திங்கள், 28 செப்டம்பர், 2020

0114 பாட்டும் பதமும் இன்றொருநாள் போதுமா?

 இன்றொரு நாள் போதுமா?  பேசாலைதாஸ் 


 எஸ்பி பாலசுப்ரமணியத்தை சொல்லவேண்டுமென்றால் கர்நாடக ஆஸ்தான பாடகனாக இருந்த பாலமுரளி கிறுஸ்ணாவை பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது ஏனெனினில் “பாலமுரளிகிருஷ்ணா” சரஸ்வதியின் பூலோக அவதாரம் என எஸ்.பி.பி எல்லா மேடைகளிலும் சொல்வார். அவரது ஆதர்ச குருநாதர் அவர். அவர் பாடியதில் நான் எல்லாம் ஒரு சதவீதம் கூட பாடவில்லை என பெருந்தன்மையுடன் பாராட்டுவார் பாலு! பாலமுரளிகிருஷ்ணா பற்றி பேசும் போதெல்லாம் சட்டென் று ஒரு ஞாபகம் என் மனதுக்கு வந்துவிடும், அதை இந்த வலைப்பூங்காவில் முன்னொருமுறை சொல்லி இருப்பேன் என நினைக்கின்றேன். பாலமுரளி அவர்களுக்கு ஆஸ்தான கவிஞர் விருது கிடைத்தவுடன், யாழ் பல்கலைக்கழகம் அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை, இராமநாதன் மண்டபத்தில் ஒழுங்கு செய்திருந்தது, அந்த நிகழ்வில், பாலமுரளி அவர்களை பார்த்து, எங்களுக்காக  சின்னக்கண்ணன் அழைக்கின்றான் என்ற பாடலை பாடும்படி சந்தோச உச்சத்தில், என்னையறியாமல் கத்திவிட்டேன், என் நண்பர்களும் என்னோடு சேர்ந்து குரல் எழுப்ப வேறு வழி இன்றி அந்த பாடலை அவர் பாடினார், அதுபோலவே இன்றொரு நாள் போதுமா என்ற பாடலையும் பாடினார்.

                                                                                         பாலமுரளிகிருஷ்ணா திரைப்படங் களில் பாடிய..சில பாடல்களில் சாகாவரம் பெற்ற பாடல் திருவிளையாடல் படத்தில் வரும் “ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா” பாடல் இந்தப்பாடலில் பாலமுரளிகிருஷ்ணா அவர்கள் ஒரு சங்கீத சாம்ராஜ்யமே நடத்தியிருப்பார் என்பது கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். 

தோடி என்ற வார்த்தையை தோடி ராகத்திலும், தர்பார் எனும் வார்த்தையை தர்பாரி ராகத்திலும், கானடா எனும் வார்த்தையை கானடா ராகத்திலும் பாடியிருப்பார்! நிச்சயம் அது ஒரு சங்கீத தலைவாழை விருந்து! தன் குரு மேல் உள்ள அபிமானத்தில் இந்தப் பாடலை எஸ்பிபியும் பாடினார், 

அதைக் கேட்ட பாலமுரளிகிருஷ்ணா அடேய் என்னைவிட நீ தான் இதை பிரமாதமா பாடியிருக்கே என்றாராம்! அவரது அந்தப்பாராட்டு எனக்குக் கிடைத்த ஆயிரம் ஆஸ்கார் விருதுகளுக்கும் மேல் என்பார் நன்றியுடன் பாலு அண்ணா! 

பாலமுரளி பாடிய பாடலையும்,அந்தப் பாடலை பாலு அண்ணாவின் குரலிலும் நீங்கள் கேட்கலாம்,  

