வியாழன், 17 ஜனவரி, 2019
பாட்டும் பதமும் 92 " வளையோசை கல கலவென கவிதைகள் படிக்குது, குலு குலு தென்றல் காற்றும் வீசுது"! பேசாலைதாஸ்
" வளையோசை கல கலவென கவிதைகள் படிக்குது, குலு குலு தென்றல் காற்றும் வீசுது"! பேசாலைதாஸ்
இந்த பாடல் கமலஹாசன் நடித்த சத்தியா படத்தில் வருகின்றது, இசை இளைய ராஜா, பாடியவர்கள் லதா மங்கேஸ் கார், எஸ்.பி பாடல்வரிகளுக்கு சொந்தகாரன் என் கவி ஆசான் கண்ண தாசன் இல்லை, வாலி அவர்கள். கலஹாசனின் பிரத்தியேக விருப்பதிற் காக இளையராஜா இசை அமைத்தது, இசைஞானி பாடல்களுக்கு மட்டும் இசை அமைப்பது இல்லை, இசைக்கருவிகளின் இசை நுட்பத்தின் விஸ் தீரனம், அதன் விலாசம் வெளிப்படவேண்டும், இசை இரசிகர்களை சென் றடையவேண்டும் என்ற நோக்கிலும் அசைவடித்துள்ளார்.
அவ்வாறு அவர் இசை வடித்ததில், How to Name it? மற்றது Nothing but Wind! என்ற இரு இசை அமைப்பு கோர்வைகளும் தனியே இசைக்கருவிகளுக்கான இசைவடிவங்களே! Nothing but Wind என்ற இசைக்கோர்வினிலே , ஹரிப்ரசாத் செளத்ரியின் புல்லாங்குழல் வாசிப் புக்காக் இளையராஜா வடிவமைத்த ஒரு சிறு துண்டின் புல்லாங்குழலின் விஸ்தாரணமே இந்த பாடல்.
இந்த பாடலுக்கு வரி சேர்க்க, வாலியை அழைத்த போது, வெறும் இசை அலையாக இருக்கும் இசை சப்தத்திற்கு ஏற்றாற் போல, இரட்டைக்கிழவி வழக்கில், அதாவது தமிழ் இலக்கணத்தில் ஒரு சொல் இரண்டு முறை அடுத்தடுத்து வந்தால் அது இரட்டைக்கிழவி என் பார்கள், அதுபோலவே புகழவும், இகழவும் ஒரே சொல்லை பாவித்தால் அது உயர் நவிற்ச்சி அணிச்சொல், அல்லது இரட்டைப்போலி என்பார் கள், ஏன் இப்பொழுது உங்களுக்கு தொல்காப்பியரின் தொல்லைகள், நேரடியாக இசைக்கு வருகின்றேன்.
புல்லாங்குழலின் இசைக்கு ஏற்றாற்போல வாலியின் சொல் ஆலாபணைகள் பாடலுக்கு மெருகூட்டுகின் றது, கல கல, குளு குளு, பட பட, சிலு சிலு இந்த சொற்கள் எல்லாம் மந்திர சொற் கள் அல்ல, வெறும் சொற்கள்தான், நாம் அன்றாடம் பாவிக்கும் சொற் கள்தான், ஆனால் இசைக்கு ஏற்றாற்போல சொற்கள் அமைக்கும் வித் தையில் தான் ஒரு சொல் இசையின் உச்சிக்கு செல்கின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.
நான் இரசித்து சுவைத்த அந்தபாடலை நீங்களும் கேளுங்கள், கமலஹாசனின் இளமை, அமலாவின் தளிர் உடல் இவை களை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது, என் வாலிப காலத்தை வீணாக தொலைத்தேன் என எண்ணத்தோன்றுகின்றது, ஆகவே வாலிபரே காதல் செய்வீர், அனைத்துக்கும் ஆசைப்படுங்கள்! ஜன்னலை திற, காற்று வர ட்டும்! அன்புடன் பேசாலைதாஸ்
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
—
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்க தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
சென் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
—
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
—
உன்னை காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்களோடு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்
—
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலு சிலு சிலு என
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
பாட்டும் பதமும் 91 "நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா," பேசாலைதாஸ்
"நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா,"
பேசாலைதாஸ்
சிவாஜி கனேசன் நடித்த தியாகம் என்ற படத்தில் இடம் பெருகிறது இந்த பாடல், செளந்தராஜன் குரலில், விஸ்வ நாதன் இசையில், கண்ணதாசனின் வரிகளில் இந்தபாடல் அமைகின் றது. உயர்ந்த கருத்துக்களையும் உயர்வான இசையையும் தருவதே அருமையான பாடல்! உங்கள் கற்பனை வளத்தை விசாலமாக்கவேண் டுமா? இப்படியான பாடல்களை கேளுங்கள், இந்த பாடலிலே என் கவி ஆசான் கண்ணதாசன், பெரும் காப்பியமான இராமயணத்தின் போத னையை வெகு இலவாக புகுத்தியுள்ளார், நமது குடும்பங்களில், அன்றா டம் நடப்பது இது,
வெளியே போக வேண்டும் என்று மனைவி சொல்லி இருப்பாள். கணவன் வேண்டாம் என்று சொல்லி இருப்பான். பின் கொஞ்சம் பேச்சு வார்த்தைக்கு பின், சரி வா என்று கணவன் மனை வியை அழைத்துக் கொண்டு சென்றிருப்பான். போன இடத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும்..பணப் பை தொலைந்து இருக்கலாம், அல் லது கல் தடுக்கி கீழே விழுந்து அடி பட்டிருக்கலாம்... உடனே கணவன் மனைவியை பார்த்து " எல்லாம் உன்னால் தான்...நான் அப்பவே சொன்னேன்...பேசாமல் வீட்டில் இருக்கலாம் என்று...கேட்டாத் தானே" மனைவி செய்யாத தவறுக்கு அவளை கணவன் திட்டுவதை பார்த்து இருக்கிறோம்.
