புதன், 20 ஏப்ரல், 2022

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன்

பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM

படம்:‘தூறல் நின்னு போச்சு’ (1982)

ராகம்-  ஏரிக்கரை பூங்காற்றே-    சங்கராபரணம்            “

 என் சோக கதைய கேளு- தேநுகா

பாடலாசிரியர்- ‘என் சோக ‘-கங்கை அமரன்

‘ஏரிக்கரை’-சிதம்பரநாதன்

தன்னை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை, எந்த இடையூறும் இல்லாமல், சுமுகமாக தன்னை ஏற்று கொள்ள வேண்டும் என்று சுலக்ஷணா வினாயகரிடம் வேண்டுவது " சிம்பாலிக்' ஷாட்( symbolic shot) . ஏனென்றால், அது சுலக்ஷணாவின்.அறிமுக காட்சி. வினாயகரும் அவரை ஆசீர்வதித்தார்.

இந்த இரு பாடல்களையும் ஒன்றாக பதிவு செய்வதற்கு காரணம் உண்டு. இரண்டுமே, கதாநாயகனின் காதல் , அதில் அவனுடைய ஏக்கம், நம்பிக்கை,ஆதங்கம் , ஏமாற்றம் ஆகியவற்றை இரு பாடல்களும் வெளிப்படுத்தும். காட்சி அமைப்பு வேறுபட்டாலும், பாடும் தோரணையில் வித்யாசம் இருந்தாலும், கரு ஒன்றே.

“ஏரிக்கரை பூங்காற்றே” பாடலை பற்றி (பாடியவர்- கே. ஜே. ஏசுதாஸ்)

ஏரிக்கரை பூங்காற்றே பாடலை ஏசுதாஸ் அவர்கள் பாடும் பொழுது, தனது வழக்கமான பாணியிலிருந்து மாறு பட்டு பாடுவார்- கிராம நெடியுடன்!. 

பாடல் இறுதியில் பாடுவது யார்? நான் நம்பியார் என்றே நினைத்தேன். ஆனால், அவருடைய பெயர் LP ரெக்காற்டில் இல்லை. அப்படி என்றால் அது ஏசுதாஸ் அவர்கள் குரலா? 

இப்பாடலை எழுதிய  சிதம்பரநாதனுக்கு விருது வழங்கப்பட்டது ( மாநில விருது).

"பாத மலர் நோகுமுன்னு நடக்கும்

பாத வழி பூ விரிச்சேன் மயிலே

ஓடம் போல் ஆடுதே

மனசு"-நெகிழவைவைக்கும் வரிகள்

https://youtu.be/VSmf1oC6Apg

“என் சோக கதைய கேளு” .. பாடலை பற்றி (பாடியவர்- மலேஷியா வாசுதேவன் &கிருஷ்ணமூர்த்தி)

இந்த கலாட்டா பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார். கிண்டலும், சோகமும் கலந்து, மலேஷியா வாசுதேவன் கிருஷ்ணமூர்த்தியுடன் சக பாடகர் அடிக்கும் லூட்டி, பாக்யராஜும் , நம்பியார் நடிக்க வசதி செய்கிறது, சிரிப்பும் வரவழைக்கிறது. 

மிக முக்கியமாக, பட்டிதொட்டியெங்கும்,பாட்டுக்கச்சேரிகளிலும் மிகப்பெரிய ஹிட்டானது.

இப்பாடலில் மிருதங்கம் வாசிப்பது போல் நடிப்பவர் பிற்கால “கதாநாயகன்' பாண்டியராஜன்!

“மங்களத்த பெத்தவனே

உன் மனச மாத்திக்கடா”

https://youtu.be/59ZWTlLyL5I

BGM:

இளையராஜாவின் BGM இத்திரைப்படத்தில் அசத்தல்! அந்த வயிலின் பீஸ்! பின்னர் மிருதங்கம் உடன் நடை போட்டு கொண்டு போவது மங்கல(ள)த்தை செல்லமாக. அழைத்துப் போவது போன்று இருக்கும். ( இப்படத்தில் பாக்யராஜின் பெயர் செல்ல துறை. ,சுலக்ஷணாவின். பெயர் மங்களம்.)

https://youtu.be/jRz5CmUTw2c

Bottom Line:

நாற்பது வருடங்களுக்கு முன்பு, தமிழ் புத்தாண்டு அன்று திரையிடப்பட்டது. அமோக வெற்றி பெற்றது. இப்படத்தில் வேறு இரு சிறந்த பாடல்களுடன் , இப்படத்தின் " தங்கமான" தகவல்களுடன் அடுத்த பதிவுடன் உங்களை சந்திக்கிறேன். நன்றி!


ஞாயிறு, 23 ஜனவரி, 2022

மான் கண்ட சொர்க்கங்கள்….

 மான் கண்ட சொர்க்கங்கள்….