                                                                           அன்புடன் பேசாலைதாஸ் 





ஞாயிறு, 27 செப்டம்பர், 2020

0113 அவளுக்கென்ன அழகிய முகம்! இவனுக்கென்ன இளகிய மனம்

அவளுக்கென்ன அழகிய முகம்!  பேசாலைதாஸ் 
 

இந்த பாடல் இடம் பெற்ற படம் சர்வசுந்தரம், அதுதான் நாகேஸ் அவர்களை சட்டெ ன்று நினைவுக்கு கொண்டு வரும் பிரமாண்டமான வெற் றிப்படம். பருப்பு இல்லாமல் சாம்பார் வைக்கமுடியாது. 1960-களில், நாகேஷ் இல்லா மல் எந்த திரைப்படமும், எம்.ஜி.ஆர். சிவாஜி படங்கள் உள்பட, தயாரிக்க முடியாது என்கிற அளவுக்கு மிகப்பிரபலமான நடிக ராக திகழ்ந்தார் நாகேஷ். சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதோடு மிகச் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்தார்.  ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த சர்வர் சுந்தரம், மேஜர் சந்திரகாந்த், ராமு, அன்பே வா, அதே கண்கள், முதலிய எல்லா படங்களிலும் அவர் நடித்தார். எல்லா படங்களுமே வெற்றிப் படங்கள்தான்.
கே.பாலசந்தர் நாடகமாக நடத்திக் கொண்டிருந்தது தான் சர்வர் சுந்தரம். அந்த நாடகத்தை ஏவி எம் னிறுவணம், அதனை படம் எடுக்க விரும்பியது. கிருஷ்ணன், பஞ்சு இயக்கத்தில், கே.பாலசந்தர் கதை, வசனம் எழுத திரைப்படம் ஆரம்பமானது.
ஒரு பாடல் காட்சியை படமாக்கும்போது அந்த பாடலை எப்படி ரெகார்டிங் செய்கிறார்கள், ரெகார்டிங் செய்யும் பாடலை, எப்படி படமாக்குகிறார்கள், நடன இயக்குனர்கள் நடிகர்களுக்கு எப்படி சொல்லித் தருகிறார்கள், அதனை எப்படி ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்பதையெல்லாம் ரசிகர்களுக்கு காட்டினால் புதுமையாக இருக்கும் என்று முடிவுசெய்தார்கள். அதனை இயக்குனர்கள் கிருஷ்ணனும், பஞ்சுவும் ஏற்றுக் கொண்டார்கள். இசை எம்.எஸ். விஸ்வநாதன், பாடல் எழுத வாலியை அழைத்து கம்போசிங்கில் உட்கார்ந்தார். இது நாகேசுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனே புறப்பட்டு கம்போசிங்கிற்கு வந்துவிட்டார்.
நாகேஷ்சை பார்த்ததும் வாலி குஷியாகி, வாய்யா வாய்யா, நீ கூட இருந்தாதான் மூடே வரும் என்று ஆர்வமானார். வாலி, நாகேஷ் இருவரும் ரொம்பவும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், கம்போசிங் களைகட்டியது. சிச்சுவேஷன் கேட்ட வாலி, எப்படி ஆரம்பிக்கலாம் சொல்லுய்யா என்றதும், நாகேஷ்
“அவளுக்கென்ன அழகிய முகம், அவனுக்கென்ன இளகிய மனம்” என்று அடியெடுத்து கொடுத்தார், அந்த அடியை பின்பற்றி வாலி, மளமளவென்று பாடலை எழுதி முடித்தார்.
யார் பாடுவது என்று யோசித்தார்கள். நாகேசுக்கு எ.எல். ராகவன்தான் எப்போதும் பாடுவது வழக்கம். அந்த நேரம், அவர் ஊரில் இல்லை. நாகேசும் டி.எம்.சவுந்தரராஜன் பாடினால் நன்றாக இருக்கும் என்று தனது விருப்பத்தை சொன்னார். அதன் பேரில் டி.எம்.எஸ். வந்தார். கம்போசிங் ஹாலில், டி.எம்.எஸ்., எம்.எஸ்.வியிடம் மெட்டு கேட்டார். பாடல் வரிகளை கேட்டார். டி.எம்.எஸ். எப்போதும் தான் பாடப்போகும் நடிகரை தெரிந்து கொண்டு அவருக்கு ஏற்றபடி தன் குரலில் மாறுதல் செய்து கொண்டு பாடுவது அவர் வழக்கம். அதன்படி, இந்தப்பாடலை தான் யாருக்காக பாடுகிறேன் என்று கேட்டார். எம்.எஸ்.வி. “நாகேஷ்” என்றார். அவர் பெயரை கேட்டதும், டி.எம்.எஸ். கேலியாக சிரித்து, அவருக்கு பாடலா? அதை நான் பாடவா, அதுக்கு இவ்வளவு பெரிய செட்டபா, என்னடா இது சோதனை, எனக்கு ஏற்பட்ட வேதனை, என்று திருவிளையாடல் டி.எஸ். பாலையா பாணியில் சலித்துக் கொண்டார்.
