செவ்வாய், 11 மே, 2021

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே,,,,,,,, பேசாலைதாஸ்


ஒரு பாடல் உருவாக பல சுவையான சம்பவம் உண்டு. அதிலும் கண்ணதாசன் அவர்கள் பாடலில் பின்புலம் நிறைய உண்டு .ஒரு சிறு பிணக்கு காரணமாய் , கண்ணதாசன் இதில் பாடல் எழுதவில்லை .

ஜி ராமநாதன் இசை . பாடல் கம்போசிங் நடக்கிறது . பாடல் எழுத பட்டுக்கோட்டையார் வந்திருக்கிறார். அவரிடம் ராமநாதன் வாசித்து காட்ட, பட்டுக்கோட்டை எழுந்து விடுகிறார். 'இதுக்கு கண்ணதாசன் ஒருவர் தான் எழுத முடியும்' என்று சொல்லிவிட்டு, பதில் எதிர்பாராமல் வெளியே போய்விடுகிறார். எல்லோருக்கும் சூழல் தெரியும். யார் போய் கண்ணதாசனிடம் சொல்லி கூட்டி வருவது ? 

ஒருவழியாக, 'ராமநாதன் காத்து இருக்கிறார் ,உங்களை கையோடு கூட்டி வரச்சொன்னார் ' என்று கண்ணதாசனை கூட்டி வந்தார்களாம். அவரும் எந்த கம்பெனி ? என்ற கேள்விக்கு, 'நீங்கள் கவிஞர் கண்ணதாசனாய் இங்கே வந்து இருக்கிறீர்கள் ' என்று சொல்லி மாடிக்கு கூட்டி வந்தார்கள். டைரக்டர், இசை அமைப்பாளர் என்று எல்லோரும் காத்திருக்க, ராமநாதனுக்கு வணக்கம் சொல்லி, சந்தங்களை கேட்டாராம். 

ஐந்து நிமிடத்திற்குள் பாட்டு தயார். நம்பமுடிகிறதா ? சரஸ்வதி அருகிலே இருக்க, கவலை எதற்கு ?"கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே " இதுதான் பாடல் (இதில் ஒரு வரி வரும் -பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே, பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே - இதுவும் பானுமதி மாறி வரும் வானகத்து மீதே - என்ற வரிகள் பற்றி பின்னால் விவரமாய் பேசலாம்/பேசுவோம் )

பாடலை எடுத்துக்கொண்டு பக்கத்துக்கு அறையில் இருக்கும் ALS  அவர்களிடம் காட்டுகிறார்கள். உடனே ஒரு பிளாங் செக்  எழுதி எடுத்து வருகிறார். கண்ணதாசனும் கைநீட்டி வாங்கவில்லை . ராமநாதன் தான் வாங்கி அவரிடம் கொடுத்தாராம். எல்லோருக்கும் ஒரு வந்தனம் சொல்லிவிட்டு கண்ணதாசன் கிளம்பி விட்டார். 

இந்த படத்தில் கண்ணதாசன்  எழுதிய ஒரு ஒரு பாடல் இதுதான். மற்றைய பாடல்களும் அருமையானவை ,

நான் தேடி தேடி ரசிப்பதன் காரணம், கண்ணதாசன் என்ற  மகா பெரிய கவிஞன் ஒரு குழந்தை போன்றவன். அவன் பாடல் பின்னே நிறைய சுவாரஸ்யமான சம்பவம் உண்டு . எந்த பொழுதிலும் பாடல் எழுத யோசித்ததாய் சொல்வார் இல்லை . ரசிப்போம்  மகிழ்வோம் அன்புடன் பேசாலைதாஸ்

கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ கன்னி இளமானே


கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ கன்னி இளமானே

வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே

வண்ண முக வெண்ணிலவில் கன்னி இளமானே

வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே

வண்டு வந்ததெப்படியோ கன்னி இளமானே


கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ கன்னி இளமானே


அன்ன நடை பின்னுவதேன் 

கன்னி இளமானே... ஆ... ஆ... ஆ... ஆ... 


அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளமானே

யார் விழிகள் பட்டனவோ கன்னி இளமானே

சின்ன இடை மின்னலெல்லாம் 

கன்னி இளமானே

தென்றல் தந்த சீதனமோ கன்னி இளமானே


கார்கு ழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே

காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே

கார் குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளமானே

காளையரை கட்டுதற்கோ கன்னி இளமானே

பார்வையிலே நோய் கொடுத்தாய் 

கன்னி இளமானே

பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே


பல் வரிசை முல்லை என்றால் 

கன்னி இளமானே... ஏ... ஏ... ஏ... ஆ...


பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளமானே

பாடும் வண்டாய் நான் வரவா கன்னி இளமானே

பானுமதி மாறி வரும் வானகத்து மீனே

பார்க்க உன்னை தேடுதடி கன்னி இளமானே


கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே

காவியமோ ஓவியமோ கன்னி இளமானே



திங்கள், 10 மே, 2021

உலவும் தென்றல் காற்றினிலே...

 உலவும் தென்றல் காற்றினிலே...

🌹சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?,
🌹வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா,
🌹பணம் பந்தியிலே குணம் குப்பையிலே…,
🌹வானில் முழுமதியைக் கண்டேன்… வனத்திலொரு பெண்ணைக் கண்டேன்,
🌹நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்,
🌹ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே,
🌹ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப்போகுமா?,
🌹அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை,
🌹பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமா,
🌹 உலவும் தென்றல் காற்றினிலே, போன்ற பல பாடல்கள் இன்னும் ரசிகர்களின் இதயங்களை விட்டு நீங்கவில்லை.
“ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே... என்ற முதலாளி திரைப்படத்தில் வரும் பாடலை கிராமப்புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு அவர்கள் அந்தப் பாடலிலே ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக்கொண்டு நடப்பதைக் கண்டு பூரிப்படைகிறது
இலக்கியத்துக்கு நிகராகத் திரைப்படப் பாடல்களும்கூட நிலைத்து நிற்கமுடியும் என்பதற்கு அண்ணன் கா.மு.ஷெரீப் எழுதிய பல பாடல்களை எடுத்துக்காட்டலாம்.” என்று புகழாரம் சூட்டினார் மு.கருணாநிதி.
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் குன்னாகம் என்ற ஊரிலுள்ள தேநீர்க் கடையொன்றில் தேநீர் அருந்திக்கொண்டிருந்தான் ஒரு இளைஞன். அப்போது அங்கிருந்த வானொலிப் பெட்டியில் ‘அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை, அவர் அடிதொழ மறுப்பவர் மனிதரில்லை’ என்ற கவியின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அதைக் கேட்ட அந்த இளைஞன் உணர்ச்சி வயப்பட்டு “கெட்டவருடன் சேர்ந்து பெற்ற தாயின் மனதை நோகடித்தவன் நான்;
நன்றி கெட்டவன்” என்று குமுறி அழுதிருக்கிறார்.
“இப்படி திடீரென்று தேநீர்க் கடையில்தான் உன் தவறு புரிந்ததா? “ என அவனிடம் கடைக்காரர் கேட்டபோது அதற்கு அவன்,
“ஆமாம், இந்தப் பாடல் என் மனத்தை மாற்றிவிட்டது. இனி என் தாயை உயிரினும் மேலாகக் கொண்டாடிக் காப்பாற்றுவேன். உங்களுக்கு என் நன்றி” என்று கூற, அதற்கு அந்தக் கடைக்காரர்,
“உன் நன்றிக்கு உரியவர் தமிழ் முழக்கம் கா. மு. ஷெரிப். அவர்தான் இந்தப் பாடலை எழுதியவர்” என்றாராம்.
சிலோன் விஜயேந்திரன் எழுதியுள்ள ‘அறுபதாண்டு காலத் திரைப்பாடல்கள்’ என்ற நூலில் இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.
“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும்; ரசிகனை அவன் புள்ள மாதிரி நேசிச்சு எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுங்கிற பொறுப்புணர்வோட எழுதணும்” என்றார் அவர்.
அவர் சொன்னதற்கேற்ப இந்தச் சம்பவமும் நடந்திருக்கிறது. இந்தப் பாடல் ‘அன்னையின் ஆணை’ படத்தில் இடம் பெற்றது.
பாடலாசிரியராக புகழ்பெற்ற அதேசமயம் அவர் பெண் தெய்வம், புது யுகம் படங்களுக்கான வசனத்தையும் எழுதினார்.
கா.மு. ஷெரீப் தனக்கென ஒரு கொள்கை வகுத்திருந்தார். “அழைத்தால் வருவோம், வாய்ப்பு கொடுத்தால் பாடுவோம், யாரையும் சார்ந்து வாழ மாட்டோம், யாரிடமும் எதையும் கேட்க மாட்டோம்” என்ற கொள்கைப்படியே வாழ்ந்த அவர்
1994-ஆம் ஆண்டு ஜூலை 7-ம் தேதி காலமானார். தமிழ்த் திரையிசையும், தமிழ்கூறு நல்லுலகும் கவி கா.மு.வை என்றென்றும் மறக்காது.

ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...