சினிமா பாடலை, பைந்தமிழ் கலந்து சுவைக்க வைக்கும் இசைபூங்காவின் வலைத்தளம்! மேலதிகமாக வாசிக்க https://pesalaithas.com என்ற இனையத்தளத்தையும் பார்வையிடலாம் அன்புடன் பேசாலைதாஸ்
தமிழ் சினிமா பாடல்களில் தமிழ் இலக்கியம் தனது ஆளுமையை பதித்துள்ளது என்பதற்கு என் சுவாசக்காற்றே என்ற படத்தில் வரும் மெய்தீண்டா என்ற பாடல் தக்கதோர் உதாரணமா கும், கவிஞர் வைரமுத்து சங்க்ககால இலக்கிய பாடலை அப்படியே பாடலில் புகுத்தியுள்ளதை இங்க்கு வாம் சற்று அவதானிப்போம்
சங்ககால தமிழ் உலகத்தில் ஆண்புலவர்கள் இருந்தது போலவே பெண்புல வர்களும் இருந்துள்ளார்கள், அவர்களிள் வெள்ளி வீதியார் என்ற பெண் புலவரும் உண்டு. ஒளவையார், காக்கைப்பாடினியார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தை, பாரி மகளிர் போன்ற இருபத்தியைந்து பெண்பாற் புலவ ர்கள் வாழ்ந்துள்ளார்கள்!
இவர்களில் வெள்ளி வீதியார் என்ற பெண்புலவர், ஒரு சாதாரண ஆண் மகனை காதலித்தாள், அவன் மீது காதல்வசப் பட்டாள், ஆனால் அவ்த ஆடவனோ வெள்ளி வீதியாரின் புலமை கண்டு, தாழ்வெண்ணம் கொண்டு, அவளை விட்டு விலகிச்செல்கின் றான். காதலின் பிரிவாற்றாமையால் துவண்ட காதல் தலைவி தன் தோழிக்கு சொல்லும் கவிதை இது!
கன்றும் உண்ணாது, கலத்தினும் படாதுநல் ஆன் தீம் பால், நிலத்து உக்கா அங்குஎனக்கும் ஆகாது, என் ஐக்கும் உதவாதுபசலை உணீஇயர் வேண்டும்திதலை அல்குல், என் மாமைக் கவினே- வெள்ளி வீதியார், குறுந்தொகை-27, பாலைத் திணை
இந்த செய்யுளின் எளிமையான
விளக்கம் இதுதான்! நல்ல பசும் பாலை ஒன்றில் கன்று குடிக்கவேண்டும், இல்லையேல் கலயத் தில் கறக்கணும், இரண்டும் இல்லாமல் பசும் பால் நிலத்தில் வீணே கறக்கின்றதே! அதுபோல எனக்கும் உதவாமல், என் அவருக்கும் உதவா மல், என் மாந்தளிர் மேனியும், வரிவிழுந்த என் இடைத்தசையும், வீணே மண்ணில் அழிந்து பசலையாவதோ!
அதாவது ஏன் காதலன் தீண்டாமல், மண் தீண்ட போகிறதே! என்று வெள்ளி வீதியார் காமம் கொப்பளிக்க பாடுகின்றார்.
பொதுவாக ஆண் புலவர்கள் தான் காமக் கொப்பளிக்க கவிதை பாடுவார்கள் ஆனால் இவ்த வெள்ளி வீதியாரோ துணிவாக பெண்களுக்கே உரித் தான காம் வேட்கையை தைரியமாக பாடுகின் றார். பொதுவாக, ஆண் கவிஞர்கள் வர்ணனை கள் பாடுவதுண்டு! பெண்களின் உறுப்புகளை வர்ணிப்பதுண்டு!
ஆனால் பெண்கள்? வெளிப்படையாக காமம் பற்றிப் பாடியதில்லை!அதிலும் உறுப்ப் பைக் காட்டி எல்லாம் பெண்கள் பாடியதே இல்லை! வெள்ளிவீதியார் என்னும் இந்தப் பெண் மட்டுமே இத்தனை "துணிவு"! தோழி கோதை என்னும் ஆண்டாளுக்கு முன்னோடி!சங்க்க கால தமிழன் பெண்களின் சுதந்திரத்தை மதித்தான் ஆனால் இன்று வாழும் தமிழனோ பெண்களின் உரிமைகளை உணர்வுகளை குழி டோண்டி புதைக்கின்றான்.
இவ்த பாடலைத்தான் வரமுத்து அவர்கள் பிரதி பண்ணி என் மெய் தீண்டா என்று எழுதியுள்ளார். அதைச் சித்ரா, மிக்க விரகத்தோடு, மிக இனிமையாகப் பாடுகிறார்! ஏக்கம் தொனிக்கும் எழில் தமிழ்! ரஹ்மானின் இசையில், பல இசைக் கருவிகள் பின்னணியில் வண்ண ஜாலம் காட்டுகின்றன! இதோ பாடலை நீங்களும் கேளுங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்