நாகேஷ் எல்லாம் பாடி, அதை தியேட்டர்ல உட்கார்ந்து யார் பார்க்கிறது? என்று ஏளனமாக கேட்டார். அப்போது நாகேஷ் ரெகார்டிங் ரூமிற்குள் உட்கார்ந்திருந்தார்.டி.எம்.எஸ். விமர்சனத்தை கேட்டு, அவரது முகமே மாறிவிட்டது. இருந்தும் பொறுமையாக இருந்தார். நாகேஷ் மனதில், ஒரு வைராக்கியம் உருவானது. டைரக்டர் கிருஷ்ணன், பஞ்சுவிடம் சொன்னார், ‘சார் டி.எம்.எஸ். சொன்னதை பொய்யாக்கி காட்டணும் சார்’ இந்த பாட்டுக்குன்னே ரசிகர்கள் திரும்ப திரும்ப இந்தப் படத்தை பார்க்கணும் சார். அந்த அளவுக்கு புதுப்புது விஷயங்களை இதில் சேர்க்கணும் என்று இதனை ஒரு சவாலாக ஏற்றார். டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தை மாஸ்டரா போடுங்க என்றார். அவர் இந்த மாதிரி பாடல் பண்ணுவதில் புகழ்பெற்றவர். அவர் வேறுயாரும் இல்லை, தற்போது இந்திய அளவில் டான்ஸ் மாஸ்டராக, ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் பிரபுதேவாவின் தந்தைதான். அவரை புக் செய்ததும், ஒத்திகைக்கு நாள் குறித்தார்.
நாகேஷ் இயல்பாகவே நல்ல டான்சர், ஆனாலும் பாடல் நன்றாக வரவேண்டும் என்ற நோக்கத்தில், பல நாட்கள் வந்து ரிகர்சல் செய்தார். உடன் ஆடுவதற்கு எந்த நடிகையை தேர்வு செய்யலாம் என்று யோசித்தபோது, நாகேஷ் சொன்னார் நடிகைகள் வேண்டாம், ஏன்னா அவர்கள் நல்லா நடிப்பார்கள். ஆனால் நல்லா டான்ஸ் பண்ணணுமே, அப்போதுதான் பாடல் காட்சிக்கு நல்லா இருக்கும். அதனால் சொல்லிக் கொடுத்த, ரிகர்சல் பண்ணின, டான்ஸ் மாஸ்டர் சுந்தரம் உதவியாளர் சாந்தாவை டான்ஸ் பண்ண வைக்கலாம். என் மூடுக்கு ஏற்ற மாதிரி பண்ணுவாங்க என்றார். ரெகார்டிங் எப்படி நடக்கிறது என்பதை ஆடியன்சுக்கு காட்ட தியேட்டர் செட்டே புதிதாக போட்டு படம் பிடித்தார்கள். இப்படி நாகேஷ் பாத்திரத்தை உணர்ந்து ஈடுபாட்டுடன்முழு ஒத்துழைப்பு தந்ததால், அவளுக்கென்ன அழகிய முகம் பாடல் காட்சி மிகச் சிறப்பாக வந்தது. படம் ரிலிசாகி பாட்டும் செம ஹிட் ஆனது, இதை பார்த்த டிஎம் செளந்திரராஜன் ‘ஜெய்ச்சிடீங்களே அய்யா!, சர்வர் சுந்தரத்துல நான் பாடிய பாடல் எடுபடாது, தியேட்டர்ல ஆள் இருக்காது என்றேன். ஆனா, அந்த பாட்ட பார்க்கவே ஜனங்க வர்றாங்கன்னு கேள்விப்பட்டேன். ரொம்ப மகிழ்ச்சி அய்யா’ என்று வாழ்த்திவிட்டு சென்றார்.
நம்பிக்கை இழந்து பேசியவரையும், வியக்க வைத்த பெருமை, நாகேசை சேரும்.
இந்தப்படம் சென்னையில், கிரவுன், ராக்சி, வெலிங்டன், கிருஷ்ணா, எல்லா தியேட்டர்களிலும் நூறு நாட்கள் ஓடியது. இதன் வெற்றியை கொண்டாட நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒரே வேனில் புறப்பட்டு எல்லா தியேட்டர்களுக்கும் ரசிகர்களை சந்திக்க புறப்பட்டார்கள். கிருஷ்ணா தியேட்டரின் இடைவேளையில் நாகேஷ் பேசினார். எல்லோருக்கும் வணக்கம். இயக்குனர் பேசும்போது இந்த படத்தின் வெற்றிக்கு நாகேஷ் தான் காரணம் என்றார். நான் அதை ஒத்துக்கொள்ளமாட்டேன், என்று கூறிவிட்டு, நாகேஷ் ரசிகர்கள் மத்தியிலிருந்து, ஒரு பையனை சுட்டிக்காட்டி, தம்பி இங்க வாங்க என்று அவனை மேடைக்கு அழைத்தார். அவன் மேடைக்கு வந்ததும், தம்பி நீங்க இந்த சர்வர் சுந்தரம் படத்தை எத்தனையாவது முறையா பார்க்க வந்திருக்கீங்க என்றார். அவன் நாலாவதுமுறையா பார்க்கிறேன் என்றான். உடனே நாகேஷ் கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவரிடம் தம்பி நீங்க? என்றார். அவன் ஐந்தாவது முறை என்றான். உடனே நாகேஷ், பார்த்தீங்களா ஒவ்வொருத்தரும் ஒருமுறைக்கு மேல் பலமுறை இந்த படத்தை பார்த்திருக்கீங்க. இப்போ புரியுதா இந்த படம் இவ்வளவு பெரிய வெற்றி அடைந்துருக்குன்னா அதுக்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள்தான் என்று சொன்னார். அப்படி ஒரு புத்திகூர்மையான சிறந்த மனிதர், திறமையான நடிகர் நாகேஷ். அவருக்கு நான் சூட்டக்கூடிய பட்டம் நகைச்சுவை திலகம் ஒத்துக்கொள்வீர்கள்    அன்புடன் பேசாலைதாஸ் 