இந்த மாதிரி சம்பவங்கள் வீட்டில் மட்டும் அல்ல, அலுவலகத்தில் கூட நடக்கலாம். ஏதோ ஒரு முடிவு எடுத்து, அது தவறாகப் போனால் யாரையாவது பிடித்து பலி கடாவாக ஆக்கி விடுவா ர்கள். நடந்த தவறுக்கு யாருமே காரணமாய் இருக்க மாட்டார்கள். இரு ந்தாலும் வரும் கோபத்தில் யாரையாவது குறை கூறுவது என்பது மனித இயல்பு.
இதே போல ஒரு சம்பவம் இராமாயணத் தில் நடக்கின்றது, இராமனின் மணி முடியை பறித்து அவனை காட்டுக்கு போகச் சொல்லி விட்டார்கள் . இலக்குவனுக்கு அடங்காத கோபம். விதி க்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி,,, என்று புறப்பட்டான். அவனை தடுத்து, இராமன் சமாதனம் கூறுகிறான். தவறு நடந்தது என்றே கொண்டாலும் அதற்க்கு யாரும் காரணம் இல்லை, நதியில் நீர் இல்லை என்றால் அது நதியின் குற்றம் அன்று.. மழை பொழியாத இயற்கையின் குற்றம். நான் கானகம் போவதற்கு காரணம் தசரதன் காரணம் இல்லை, கைகேயி காரணம் இல்லை, பரதன் காரணம் இல்லை...விதியின் பிழை என்று கூறுகிறான்.
இராமர் இடத்தில் பேசாலைதாஸோ அல்லது நீங்களோ இருந்திருந்தால் தசரதனை குறை கூறி இருப்போம், அல்லது கைகேயியை அல்லது பரதனை குறை கூறி இருப்போம்.. அவர் கள் மேல் கோபம் கொண்டு இருப்போம்.. கோபம் வெறுப்பை தந்திரு க்கும். இராமன் அவர்கள் யாருமே தவறு செய்யவில்லை. எல்லாம் விதிப் பயன் என்று நினைத்தான். எனவே அவர்கள் மேல் அவனுக்கு கோபம் வரவில்லை. இதை கம்பர் தன் செய்யுளில் அழகாக கூறுவார்.
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை; அற்றே
பதியின் பிழையன்று; பயந்து நமைப் புரந்தாள்
மதியின் பிழை அன்று; மகன் பிழை அன்று; மைந்த!
விதியின் பிழை; நீ இதற்கு என்னை வெகுண்டது?' என்றான்.
கம்பர் நான்கு வரிகளில் விளக்கிய பெரும் போதனையை என் ஆசான் மிக எளிதாக இரண்டே வரிகளில் எழுதி னான். அது இதுதான் "நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை. விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா" பார்த்தீர்களா, உய ர்வான கருத்தை கணதாசன் வெகு இலகுவாக பாடலிலே புகுத்தினார் என்று, நீங்களும் நானும் கற்றுக்கொள்ளவேண்டிய மிக தேவையான பாடம் இது! அடுத்த முறை உங்கள் மனதிற்கு பிடிக்காத ஏதாவது நடந் தால், யாரை குறை கூறலாம் என்று ஆள் தேடாதீர்கள் .... யாரும் தவறே கூட செய்திருந்தாலும்...அதிலும் குறிப்பாக உங்கள் குடும்பத்தில் நடக் கும் வருத்தமான சம்பவங்களுக்கு யாரையும் பழி சொல்லாதீர்கள்....
நினைத்திருந்தால் இராமன் யாரையாவது பழி சொல்லி இருக்க லாம்...அப்படி செய்யவில்லை....அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை
விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா
பறவைகளே பதில் சொல்லுங்கள்
மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள்
மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள்
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
ஆண்டவன் அறிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சம் இல்லை
அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை
மனிதனம்மா மயங்குகிறேன்
தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே
தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே
நல்லவர்க்கெல்லாம்...
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
அதுதான் உள்ளத்தின் காட்சியம்மா
அதுதான் உண்மைக்கு சாட்சியம்மா
படம் - தியாகம்
இசை : இளையராஜா
பாடியவர் - T.M.சௌந்தர்ராஜன்
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...