சனி, 21 நவம்பர், 2020

பால் வண்ணம், பருவம் கண்டேன்.

 பால் வண்ணம், பருவம் கண்டேன். வேல் வண்ணம் விழியில் கண்டேன் பேசாலைதாஸ்


இறைவனின் சாயல்பற்றி விவிலியம் சொல்கின்றபோது, இறைவனின் சாயலாக மனிதன் படைக்கப்பட்டான் என விபரிக்கின்றது. கம்பராமாயணத்திலும் இறைவனின் குணம் பற்றி விபரிக்கப்படுகின்றது, விஸ்வாமித்திரர் என்ற பெரும் துறவி, இராமனை சந்திக்கின்றார். "இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது. சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை. அது போல இராமா,  இதுவரை எப்படியோ தெரியாது, ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன். எங்கே இந்த உரையாடல் நடக்கின்றது? இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.கம்பன் அதனை மிக அழகாக, அழகு தமிழில் எழுதுகின்றார்.

‘இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனி. இந்த உலகுக்கு எல்லாம்   உய்வண்ணம் அன்றி. மற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?  மை வண்ணத்து அரக்கி போரில்.  மழை வண்ணத்து அண்ணலே! உன் கை வண்ணம் அங்குக் கண்டேன்;  கால் வண்ணம் இங்குக் கண்டேன்.’                                                                                                                                                                                                                                                                                                                                                                       

இந்த செய்யுளில் எத்தனை வண்ணம் கலந்திருக்கின்றது என்று பாருங்கள்?

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்  உய்வண்ணம்   துயர் வண்ணம்    மை வண்ணம்  மழை வண்ணம் கை வண்ணம்  கால் வண்ணம்   மொத்தம் எட்டு வண்ணம். இறைவனை எண் குணத்தான் (எட்டு குணம் உள்ளவன் என்று சொல்வது மரபு).                                                  எனக்கு இராமயணத்தில் நம்பிக்கை இல்லை, ஆனால் கம்பரின் கொஞ்சு தமிழில் என்னையே நான் மறப்பதுண்டு. என்னைவிட என் கவி ஆசான் கண்ணதாஸன் தமிழ் கம்பனை விட விஞ்சு தமிழாக எனக்கு தெரிகின்றது. கவியரசு இந்த செய்யுளை அழகிய ஒரு சினிமா பாடலாக தந்திருக்கின்றார்.

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்

பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?

கன்னம் மின்னும் மங்கை வண்ணம்

உந்தன் முன்னம் வந்த பின்னும்

அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?

கார் வண்ண கூந்தல் தொட்டு

தேர் வண்ண மேனி தொட்டு

பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?


ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்


மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?

மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு

கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு

அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?

நேர் சென்ற பாதை விட்டு

நான் சென்ற போது வந்து

வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்


பெண்: பருவம் வந்த காலம் தொட்டு

பழகும் கண்கள் பார்வை கெட்டு

என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?

ஆண்: நாள் கண்டு மாலையிட்டு

நான் உன்னை தோளில் வைத்து

ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?


பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்

கை வண்ணம் இங்கே கண்டேன்

பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்

ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு

வேல் வண்ணம் விழிகள் கண்டு

மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்  

வாடிநிற்கும் பேசாலைதாஸ்

வெள்ளி, 13 நவம்பர், 2020

இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்

இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்  பேசாலைதாஸ்

இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்ப வனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித் தார் அசோகன். ஒரு வில்ல னாக, கதாநாயகனாக, குண சித்திர நடிகனாக, நகைச்சுவை நடிகனாக பல்வேறு பாத்திரங் களில், பரினாமித்தவர் தான் அசோகன். அவருடைய சொந்த பெயரான "அந்தோணி" ஐ இயக்குனர் T .R . ராமண்ணா தான் அவருடைய மணப்பந்தல் என்ற திரைப்படத்தில் "அசோகன்" என்று பெயரை மாற்றினார்.