வியாழன், 24 செப்டம்பர், 2020

0112 பாட்டும் பதமும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன!

 மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன! பேசாலைதாஸ்


முதாய சீர்திருத்தக் கதைகள், குடும்பக் கதைகள், புராணக் கதைகள், வரலாற்று பின்புலம் கொண்ட கதைகள், இதனி டையே புது முயற்சிகள் என்று தமிழ்சினிமா கொஞ்சம் கொஞ் சமாக தன்னை மெருகேற்றிக் கொண்டு 1960களில் பல வகை யான திரையாடல்களை கண்டிருந்தது. இந்த படங்கள் அனைத் திற்கும் அதனதன் வசம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் இருந்தார்கள். இதில் ஏ.பி.நாகராஜன்-சிவாஜி கணேசன் கூட்டணி என்றால் அதற்கு தனி ரசிகர் கூட்டம் இருந்தது.
அவர்கள் படங்களில் மிக மிக முக்கியமானதொரு கலைபடைப்பு ‘தில்லானா மோகனாம்பாள்’. திரையிசை திலகம் K.V.மகாதேவன் இசைக்கூட்டிய களஞ்சியம். இசையின் முக்கியத் துவத்தோடு வந்த இந்த படத்தின் பாடல்கள் இன்றும் ப்ரமாண் டாமாய் தெரிகிறது.
“மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன”. இந்த பாடலை கேட்பதை விட பார்ப்பது பேரழகு. பத்மினி, சிவாஜி, பாலையா, தங்கவேலு, ராமச்சந்திரன் போன்ற பெருங் கலைஞர்கள் சேரந்து உயிரூட்டிய பாடல். இந்த வரிசையில் முதலிடம் பத்மினிக்கு கொடுத்ததன் காரணத்தை அறிய வேண்டுமானால் இந்த பாடலின் படக்காட்சியை காண வேண்டும். பாடலுக்கு உயிர் சுசீலாவின் குரல், உடல் கண்ணதாசனின் வரிகள், சுவாசம் KV. மகாதேவனின் இசை.
பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. சிவாஜி குழுவில் இருப்பவர்கள் அதை காண விரும்புகிறார்கள். ஆனால் சிவாஜி மறுக்கிறார். சிவாஜி படுக்கைக்கு சென்றதும் அவருக்கு தெரியாமல் மற்ற வர்கள் நிகழ்ச்சியை காண கிளம்புகிறார்கள். சிவாஜியும் அவர்களுக்கு தெரியாமல் தானும் வருகிறார். தனது தன்மானம் கெடாமல் மண்டபம் வந்து தனித்து நிகழ்ச் சியை காண ஒரு தூணின் பின்புறம் மறைந்திருந்து ரசிக்கிறார்.
பாடல் காட்சி தொடங்குகிறது. ஜதிகளும், மிருதங்க தாளங்களும் பின் பத்மினியின் பாதங்களும் அனைத்தும் ஒருசேரும்போது கண்ணதாசனின் பல்லவி....
"மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன..
அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…என்று
மறைத்திருந்து பார்க்கும் மர்மமென்ன.."
‘இந்த சிலை அழகா’ என்று சொல்ல, சிலைபோல ஒவ்வொரு உடல்பாவங்களும்; அதை மறைந்திருந்து ரசிக்கும் சிவாஜியின் முகபாவங்களும் போட்டியிடத் தொடங்கும்.
"நவரசமும்ம் …….
முகத்தில் நவரசமும்..
மலர்திருக்கும் முகத்தில் நவரசமும்…
