சனி, 29 டிசம்பர், 2018
பாட்டும் பதமும் 90 "ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்,,,,," பேசாலைதாஸ்
"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்,,,,," பேசாலைதாஸ்
வாழ்க்கை வாழ்வதற்கே! அதுவும் இவ்வுலகத்தில் வாழ்வது ஒருமுறை மட்டுமே! யாவும் கடந்து போகும், வாழ்வின் ஒவ்வொரு கணமும் கடந்து சென்று கொண்டிருக்கின்றது, வாழ்வில் மனமகிழ்ச்சியாக, சமாதானமாக அமைதில், வாழ்வதற்கே இறைவன் நம்மை படைத்திருக்கின்றான், மனிதர்களும் அப்படியே வாழ்வின் மகிழ்ச்சிக்காக வாழ்வின் தேடலோடு நாள் தோரும் அழைகி ன்றான், இருக்கின்ற கணத்தில் ,இருப்பதைக்கொண்டு, நமக்கு கிடை த்தை கொண்டு மகிழ்ச்சி அடையாமல், மகிழ்ச்சியை தேடிக்கொண்டி ருக்கி ன்றோம்.
நாம் வாழும் வாழ்க்கை கூட, பலகோடி மக்களுக்கு கிடைப்பதில்லை, அதை எண்ணிப்பார்த்தாலே வாழ்வில் திருப்தியும், கடவுளுக்கு நன்றியும் சொல்லத்தோன்றும், நம்மில் பலர் அப்படி நடந்துகொள்வதாய் இல்லை, மகிழ்ச்சிக்கான தேடலில், வாழ் வில் கடந்து வந்த ஆண்டுகளை திரும்பி பார்க்கையில், வேதனையும் துன்பமும், கனவுகளும், ஏக்கங்களுமே நிறைந்திருக்கும். எனவே இன்றே இப்பொழுதே கிடைத்ததைக்கொண்டு வாழ்வில் திருப்தியுடன் மகிழ்ச்சி யாக வாழுவோம் என்ற தீர்மானத்தோடு, கடந்து போகும் வருடத்துக்கு விடை கொடுத்து, புதிய ஆண்டை மகிழ்ச்சியோடு எதிர்கொள்வோம்,
ஒவ்வொரு வருடத்திலும் ஆண்டின் கடைசி நாட்களில் இந்த பாடல் என் மனதில் வந்து போகும்! தேன் தமிழ் ஓசை வானொலியில் பணிபுரிந்த அந்தகாலங்களில், இந்த நாளிலே இந்த பாடலை வானொலி நேயர்களுக்காக காற்றலையில் தவழவிடு வேன்,,, இப்போது இணையத்தில் மீண்டும் ஒரு முறை,,, என்னோடு இணைந்து பாடலை இரசியுங்கள்! அன்பின் பேசாலைதாஸ்
ஞாயிறு, 23 டிசம்பர், 2018
பாட்டும் பதமும் 89 "திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்" பேசாலைதாஸ்
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா, திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்" பேசாலைதாஸ்
நான் முருக பக்தனல்ல, ஆனாலும் இந்து கலாச்சாரங்கள் பற்றிய மேல திக வகுப்புகளுக்கு நான் உயர்தர கல்வி பயி லும் போது செல்வதுண்டு, யாழ்ப்பாணதில் கனகரத்தினம் மகாவித்தியலயம் என்ற சைவ கல்லூரியில் கற்றதினால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது, திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் என்ற பாடல் பக்தி உட்சாகத்தை தரக்கூடிய பாடல், அந்த பாடலை எழுதியவர் என் கவி ஆசான் கண்ணதாசன் என்றுதான் நினைத்திருந்தேன், அந்த பாடலை எழுதியவர் பூவை செங்குட்டுவன் என்ற விடயம் எனக்கு பின்னரே தெரியவந்தது, அதிலும் இந்த பாடல் வரிகளை இயக்குணர் அவர்கள் கண்ணதாச னிடம் காட்டி, இது போன்ற ஒரு பாடலை எழுதும் படி கேட்டாராம்,
முழுபாடலையும் கேட்ட கண்ணதாசன், “இதுவே ரொம்ப நல்லா இருக்கு. அதுல“ சென்னையிலே கந்தகோட்டம் உண்டு” என்ற வரியை மட்டும் “சிறப்புடனே கந்தகோட்டம் உண்டு “என்று மாற்றிக் கொள்ளுங்கள்“ என்று அந்தபாடலை ,அந்தபாடல் ஆசிரியர் பெயரிலேயே வெளியிட செய்தார். பூவை செங்குட்டுவன் என்றஅந்த பாடல் ஆசிரியரின் திரையுலக பிரவேசத்திற்கு கதவுகளை திறந்துவிட்டார் கண்ணதாசன், கண்ணதாசன் புதுசாக யாரும் திரை உலகத்தில் பாட்டு எழுத வந்தால் அதனை அவர் போட்டியாக கருதுவதில்லை, அவர்களை தட்டிக்கொடுத்து வளர்த்தெடுப்பதில் கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசனே! திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா என்ற பாடலை கேட்கும் போதெல்லாம் கண்ணதாசன் என் மனத்திரையில் சிரிப்பது போல ஒரு பிரமை, இசை ரசிகன் பேசாலைதாஸ்
மேலதிகமாக வாசிக்க https://pesalaithas.com என்ற இனையத்தளத்தையும் பார்வையிடலாம் அன்புடன் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...