. அசோகன் திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்து “பி.ஏ” பட்டம் பெற்றார். தனது பட்ட படிப்பை முடித்து சிறு சிறு நாடங்களின் நடித்துக்கொண்டிருந்தார்

முதன்முதலில் ஔவையார் என்ற தமிழ்த் திரைப்படத்தில் சோழமன்னர் கதாபாத்திரத்தில் அறிமுகமானார். 1961 ஆம் ஆண்டில் வெளியான கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னேறத் தொடங்கினார். இத் திரைப்படத்தில் ஆஷ் துரை வேடமேற்று நடித்திருந்தார்.

1960 மற்றும் 1970 களில் அவர், சில படங்களில் குணசித்திர வேடத்திலும், பெரும்பாலான படங்களில் வில்லன் வேடத்திலும் நடித்து புகழ் பெற்றார். மாயமனிதன், வீரத்திருமகன், உலகம் சுற்றும் வாலிபன், அன்பே வா, உயர்ந்த மனிதன், வல்லவனுக்கு வல்லவன், தாய்க்கு தலைமகன், தாய் சொல்லை தட்டாதே, குடும்பத் தலைவன், பாத காணிக்கை , ரிக்ஷாக்காரன், நான், மூன்றெழுத்து, அடிமைப்பெண், அஞ்சாத நெஞ்சங்கள் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் அசோகன்.

1963-ல் வெளிவந்த “இது சத்தியம்” படத்தில் அசோகன் நடித்தார். இதில் அவருக்கு ஜோடி சந்திரகாந்தா. இது வெற்றிப்படம். இந்தப்படம் இந்தியில் “சேஷநா” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது.

அடுத்த 1964-ல் சின்னப்பதேவர் தயாரித்த “தெய்வத்திருமகள்” என்ற படத்திலும் அசோகன் கதாநாயகனாக நடித்தார். சந்திரகாந்தாதான் இந்தப்படத்திலும் கதாநாயகி. அடுத்து 1965-ம் ஆண்டில் அசோகன் கதாநாயகனாக நடித்து 3 படங்கள் வெளிவந்தன. அதில் ஒன்று சின்னப்பதேவர் தயாரித்த (தண்டாயுதபாணி பிலிம்ஸ்) “காட்டு ராணி”.

இதில் அசோகனுடன் கே.ஆர்.விஜயா நடித்திருந்தார். மற்றொரு படம் ஏ.காசிலிங்கம் தயாரித்து வெளிவந்த “கார்த்திகை தீபம்”. அசோகன்- வசந்தா நடித்திருந்தனர்.

மாடர்ன் தியேட்டர்ஸ் ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கிய “வல்லவனுக்கு வல்லவன்” படத்தில் அசோகன்-மணிமாலா இணைந்து நடித்தார்கள். இது வெற்றிப்படமாகும். அதன் பின்னர் வில்லன் வேடங்களிலேயே ஏராளமான படங்களில் நடிக்கலானார்.

அசோகன் தனது மூத்த மகன் பெயரில் “அமல்ராஜ் மூவிஸ்” என்ற படக்கம்பெனி தொடங்கினார். அதன் சார்பில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த “நேற்று இன்று நாளை” என்ற படம் தயாரித்து வெளியிட்டார்

.

இரவும் பகலும் என்ற படத்தில் “இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான். அதை இருப்பவனும் எண்ணிப்பார்க்க மறந்துட்டான்” என்ற பாடலை சொந்தக் குரலில் பாடி நடித்தார்.

இவர் குரலை ஏற்றி இறக்கி, விழிகளால் பேசி,கைகளைப் பிசைந்து கொண்டு, ஒரு கைக்குள் இன்னொரு கையை குத்தி நடிக்கும் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. அசோகனை னினைவுபடுத்தும் பாடல்கள் இதோ!  அன்புடன் பேசாலைதாஸ்