செக்கச் சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும்..கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன"
‘நவரசமும்ம்ம்’ என்று தொடங்க பத்மினியின் நவரச உணர்வுகள் ஒரே பாய்ச்சலில் நடந்தேறும். நாட்டியப் பேரொளி என்று சும்மாவா சொன்னார்கள்!
"எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்…
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்..
பாவை என் பதம் காண நாணமோ….
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா…
தூயனே வேலவா…மாயனே சண்முகா"
மறைந்திருந்து பார்ப்பதை... அறிந்துகொண்டதை விளக்குவது போல ‘எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்’ என்று வரி.
வெட்கத்தோடு ரசிக்கும் சிவாஜியை பார்த்து “பாவை என் பதம் காண நாணமோ….
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா” என்று தனது உணர்வுகளை வெளிப்படுத்துவார் பத்மினி.
“தூயனே வேலவா…மாயனே சண்முகா” என்ற வரிமுடிந்து ‘சண்முகா’ என்று வரும் போது சிவாஜி முகம் சட்டென மலரும். அவர் தானே சண்முகசுந்தரம். மறைந்திரு க்கும் மாயன்! இந்த ஒரு இடத்தில் கண்ணதாசன் சொல்லாடல் இசைக்கு ஏற்றாற் போல வந்து விழும், ஆட ஆட என்று பகுதி சொல் அடைவாக வந்து விழும்.
மான் ஆட மலை யாட..நதியாட...
மங்கை இவள் நடனமாட….
கண் ஆட..மண் ஆட .ஒளியாட..இடையாட….
செல்வி இவள் கைகள் ஆட….
தூயனே வேலவா…மாயனே சண்முகா ,….எனையாளும் சண்முகா வா…"
இங்கு கண்ணதாசனும் KV.மகாதேவனும் போட்டி போட அந்த போட்டிக்கு, இருவருக்கும் வெற்றி என்று தீர்ப்பளிப்பது போல பத்மினியின் நடன அசைவுகள் ப்ரமிப்பாக இருக்கும்!
பாடலில் நட்டுவனார் தங்கவேலு ஜதி, ராமச்சந்திரனின் மிருதங்கம், சிவாஜிக்கு கீழே சிவாஜிக்கு தெரியாமல் நாட்டியம் ரசிக்கும் பாலையா என்று அவரவர் தோன்றும் காட்சிகளில் சிறப்பு செய்திருப்பார்கள். அதுவும் பாலையா ஒரு காட்சியில் தான் தவில்காரர் என்பதால் தன்னை அறியாமல் முன் அமர்ந்திருக்கும் பெண்ணின் முதுகில் இசைக்க அந்த பெண் திரும்பி பார்த்தும் அருகிலிருக்கும் சிலையில் வாசிக்கத்தொடங்குவார். பாலையாவின் உடல்மொழி ரசிக்க வேண்டிய ஒன்று.
ஐம்பது ஆண்டுகள் மேல் ஆகியும் ஒரு முழுப்பாடலாக அத்தனை கொண்டாட்டம் நிறைந்த பாடல் இது. இந்த பாடலில் ஒவ்வொரு காட்சியும் அழகு நிறைந்தது.
பத்மினி பேரழகு! இந்த படத்தில் நடிக்கும்போது பத்மினிக்கு வயது 36 என்பது உபதகவல். யோசித்து பார்த்தால் இன்றைய காலகட்டத்தில் பத்மினியை போலொரு நடிகை யாரும் இல்லை என்பது தான் உண்மை.
அன்புடன் பேசாலைதாஸ்

