சனி, 28 டிசம்பர், 2019

105 பாட்டும் பதமும் "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது."

105 பாட்டும் பதமும்  
"பாலிருக்கும் பழமிருக்கும் பசியி ருக்காது பஞ்சணையில் காற்று வரும் தூக்கம் வராது." பேசாலைதாஸ்


                                             நாம் எல்லோரும் விரும்பிக்   கேட்க்கும் பாடல் இது, ஆனால் கவிஞர் அவர்க ளுக்கு இந்தப்பாடலில் கூட பிரச்சனை எழுந்தது  சென்ஸார் சீறியது. "அய்யய்யோ அபச்சாரம். என்ன இது கண்ணதாசன் இப்படி எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ?" அப்படி என்ன எழுதி இருந்தார் கண்ணதாசன் ?


"காதலுக்கு ஜாதியில்லை மதமும் இல்லையே

கண்கள் பேசும் வார்த்தையிலே பேதமில்லையே

வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது வேதம் செய்த குருவை கூட விடுவதி ல்லையே." 


இந்த கடைசி வரியை கட் செய்யச் சொன்னார்கள் சென்ஸார் அதிகாரிகள். இப் போது பதிலுக்கு சீறீனார் கண்ணதாசன் : "என் னய்யா இது ? மந்திரங்களில் சிறந்தது காயத்ரி மந்திரம். அதை எழுதிய விஸ்வாமி த்திரரையே காதல் விடவில்லையே ? அதைத் தானே நான் எழுதி இருக்கிறேன்? என்ன ஆனா லும் சரி . எவர் சொன்னாலும் சரி . இதை நான் மாற்ற மாட் டேன்."


                                    இப்போது படக் குழுவினர் கெஞ்   சினார்கள்: "நீங்கள் சொல்வது சரிதான் கவி ஞரே , ஆனால் படம் வெளி வர வேண்டுமே ?" வேறு வழியின்றி வேத வரிகள் மாறின :


"வேதமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது மேகம் செய்த உருவம் போல மறைவதி ல்லையே."


                                                     படமும் வெற்றிகண்டது பாடல்களும் ஹிட் ஆனது. இப்படி அனுபவ ங்கள் அடிக்கடி ஏற்பட்டதால்தானோ என்னவோ , ஒரு முறை இப்படி எழுதி இருந்தார் அவர் : "நான் இறந்த பிற்பாடு என்னையே நான் விமர்சனம் செய் துகொண்டால் இப்படித்தான் சொல்வேன்:

முட்டாள்களிடையே வாழ்ந்துகொண்டிருந்த கெட்டிக்காரனொருவன் கெட்டிக்காரர்களோடு பழகத்தொடங்கி முட்டாளாக செத்துப் போனேன்.” -கண்ணதாசன்

                                                                    அடுத்த பாடலில் சந்திக்கும் வரை   அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் 


104பாட்டும் பதமும் மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிடான்

104 பாட்டும் பதமும்  மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிடான்      பேசாலைதாஸ் 

                                         கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் சக்தி படைத்தவை அவ ரின் பாடல் வரிகளை கண்ணு மிரண்டவர்கள் பலர்,  அது "பாவ மன்னிப்பு" படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். அதற்கான பாடல்களை எழுதிக் கொண்டிருந்தார் கண்ணதாசன். கோப த்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரி கள் ! "இல்லை . இந்த வரியை அனுமதிக்க முடி யாது." "ஏன் ?" "கண்ணதாசன் எழுதிய அந்த வரி தவறு !" "எப்படி ?" "அது என்ன மதங்களை படைத்தான் என்று அவர் எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதித் தர சொல்லுங்கள். இல்லா விட்டால் இந்தப் பாடலை அனுமதிக்க முடி யாது." சொன்னார்கள் கண்ணதாசனிடம்.

                                                           சென்சார் கண்டித்து அனுப்பிய பாடலை கண்ணதாசன் வாசித்துப் பார்த்தார். "பறவையை கண்டான் விமானம் படைத்தான் பாயும் மீன்களில் படகினை கண் டான் எதிரொலி கேட்டான் வானொலி படைத் தான் எதனைக் கண்டான் மதம்தனைப் படைத் தான்." கண்ணதாசன் சொன்னார்: "நான் சரி யாகத்தானே எழுதி இருக்கிறேன். சென்சாரிடம் போய் சொல்லுங்கள்." சென்ஸார் மறுத்தது : "இல்லை. மதங்களை கடவுள் உருவாக்கினார். மனிதன் அல்ல." கண்ணதாசன் சிரித்தார் :

                                                     "இது என்ன வேடிக்கை ? சிவனோ விஷ்ணுவோ வந்து இந்து மதத்தை உண்டாக்கினார்களா ? அல்லது அல்லாஹ் வந்து இஸ்லாமிய மதத்தை உருவாக்கினாரா ? இல்லையென்றால் பரமபிதா வந்து கிறிஸ்தவ மதத்தை படைத்தாரா ? கடவுள்கள் பெயரை சொல்லி , மனிதர்கள் உருவாக்கியதுதானே அத்தனை மதங்களும் ? அதைத்தானே நான் எழுதி இருக்கிறேன் ?" சென்ஸார் திகைத்தது. ஆனாலும் ஈகோ தடுத்தது. 

                                                "இல்லை இல்லை. ஏற்றுக் கொள்ள முடியாது. மாற்றத்தான் வேண்டும்." கண்ணதாசன் தலையில் அடித்துக் கொண்டு , இப்படி மாற்றி எழுதிக் கொடுத்தார்: "எதனைக் கண்டான் பணம்தனைப் படைத்தான்" படத்தில் தான் சிவாஜி இப்படிப் பாடுவார். ஆனால் ஒரிஜி னல் இசைத் தட்டில் 'மதம்தனை படைத்தான்' என்ற வார்த்தைதான் இருக்கிறது. கண்ண தாசன் அடுத்த பாடலை எழுதப் போய் விட்டார்.

                                                       அன்புடன் உங்கள் பேசாலைதாஸ் 

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...