சனி, 22 செப்டம்பர், 2018

பாட்டும் பதமும் 80 "சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு" பேசாலைதாஸ்


"சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு" பேசாலைதாஸ்
சொல்லுக்குள் சுகம் வைப்பவன் என் ஆசான் கண்ணதாசன். அவனை மிஞ்ச யார் இருக்கின்றார்? இசையும் இசைக்கு அவன் தரும் சொற் சிலம்பும் போதும் வாழ்வில் இரசித்துக்கொண்டே இருக்கலாம். நான் அடிக்கடி கேட்கும் பாடல் இது.இந்த பாடால் எனது கிராமத்து மீனவர்களு க்கு ரெம்ப பிடிக்கும். இதில்தான் நிறைய வலைகள் இருக்கின்றதே! கரவலை. விடுவலை, சுருக்குவலை, பாய்ச்சுவலை,களங்கட்டிவலை, கன்னிவலை, இப்படிப்பட்ட ஏகப்பட்ட வலைகள்! இந்த வலைகள் எல் லாம் கடல் வலைகள் ஆனால் காதல்வளைகள் வேறு. சின்னவளை முகம் சிவந்தவளை, என்னவளை காதல் சொன்னவளை, வந்தவளை கரம் தந்தவளை,பொங்குவளை கண்கள் கொண்டவளை, தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை, மொழி படித்தவளை என்று காடலுக்குள் எத்தனை வலைகள், காதலுக்குள் வளைகளும் உண்டு, வலிகளும் உண்டு. இந்த பாடல் இடம் பெற்ற படம் புதிய பூமி, இசை விஸ்வநாதன், பாடல் ஆசிரியர்  என் ஆசான் கண்ணதாசன், இனி பாடலைகேட்டு இரசியுங்கள்!


"சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு
பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு

தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
(வந்தவளை..)

வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்
மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ
(வந்தவளை..)

படம்: புதிய பூமி
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: TM சௌந்தராஜன், P சுசீலா
பாடலாசிரியர்: கண்ணதாசன்

திங்கள், 17 செப்டம்பர், 2018

பாட்டும் பதமும் 79 " நிலாவே வா! செல்லாதே வா " பேசாலைதாஸ்


"  நிலாவே வா! செல்லாதே வா "    பேசாலைதாஸ்
1986 இல் வெளிவந்த மணிரத்தினத்தின் மெளன ராகம் திரைப்படத்தில் வெளிவந்த பாடல் இது. பாடல் ஆசிரியர் வாலி, வாலியின் பாடல் என்றாலே காம இரசனை சொட்டும், ஆனால் இந்த பாடலில், மென்மையான, மனதை வருடும், மெல்லிய சோகம் கலந்த வரிகள், மனதை மெல்ல வருடுகின்றது. காதல் என்றாலே, இருத்தல், இரங்கல், ஏங்கள், தவித்தல், பிரிதல் என்ற ஐவகை நிலத்துக்கே உரிய தன்மை இருக்கத்தான் செய்யும், அதில் பிரிதலால் வ்ரும் ஏக்கம் தவிப்பு இவை ஏனோ மனதுக்குள் இனம் புரியா சோகத்தை விதைத்தாலும், அந்த சோகத்துக்குள்ளும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கின்றது. காவேரியா, கானல் நீரா பெண்மை! முள்வேலியா இல்லை முல்லைப்பூவா நீ சொல்லு! என்பதாக வரும் பாடல் வரிகள் அருமை! பூந்தேனே நீ சொல்லில் ஏன் வைத்தாய் முள்ளை? என்ற வினாப்போல வரும் பாடல் வரிகள்,, அதை கேட்கும் போது  மனதுக்குள்ளே எங்கோ ஓர் இடத்தில் வலிக்கின்றது! நான் இரசித்த பாடலை நீங்களும் இரசித்து கேளுங்கள்  அன்புடன் பேசாலைதாஸ்

நிலாவே வா செல்லாதே வா 
எந்நாளும் உன் பொன்வானம் நான் 
எனை நீதான் பிரிந்தாலும் 
நினைவாலே அணைத்தேனே 

நிலாவே வா செல்லாதே வா 

காவேரியா கானல் நீரா பெண்ணே என்ன உண்மை 
முள்வேலியா முல்லைப்பூவா சொல்லு கொஞ்சம் நில்லு 
ஆம்மாடியோ நீதான் இன்னும் சிறு பிள்ளை 
தாங்காதம்மா நெஞ்சம் நீயும் சொன்ன சொல்லை 
பூந்தேனே நீதானே சொல்லில் வைத்தாய் முள்ளை 

நிலாவே வா செல்லாதே வா 

பூஞ்சோலையில் வாடைக் காற்றும் வாட சந்தம் பாட 
கூடாதென்று கூறும் பூவும் ஏது மண்ணின் மீது 
ஒரே ஒரு பார்வை தந்தாள் என்ன தேனே 
ஒரே ஒரு வார்த்தை சொன்னால் என்ன மானே 
அகாயம் தாங்காத மேகம் ஏது கண்ணனே 

நிலாவே வா செல்லாதே வா 
எந்நாளும் உன் பொன்வானம் நான் 
எனை நீதான் பிரிந்தாலும் 
நினைவாலே அணைத்தேனே 

நிலாவே வா செல்லாதே வா 
எந்நாளும் உன் பொன்வானம் நான்...

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...