சனி, 12 செப்டம்பர், 2020

0111 பாட்டும் பதமும் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்,,,,,

கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்   பேசாலைதாஸ்  


கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் என்ற பாடல் முருகன் பக்திப்பாடல், இந்தபாடலின் சிறப்பு என்னவென்றால் கவிஞர் வாலியின் முதலாவது பக்தி பாடலும், அவரது முதலாவது பாடலுமாகும்.டைதில் என்ன ஆச்ஹ்ச்ஹியம் என்றால், வைஸ்ணவ குடுமத்தில் பிறந்து வளர்ந்த, வாலி அவர்கள் எப்படி முருனை நினைத்து பாடினார் அதுவும் அவரது முதலாவது பாடல், அதற்கான விளக்கத்தை அவரே தருகின்றார்
எப்படி எங்கள் குடும்பம் இருந்திருக்கும் என்று சொல்ல தேவையில்லை.
ஆனால், நான் இன்று நெற்றியில் குங்குமமும், விபூதியும் பூசுகிறேன். இது என் வாழ் நாள் முழுவதும் இருக்கும்.
காரணம், நான் ஸ்ரீரங்கத்தில் இருந்த போது, சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்டு, கடன்கள் பட்டு பல வருடங்களாக வாழ்ந்த நேரம் அது.
ஒருநாள் மதியம் திருவானைகா சிவன் கோவிலில் ( ஸ்ரீரங்கத்துக்கு நேர் எதிரே உள்ளது.) கொடுக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட நடந்தே சென்றுவிட்டேன்.
சாப்பிட்டுவிட்டு அகிலாண்டேஸ்வரி சன்னதியில் வெளியே உள்ள மண்டபத்தில் "அம்மா நீ ஒருத்தி தான் எனக்கு உதவ முடியும்" என்று மனதில் கூறி அவளை வெளியில் இருந்தவாறே வேண்டி கும்பிட்டுவிட்டு களைப்பாற அமர்ந்தவன் எப்படியோ படுத்து உறங்கிவிட்டேன்.
அன்னையின் மடியில் படுத்து உறங்கியது போன்ற உணர்வு அன்று எனக்கு ஏற்பட்டது.
கனவிலே முருகன் வந்து 'என்னைப் பற்றி பாடு' என்றான்.
அன்னையின் எச்சில் என் உதட்டிலும், நாவிலும் பட்டு தெறித்தது.
திடுக்கிட்டு விழித்துக்கொண்டேன்.
'அம்மா, முருகா' என்று சொல்லி வணங்கிவிட்டு நடையாகவே வீடு வந்து சேர்ந்தேன்.
வீட்டில் அனைவரும் 'எங்கே சென்றுவிட்டாய்? சாப்பிட்டாயா?' என்று கேட்டார்கள்.
நண்பன் வீட்டில் அம்மா சாப்பாடு கொடுத்தார்கள் என்று சமாளித்து விட்டேன்.
வீட்டில் சொல்ல முடியாது.
அதுவும் சிவன் கோவிலுக்கு போனியா? என்று வேற கேள்வி வரும். நண்பர்களிடம் மெதுவாக சொன்னேன்.
அங்கு கொடுத்ததோ ஒரு கையளவு பிரசாதம் தான், ஆனால் எனக்கு வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வு.
பிறகு சாப்பிட்ட களைப்பு போல அங்கேயே தூங்கியதையும் சொன்னேன். கிண்டல் அடித்தார்கள், கற்பனை, கற்சிலை என்று எல்லாம் என்னிடம் நகையாடினார்கள்.
ஆனால் என் உள்ளுணர்வு சொல்லியது இது உண்மை என்று.
எனக்கு TMS அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும். அவரின் விலாசத்தை கஷ்டப்பட்டு வாங்கிவிட்டேன். நண்பர்கள் சொன்ன வரிகள் என்னை உறுத்தியது.
அதன் வரியில் முருகன் மேல் பாடல் புனைந்து TMS க்கு போஸ்ட் கார்டு லே எழுதி அனுப்பிவிட்டேன். அகிலாண்டேஸ்வரி தாயே நீயும் உன் மகனும் தான் இனி எனக்கு துணை என்று வேண்டிக்கொண்டேன்.
TMS இருக்கும் பிஸியில் என் போஸ்ட் கார்டை எங்கு பார்ப்பார் என்று நினைத்து மறந்துவிட்டேன்.
