சனி, 31 மார்ச், 2018

பாட்டும் பதமும் 42 மனிதன் நினைப்பதுண்டு

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்கும் என்று,,,  பேசாலைதாஸ்

                                              கவிஞர் கண்ணதாசனின் தத்துவப்பாடல், அதுவும் விதி பற்றி நிறைய விடயங்களை தனது பாடல் வழியாக நிறைய சொல்லி இருக்கின்றார். அவை அத்தனையும் வாழ்வியலில் ஒரு சாதா ரண மனிதனுக்கு பொருந்த கூடியது அதனால் தான் அவரது பாடல் மிக எளிதாக மக்களால் விரும்பபடுகின்றது. விதி பற்றி எனது நிலாமதி வலைதளத்தில் பல கதைகள் எழுதியுள்ளேன். அதில் இந்த கதையும் ஒன்று. 

                                               விதியை மதியால் வெல்லமுடியும் என்பார் சிலர், இல்லை வாழ்கை என்பது அவரவர் விதிப்படி அமைகின்றது என்பார் பலர். வாழ்க்கை விதித்த விதிப்படிதான் போகின்றது என்றால் மனிதனு க்கு அறிவுரைகள், ஆலையம் ஏன்? மதங்கள் எதற்காக? என்பது எனது கேள்வி! வாழ்க்கை விதிப்படி நகர்கின்றதா அல்லது நமது சொந்த அறி வில் மதியில் அசைகின்றதா என்பதை என்னால் சரிவரி சொல்ல முடி யாது. எனக்கும் அதில் பலத்த சந்தேகம் உண்டு. எனக்குள்ள சந்தேகத்தை ப்போலவே அன்று அலி என்ற ஒரு இஸ்லாமிய நண்பருக்கும் ஏற்பட்டது. அவர் நேரடியாக நபிகள் நாயகத்திடம் கேட்டார். 

                                                      நபிகள் அவர்களே! மனித வாழ்க்கை மதிப்படி அமைகின்றதா அல்லது விதிப்படி நகர்கின்றதா? இதற்கு விளக்கம் சொல்ல முடியுமா? என்று கேட்டார். அதற்கு நபிகள், நான் விடை சொல்வ தற்கு முன்னர் ஐந்து நிமிடம் எனக்கு முன்னால் நீ ஒற்றைக்காலில் நிற்க முடியுமா என்று கேட்க, அலியோ சட்டென்று தனது இடது காலை தூக்கி, வலது காலில் நின்றார். பின்னர் ஐந்து நிமிடம் கழிந்த பின்னர், நபிகள் அவனிடம் இப்போது உனது மற்றக்காலையும் தூக்கிக்கொண்டு நில் என்றார். அதற்கு அலி, நபிகள் நாயகமே என்ன உளறுகின்றீர்கள் எப்படி நான் மற்றக்காலையும் தூக்குவது? நான் ஏற்கனவே ஒரு காலில் நிற்கின் றேன். என்னால் மற்றக்காலையும் தூக்கமுடியாது, அது இயலவே இயலாது என்றான். 

                                                       அதற்கு நாயகம் நபிகள் சொன்னார், இப்போது புரிகின்றதா? நான் முதலில் சொன்னபோது நீ உன் சொந்த மதியின் படி  இடது காலை தூக்கி வலது காலில் நின்றாய், இப்போது உன்னால் வலது காலை உன்னால் தூக்கமுடியாது இதுதான் விதி. வாழ்வில் நாம் செயல்ப டுவதற்க்கு மதிதான் துணைபோகின்றது பின்னர் நாம் செய்த செயலின் விளைவுகளை அனுபவித்தாக வேண்டியுள்ளது அதுவே விதியாகின்றது. விதி மதி இது இரண்டும் ஒன்றில் ஒன்று தங்கி இருப்பதால் இந்த இரண் டையும் நம்மால் ஒதுக்கிவிடமுடியாது. எனவே நாம் நமது கடமையை செய்வோம் மிகுதி விதியின் வசம்! விதியின் ரதங்களில் ஏறிப்பயணம் செய்தால் அந்த மதியும் கலங்குதடா! சிறு மனமும் மயங்குதடா! காட்டு மனம் இருந்தால் கவலை வளரும்,  மனக்கூட்டை திறந்துவிட்டால் கவலைகள் குருவி போல பறந்துவிடும். என்ன அருமையான விளக்கம்! அவந்தான் மனிதன் படத்தில் வரும் இப்பாடலை சிவாஜியின் நடிப்போடு இணைத்துப்பாருங்கள் அன்புடன் பேசாலைதாஸ்




ஏரிக்கரை பூங்காற்றே "

 251 இன்றியமையாத இளையராஜா பாடல்கள்- ஒரு கவுண்டவுன் பாடல்:"ஏரிக்கரை பூங்காற்றே "+“என் சோக கதைய கேளு” + BGM படம்:‘தூறல் நின்னு போச்ச...