திங்கள், 8 ஜூலை, 2019
பாட்டும் பதமும் 102 "ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்" பேசாலைதாஸ்
"ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்" பேசாலைதாஸ்
என்னடா திடீரென்று சிவ பஜனையில் இறங்கிவிட்டான் பேசாலைதாஸ் என நினைக்கின்றீர்களா? என் மனது க்குள் ரீங்கார விஸ்வரூபம் எடுத்த பாடல் இது! மந்திர உச்சாடனம் போல, ஏதோ மோன நிலைக்கு இட்டுச்செல்வது போல இந்த பாடலை கேட்கும் போது எனக்கு ஏற்படுவதுண்டு. இந்த பாடல் இடம் பெற்ற படம் " நான் கடவுள்" என்ற படமும் என்னை பிரமிக்கவைத்தது கமலின் ஹேராம் எதையோ சொல்லதுடிப்பது போல, இந்த படம் கடவுள் கோட்பா ட்டை கேள்விக்குறி ஆக்கிவிடும் போல தோன்றுகின்றது.
நான் கடவுள், 2009ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். பாலா இயக்கத்தில் ஆர்யா, பூஜா உள்ளிட் டோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்களை எழுதி யுள்ளார். அவரது ஏழாவது உலகம் எனும் புதினத்தைத் தழுவி திரைக் கதை பின்னப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைத்துள்ளார்.
படத்தில் ஒரு பக்கம் பாலாவும், மறுபக்கம் இசைஞானி இளையராஜாவும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார்கள். ஒரு காட்சியை பாலா என்ன நினைத்து உருவாக்கினாரோ, அந்த எண்ண த்தை தன் இசையால் அந்தக் காட்சிக்குக் கொடுத்திருக்கிறார் இளைய ராஜா. சிவோஹம்..., பிச்சைப் பாத்திரம்... பாடல்கள் கையாளப்பட்டிரு க்கும் விதம், ஒரு தமிழனாய் நம் கலைஞர்களை எண்ணி பெருமைப்பட வைக்கிறது. அந்நிய விருதுகள் கொடுத்துதான் இளையராஜா என்ற இந்த மகா கலைஞனை மகத்துவப்படுத்த வேண்டுமென்பதில்லை... யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இந்த தேசத்தின் ஒப்பற்ற கோஹினூர் வைரம் நமது இசைஞானி. நாம் ரசித்து, நாம் கேட்டு மகிழ் ந்த அவரது பாடல்களுக்கும் இசைக்கும் நாமே கொடுப்போம் அப்படி யொரு உயர்ந்த விருதினை! நீங்களும் இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்! அன்புடன் பேசாலைதாஸ்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
ஏரிக்கரை பூங்காற்றே "
251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...
-
கரகரப்பிரியா ராகத்தில் சினிமா பாடல் பேசாலைதாஸ் கரகரப்பிரியா ராகம் பற்றி எந்து இசைத்தேடலை உங்களுக்காக பகிர்கின்றேன். கேட்போரை உருக வைக்க...
-
" விழியில் விழுந்து, இதயம் நுழைந்து, உயிரில் கலந்த உறவே" பேசாலைதாஸ் இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் அலை...
-
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக்காட்டினிலே! பேசாலைதாஸ் செந்த தமிழ் தேன் மொழியாள், நிலாவென சிரிக்க...