ஆனால் என் தாயின் அருள், முருகனின் கருணை TMS என் கார்டை பார்த்து, அவரே அதற்க்கு மெட்டும் போட்டு பாடிவிட்டார்.
பிறகு எனக்கு அவரிடம் இருந்து கடிதம் வந்தது, 'என் முருகன் பாடலை நீ எழுதி கொடுத்தாய், மிகவும் நன்றாக இருந்தது, நானே இசை அமைத்து பாடி உள்ளேன், வரும் திங்கள் அன்று வானொலியில் காலை 06.30 மணிக்கு ஒளிபரப்பாகும்*l கேட்டுவிட்டு உன் கருத்தை அனுப்பு, மெட்ராஸ் க்கு வா, உனக்கு நான் சன்மானம் தரணும், இது போன்று பாடல்கள் நிறைய நீ எழுது' என்று போட்டு இருந்தார்.
எனக்கு நம்ப முடியவில்லை, சந்தோசத்தில் 'தாயே, முருகா' என்று வீட்டிலேயே உரக்க கூவிவிட்டேன். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரே ஆச்சர்யம், கோபம், என்னது என்று கோபமாக கேட்டார்கள்.*
நான் பதில் பேசவில்லை, கடிதத்தை கொடுத்தேன். அனைவரும் வாங்கி படித்தார்கள்.
அவர்களுக்கும் சந்தோசம் தான்.
முகத்தில் தெரிந்தது, ஆனால் வெளியில் காட்டி கொள்ளாது இருந்துவிட்டார்கள்.
அப்பா மட்டும் என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். பதில் சொல்லவில்லை.
ஆனால் எனக்கு உற்சாகம் அளித்தார் அப்போதும் அவர்
ரெங்கநாதனை பற்றி ஒரு பாட்டு எழுதி TMS பாடணும் என்றார்
எனக்கு உள்ளூர சிரிப்பு, இதுவரை சாப்பாடு போடாத ரெங்கநாதனை பற்றி நான் என்ன எழுதணும் என்று நினைத்தேன்.
அப்பா மெட்ராசுக்கு செல்ல உத்தரவு கொடுத்துவிட்டார்.
நண்பர்கள் தான் அதிக அளவு சந்தோஷப்பட்டார். மெட்ராஸ் சென்றேன், TMS சை பார்த்தேன், பாடலுக்குண்டான அன்பளிப்பாக சின்ன தொகையை கொடுத்து என்னை 'நீ ஏன் சீனிமாவுக்கு பாடல் எழுத கூடாது?' என்று கேட்டார்.
நான் என்ன வர மாட்டேன் என்றா சொன்னேன்? கூப்பிடுங்கள் உடனே உங்கள் பின்னால் ஓடி வருகிறேன என்று மனதில் நினைத்துக்கொண்டேன்.
ஒருநாள் அவர் என்னை விஸ்வநாதனிடம் அறிமுகப்படுத்தி இவனை சரியாக பயன்படுத்து, நன்றா எழுதுகிறான் என்று சொல்லி வைத்தார்.
என் மனதில் தோன்றியது காசி விஸ்வநாதர் தான் அம்மையும் அப்பனும் எனக்கு கருணை புரிந்து விட்டார்கள் என்றே நினைத்தேன்.
ஆம் விஸ்வநாதன் உதவியால் நான் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருந்த நான், சாப்பாட்டில் கை வைக்க நேரமில்லாமல் எழுதி கொடுத்துக் கொண்டே இருந்தேன்.
கவிஞர் வாலி
வாலியின் முதல் முருகன்பாடல்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன் - நீ
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்.
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அற்புதமாகிய அருட்பெருஞ் சுடரே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
அருமறை தேடிடும் கருணை என் கடலே
.
- கற்பனை என்றாலும்
.
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
கற்பதெல்லாம் உந்தன் கனிமொழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
காண்பதெல்லாம் உந்தன் கண்விழியாலே
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்
கந்தனே உன்னை மறவேன்

நான் ஒரு இந்து ஐயங்கார் குடும்பத்தில் பிறந்தவன், ஸ்ரீரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன்.



ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...