-

இறந்தவனை சுமந்தவனும்

உடலுக்கு உயிர் காவல்

கன்னிபருவமவள்

ஆடிய ஆட்டமென்ன

பாரடி கண்ணே கொஞ்சம்

ஓராயிரம் பார்வையிலே

எண்ணபறவை சிறகடித்து

மனம் என்னும் மேடையின் மேலே

மனம் கனிவான

சத்தியம் இது சத்தியம்

வா அருகில் வா

என்னென்னவோ நான் நினைத்தேன்

புன்னகையில் ஒரு பொருள்

மல்லிகை ஹோய்

தேவிகா பற்றி கண்ணதாசன்

தேவிகா பற்றி கண்ணதாசன் பேசாலைதாஸ்



சினிமா நடிகைகள் எல்லோருமே ஒரே மாதிரி குணங்கெட்டவர்களோ,

நடத்தை கெட்டவர்களோ அல்ல;
அவர்களிலே உன்னதமான குணம் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
சுற்றம் காத்தல், விருந்தோம்பல், மரியாதை அனைத்தும் தெரிந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கழுத்தை நெரித்த நடிகைகளும் உண்டு; கை கொடுத்து உதவிய உத்தமிகளும் உண்டு.
இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் தேவிகா.
அவர் கதாநாயகியாக நடித்த போது இன்றைக்கிருக்கும் பல நடிகைகளைவிட, நன்றாகவே நடித்தார்; அழகாகவே இருந்தார்.
வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கத் தெரியாத காரணத்தால் வாழ்க்கையில் தோல்வியடைந்தார்.
இல்லையென்றால் தேவிகாவின் குணத்துக்கும், நடத்தைக்கும், எவ்வளவோ நிம்மதியான வாழ்க்கை அமைந்திருக்கும்.
என்ன உங்கள் படங்களில் தேவிகாவை விட்டால் வேறு யாரும் கிடைக்கவில்லையா? என்று நண்பர்கள் பலர் என்னைக் கேட்பார்கள்.
எந்தக் குடை மழையிலிருந்தும் வெயிலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுகிறதோ - அந்தக் குடையைத் தானே நான் தேர்ந்தெடுக்க முடியும், என்பேன் நான்.
படப்பிடிப்பிற்கு நேரத்தில் வருவார். பணம் கொடுத்தால் தான் வருவேன் என்று பிடிவாதம் செய்யமாட்டார்.
தயாரிப்பாளரின் கஷ்ட நஷ்டங்களில் முழுக்கப் பங்கு கொள்வார்.
என்னைப் பொறுத்தவரை, சில நேரங்களில் நான் திட்டிவிட்டாலும், அழுதுவிடுவாரே தவிர, முறைத்துக் கொள்ள மாட்டார்.
தமிழ் நாட்டிலேயே அதிகம் வளர்ந்த ஆந்திரப் பெண்மணியான இவர், தெலுங்கைவிடத் தமிழைத்தான் அழகாக உச்சரிப்பார்.
குடும்பப் பெண்ணாக நடித்தால், மயக்கம் தரக்கூடிய உருவங்களில் இவரது உருவமும் ஒன்று.
இந்த வாரம், ஒரு தெலுங்குப் படம் எடுப்பது பற்றிப் பேச அவர் என்னைச் சந்தித்தார்.
குடும்பத்துக்காகவே வாழும் சினிமா நடிகைகளில் தேவிகாவும் ஒருவர்.
எந்தக் காலத்திலும் சொந்த ஆசைகளுக்காக, குடும்பத்தின் நலனை அவர் தியாகம் செய்ததில்லை.
“பாவி” என்றொரு சொல் தமிழில் உண்டு. இது ‘பாவி’ என்பதன் எதிர்மறை. ‘பிரதட்சிணம் அப்ரதட்சிணம்’ என்பது போல ‘ஒரு பாவமும் அறியாதவர்’ என்பதே அதற்குப் பொருள்.
மனமறிந்து - அல்ல, தற்செயலாகக் கூட யாருக்கும் தீங்கு செய்தறியாதவர் தேவிகா.
‘ஆண்டவன் நல்லவர்களையே சோதிப்பான்’ என்றபடி அவருக்கும் சில சோதனைகள் வந்தன.
