பாடலல்ல, வாழ்வே மாயம் சுத்த சூனியம் என்று போதனை தருகிற வாழ்க்கை பாடம்! அன்புடன் பேசாலைதாஸ் 


வெள்ளி, 4 டிசம்பர், 2020

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? பேசாலைதாஸ்

 


                      நம் மனதை கேட்ட மாத்திரத்திலே அது நம்மை தொட்டுவிட்டது என்றால் அந்த பாடலை முதன்முறை கேட்கும் போது நம் மனது க்குள் என்ன நிகழ்கிறது? பாடலை முதன் முறை கேட்பது ஒரு வினோத மான அனுபவம் அடுத்து அந்த பாடல் என்னவாய் திரு ம்பும் என்பது யூகித்து யோசித்தபடி அப்படியே நிகழ்ந்தால் ஒரு ஆன ந்தம். மனது துள்ளிகுதிக்கத்தொடங்கும், ஒருவேளை எண் ணியது போல் இல்லாமல் வேறு புது மாதிரியாக  அமைந்துவிட் டால் ஒரு சலிப்பு தற்காலிகமாக ஏர்படும், பின்னர் அந்தபாடலில் இருக்கும் இசை னுட்பம் கருத்தாழம் போகப்போக பூவின் வாசம் புரிவ தைப்போல, அந்த பாடலும் மனதுக்குள் நிலைத்துவிடும்.   

ஸ்ரீதரின் போலீஸ்காரன் மகள் திரைப்படம்  இன்றளவும் காதலை அன்பை மனித மனதின் நுட்பமான உணர்வுகளை பின்னிய கதையாய் பலரது நெஞ்சங்களிலும் தேங்கி நிரந்தரித்திருக்கும் கலைநதி! கண்ணதாசனின் எழுத்தில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் டிகே.ராமமூர்த்தி இருவரது இசையில்  எல்லாப் பாடல்களும் தேனாய் இனித்தன. பிபி.ஸ்ரீனிவாஸ் எனும் மாயக்குரலோனின் நிகரில்லா பொற்பாடல் இது.

"நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் 

நெருப்பாய் எரிகிறது,

இந்த மலருக்கு என் மேல் என்னடி கோபம் 

முள்ளாய் மாறியது,

கனிமொழிக்கென் மேல் என்னடி கோபம் 

கனலாய் காய்கிறது

உந்தன் கண்களுக்கு என் மேல்  என்னடி கோபம்  கணையாய் பாய்கிறது"

இது ஒரு சுழல் இசை பாடல். மிக அழகாக முடிந்து முடிந்து தொடங்கி ஒன்று மற்றொன்றை தொட்டபடி கலந்து, தனித்து இசையாகவும் வரிகளாகும் மனதை மயக்கும் கானம்!

மெல்லிசை மன்னர்கள் யாராலும் யூகிக்க முடியாத நல்லிசை ஒன்று கொண்டு, இந்த பாடலை தொடங்கினார்கள் பிபி ஸ்ரீனிவாஸின்  குரல் இயல்பாகவே மானசீக நடுக்கம் ஒன்றை தன்னகத்தே கொண்டிருக்கும் அது, ஒவ்வொரு இழையாக இசையும் ஆன்மாவும் குரலும் பாடல் வரிகளும் கலந்து மலரின் இதழ் நுனியில் துளிர்க்கும் பனி  தொட்டெடுத்த தொனி கொண்டு கேட்பவர் மனங்கொல்லும்! இந்த பாடலின் பல்லவி முடிந்து சரணம் நுழையும் இசைக்கோர்வை தொன்மமும் கலந்து ஒலிக்கும் புது நதி பாய்ச்சல் என கிறங்கடிக்கும். பிபி ஸ்ரீநிவாஸ் பேச்சுவார்த்தை நிகழ்த்துகிற பெரியமனுஷ மத்தியஸ்தரின் பொறுமை கலந்த தியான ஒழுங்குடன் காதலை முள்ளற்ற மலராக தன் குரலால் மலர்த்தி இருப்பார்!

"குலுங்கும் முந்தானை சிரிக்கும் அத்தானை மிரட்டுதல் ஏனடியோ

உந்தன் கொடி இடை இன்று படை கொண்டு 

வந்து கொல்வதுமேனடியோ,

திருமண நாளில் மணவறை மீது இருப்பவன் 

நான் தானே,

என்னை ஒரு முறை பார்த்து ஓரக்கண்ணாலே சிரிப்பவள் நீதானே" 

இந்த வரிகளை பாடுவதற்குள் உலகில் உள்ள அத்தனை அன்பையும் குரல்வழி பெயர்த்து பாடி, பிறகு இன்னும் கூடுதலாய் சர்க்கரைப்ரியம் கலந்து உருகியிருப்பார் ஸ்ரீனிவாஸ்.அதற்கேற்ப குரலால் ஆகாததும் குழலால் ஆகும் என்ற இசைமொழிக்கேற்ப இணைப்பிசையாக ஒரு குழலிசை வரும்..மயங்காத மாமனமும் மயக்கமுறும்.மொத்த பாடலின் பொழுதும் பின்னால் தூர ஆழத்தில் ஒரு வயலின் கோர்வை தொடர்ந்து தவழ்ந்து பெருக்கெடுத்து சிறந்து முடிவுவரை ஒலிக்கும் அந்த இழையின் அலைகளாய் காலத்தின் திசைகள் மனம் கலைக்கும்!

சித்திரை நிலவே அத்தையின் மகளே சென்றதை மறந்துவிடு,

உந்தன் பக்தியில் திளைக்கும் அத்தான் எனக்கு பார்வையை திறந்துவிடு,

கண்ணதாசன்  கனிமொழி கனலாய் கண்களின் கணையாய் கொடியிடை படையாய் கவிவழி மனம் திறந்து மனுவெழுதி மனம் கலைத்து பார்வையை திறந்து விடு என்று புதியகாதல் செய்த வகையில் போலீஸ்காரன் மகள் படத்தில் எல்லா பாடல்களுமே சிறந்தாலும் இந்த பாடல் தியானகால காற்று உதிர்த்து தரும் கூடுதற்கனி மேலதிக சுவையொடு மனமினிக்கும் பாடற்சுளை...! சுவைத்தவன் பேசாலைதாஸ் 



ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...