கே பாலச்சந்தர் இயக்கிய 47 நாட்கள் என்ற படத்தில் வந்த பாடல். இதே பெயரில் தொடர்கதையாக வெளியான சிவசங்கரியின் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். சிரஞ்சீவி இதில்தான் ஒரு எதிர் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். ஜெயப்ரதா கதாநாயகி.
இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்தான். ஆனால் அதில் ஒன்று காலத்தை வென்ற காவியமாகிவிட்டது. ஒரு காரணம் மெல்லிசைமன்னர் எம்எஸ்வி என்றால், இன்னொரு காரணம் கவிச் சக்கரவர்த்தி கண்ணதாசன்.
ஒவ்வொரு வரிகளும் மனதின் ஆழம்வரை ஊடுருவின. அத்தனை எளிமை, ஆனால் எக்கச்சக்க அர்த்தங்கள்… தமிழில் வெளியான மிக நீளமான பாடல்களில் ஒன்று இது. நான்கு சரணங்கள். ஆனால் சிவசங்கரி 47 வாரங்கள் தொடர்கதையாக எழுதியதை, கண்ணதாசன் அவர்கள் நான்கு சரணங்களுக்குள் சொல்லி முடித்திருப்பார்.
பாடலை தொடர்ச்சி்யாக காட்டாமல், ஒவ்வொரு சரணத்தையும் பொருத்தமான சூழலுக்கு பயன்படுத்தியிருப்பார் கேபி.
மான் கண்ட சொர்க்கங்கள்…
காலம் போகப்போக யாவும் வெட்கங்களே…
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே…
சென்னையில் கட்டுப்பெட்டித்தனமான மிடில்கிளாஸ் பெண்ணான நாயகி, கணவனை நம்பி பிரான்ஸுக்குப் போகிறாள். போன இடத்தில்தான் அவனது மன்மத லீலைகள் ஒவ்வொன்றாக முடிச்சவிழ்கின்றன.
அந்த சூழலை கவிஞர் வார்த்தெடுக்கும் விதம் பாருங்கள்….
…தாமரைப் பூவென்றான்
காகிதப் பூவானான்
ராமனைப் போல் வந்தான்
ராவணன் போலானான்
பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது
ஊருக்கு ஒரு உள்ளம்
ஊருக்கு ஒரு எண்ணம்
யாருக்கு அவன் சொந்தம்
யாருக்கு அவன் மஞ்சம்
கண்ணீரில் நீராட கடல் தாண்டி வந்தாளே பொன்மங்கை….
நம்ப வைத்து கழுத்தறுக்கும் கயமை குணம் கொண்ட கணவன் பற்றிய வர்ணனைகளை கவியரசர் சொற்களுக்குள் இப்படி சிறைப்பிடித்திருப்பார்…
…வேதங்கள் அறிகின்றான்
வேதனை தருகின்றான்
நல்லவன் செல்லாத பாதையில் செல்கின்றான்
அப்பாவி பெண்ணுள்ளம்
இப்பாவி செயல் கண்டு தள்ளாடுது
காலையில் ஓர் வண்ணம்
மாலையில் ஓர் வண்ணம்
மாறுது அவள் பாதை
வாடுகிறாள் பாவை
பூச்சூடி வந்தாளே புரியாமல் நின்றாளே இப்போது!
சோகம், விரக்தியின் உச்சம் என்னவென்பதை கீழ் வரும் வரிகள் படித்தால்… கேட்டால் புரிந்து கொள்ளலாம்.
“ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…” – எத்தனை கொடுமையை தன் கணவனிடம் அனுபவித்திருந்தால் ஒரு பெண் இப்படியெல்லாம் எண்ணுவாள்…
இந்தக் கேள்வியை, பாடலைக் கேட்பவர் ஒவ்வொருவர் மனதிலும் எழ வைத்திருப்பது கவிஞரின் வரிகளுக்கு மட்டுமே உள்ள வலிமை.
…ஆசையில் ஓர் நாளில்
பாடிய ஓர் பாட்டில்
தாயென ஆனோமே சேயினை தந்தோமே…
ஏன் இந்த சேய் என்று தாளாத நோய் கொண்டாள் இப்போது…
பாசத்தில் நீராடி
பந்தத்தில் போராடி
வேஷத்தைத் தொடர்வாளா
வேதனைப் பெறுவாளா
ஊரில்லை உறவில்லை
தனியாக நின்றாளே பூமாது!
எப்படியாவது அந்த கொடியவனிடமிருந்து தாய்நாட்டுக்கு தப்பித்துப் போய்விட வேண்டும்… ஆனால் போக வழி தெரியாது… இத்தனைநாள் வழிபட்ட கடவுளாவது காப்பாற்ற வரமாட்டாரா? – இதுதான் இயலாமையின் உச்ச கட்டம். அந்தக் கடைசி வரிகளை கேட்பவர் கண்ணோரங்கள் நிச்சயம் கசிந்துவிடும்… பாடலை அத்தனை பாவத்துடன் பாடியிருப்பார் எஸ்பிபி.
தன் வழி செல்கின்றாள்
சஞ்சலம் கொள்கின்றாள்
எவ்விடம் செல்வாளோ
எவ்விதம் செல்வாளோ
எங்கெங்கும் மேகங்கள் எங்கெங்கும் பனிமூட்டம் இப்போது
இந்தியத் தாய்நாட்டை எண்ணுகிறாள் மங்கை
சென்றிட வழியில்லை தேம்புகிறாள் நின்று
தாய்வீட்டு தெய்வங்கள் துணையாக வாராதோ இப்போது!
-இந்தப் பாடலை ஒவ்வொரு முறை கேட்டு முடிக்கும் போதும், பல வருடங்கள் பின்னோக்கி பயணித்துவிட்டு திரும்ப வந்த ஒரு உணர்வு. யாரோ நமக்கு நெருக்கமான உறவை சிக்கலிலிருந்து மீட்டுக் கொண்டு வந்துவிட்ட நிறைவு…!


ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...