ஆண் துணை இல்லாத தேவிகா, அந்தச் சோதனைகளில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ள வேண்டியவரானார்.
‘நந்தன் படைத்த பண்டம், நாய்பாதி, பேய்பாதி என்பார்கள் என் தாயார்.
அதுபோல், தேவிகாவின் பணத்தையும் சிலர் சாப்பிட்டுவிட்டுப் போனார்கள்.
அதனை எண்ணி, தேவிகா துன்புறவில்லை.
எப்போது அவருக்கு என்ன துன்பம் வந்தாலும் எனக்குத்தான் டெலிபோன் செய்வார்.
என்னவோ ஆண்டவன், அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமையைக் கொடுத்தான். எனக்கு இருப்பது போலவே அவருக்கும் ரத்தக் கொதிப்பு இருக்கிறது.
சினிமா உலகில், ஒவ்வொரு நாளும் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு மற்றவர்களுக்காகவே வாழும் உயர்ந்த பெண்களில் ஒருத்தி தேவிகா.
துரதிருஷ்டவசமாக எனது ‘மங்கல மங்கை’ப் படம் பாதியிலேயே நின்று விட்டது.
அதில் ஒரு விரகதாபப் பாடலுக்கு தேவிகா நடித்ததைப் போல, அதற்கு முன்னாலும் பின்னாலும் எவரும் நடித்ததில்லை.
லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் பாகிஸ்தான் யுத்தத்தின் போது, சினிமா நடிகை நடிகர்கள் பெரும்பாலோரோடு, நானும் பஞ்சாப் முழுமையும் சுற்றுப் பயணம் செய்தேன்.
இரண்டு விமானப் படை விமானங்களில் தான் பயணம். விமானம் உயரமாக இருக்கும். அதற்கும் ஏணிக்கும் உள்ள தூரம் மூன்றடி உயரம் இருக்கும். எல்லோரும் மள மளவென்று ஏறிவிடுவார்கள். எனக்கு மட்டும் கால்கள் நடுங்கும். எனக்குக் கை கொடுத்து விமானத்திற்குள், இழுத்துக் கொள்வது தேவிகாவே.
ஒரு படத்தில் அவருக்காக, “பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே” என்ற பாடலை எழுதினேன்.
என்னிடம் செல்லமாகப் பாட வேண்டும் போல் தேவிகாவுக்குத் தோன்றினால் அந்தப் பாடலைத்தான் பாடுவார்.
வாழும் போது உலகம் கூட வரும். தாழும் போது ஓடிவிடும். இது வாடிக்கை. இதை நன்றாக உணர்ந்தவர் தேவிகா.
சினிமாப் படப்பிடிப்பு, இப்போது தெருக்கூத்து மாதிரி ஆகிவிட்டது. அந்தக் காலங்களில் அது ஒரு தெய்வீக அம்சமாக இருந்தது.
கதை, வசனம், பாட்டு டைரக் ஷன், நடிப்பு எல்லாமே பொறுப்போடு இயங்கிய காலம் அது.
சமயங்களில், தனியாக உட்கார்ந்திருக்கும் போது அந்தக் காலங்களை நினைத்துப் பார்ப்பேன்.
சில உன்னதமான உருவங்கள் படம் படமாகத் தோன்றும். - தேவிகா...
ஒருநாள் கூடப் படப் பிடிப்பை ரத்து செய்து என் தூக்கத்தைக் கலைக்காத தேவிகா.
என் முகம் கொஞ்சம் வாடியிருந்தால் கூட, ‘ அண்ணனுக்கு என்ன கவலை? என்று கேட்டு, என்னைப் புகழ்ந்தாவது ஒரு நிம்மதியை உண்டாக்கிவிடும் தேவிகா.
அவர் ஒரு சினிமா நடிகைதான். ஆனால் பல குடும்பப் பெண்களைவிட உயர்ந்த குணம் படைத்தவர்.
“பிரமிளா” என்ற தேவிகாவை நான் நினைக்கும் அளவுக்கு யார் நினைக்கப் போகிறார்கள் ?.
கவியரசர்
கண்ணதாசன்


ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...